`இதயம் உடைகிறது!' - கன்னியாஸ்திரி பாலியல் வழக்கு தீர்ப்பால் கொதிக்கும் மக்கள்; என்ன நடந்தது?

0

கன்னியாஸ்திரி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக பிஷப் பிராங்கோ முல்லக்கல் மீது தொடரப்பட்ட வழக்கில் கடந்த 14-ம் தேதி தீர்ப்பு வெளியானது. இந்த வழக்கில் பிஷப் விடுவிக்கப்படுவதாக கோட்டயம் கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ஜி.கோபகுமார் தீர்ப்பு வழங்கினார். பிஷப் மீதான குற்றத்தை நிரூபிப்பதில் அரசு தரப்பு தோற்றுவிட்டதாக நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியிருந்தார். இந்தத் தீர்ப்பு, பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிக்கு மட்டுமல்ல, அவருக்கு ஆதரவாகத் தெருவில் இறங்கிப் போராட்டம் நடத்திய சபையைச் சேர்ந்தவர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கின் தீர்ப்பு கேரளத்தில் பெரும் விவாதமாக மாறியுள்ளது. அந்த வழக்கு, தீர்ப்பு, அதன் பின்னர் நடந்த நிகழ்வுகள் இங்கே...

நடிகைகள் ஷேர் செய்த கன்னியாஸ்த்ரீ போராட்ட புகைப்படம்

Also Read: கன்னியாஸ்த்ரீ பாலியல் வன்கொடுமை வழக்கு; குற்றத்தை நிரூபிக்கத் தவறிய அரசு - விடுவிக்கப்பட்டார் பிஷப்!

கோட்டயம் குருவிலங்காடு மடத்தில் பார்வையாளராகச் சென்ற ஜலந்தர் பிஷப் பிராங்கோ முல்லக்கல், கன்னியாஸ்திரி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக 2018-ம் ஆண்டு புகார் எழுந்தது. 2014 முதல் 2016 வரை, தான் 13 முறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி தெரிவித்திருந்தார். இந்தக் குற்றச்சாட்டு பூதாகரமாக வெடித்ததால் சீரோ மலபார் சபையின் உயர்ந்த பீடத்தில் இருந்தவர்கள் கலக்கம் அடைந்தனர். ஆரம்பத்தில் பிஷப் பிராங்கோ முல்லக்கல் மீது நடவடிக்கை எடுக்க சபை தயங்கியது. சக கன்னியாஸ்திரிகள் போராட்டங்களை முன்னெடுத்ததால் சபை வேறு வழியின்றி இறங்கிவந்தது. மேலும் போலீஸார் வழக்குப் பதிவு செய்ய, 2018 செப்டம்பர் 21-ம் தேதி பிஷப் பிராங்கோ முல்லக்கல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

பின்னர் ஜாமினில் வெளியே வந்த பிஷப் பிராங்கோ முல்லக்கல் வழக்கு விசாரணையை எதிர்கொண்டார். நூற்றுக்கும் மேற்பட்ட கன்னியாஸ்திரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரியிடம் ரகசிய விசாரணை நடத்தப்பட்டது.

இந்த நிலையில், இவ்வழக்கின் தீர்ப்பில் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ள சில வரிகள், காவல்துறையின் பலவீனமான விசாரணை குறித்து சுட்டியுள்ளது. ``மடத்தில் 20-ம் எண் கொண்ட அறையில் வைத்து கன்னியாஸ்திரியை பாலியல் வன்கொடுமை செய்ததாகச் சொல்கிறார்கள். அப்போது, கன்னியாஸ்திரி எதிர்த்துப் போராடவும் செய்திருக்கிறார். அது பக்கத்து அறையில் இருந்தவர்களுக்குத் தெரியவில்லை என்பது முரணாக இருக்கிறது. கன்னியாஸ்திரி இருந்த அறைக்கு ஜன்னல்கள் உண்டு. ஆனால் பக்கத்து அறைகளில் யாரும் இல்லை என அரசு தரப்பால் நிரூபிக்க முடியவில்லை. கன்னியாஸ்திரியின் மொபைல் போன், லேப்டாப் ஆகியவற்றை வாங்கி போலீஸார் பரிசோதிக்கவில்லை. இது போலீஸாரின் தோல்வி'' என கோர்ட் விமர்சித்துள்ளது. இதற்கிடையே, ``இது எதிர்பார்க்காத தீர்ப்பு'' என அரசு வழக்கறிஞர் கருத்துத் தெரிவித்திருக்கிறார். மேலும் உயர் நீதிமன்றத்துக்கு அப்பீலுக்குச் செல்வதாகவும் அரசுத் தரப்பு அறிவித்துள்ளது.

பிஷப் பிராங்கோ முல்லக்கல்

தீர்ப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிஷப் பிராங்கோ முல்லக்கல், ``தெய்வத்தின் கோர்ட்டில் உள்ள தீர்ப்பு, பூமியில் உள்ள கோர்ட்டிலும் வரட்டும் என நான் பிரார்த்தித்தேன். தெய்வம் உண்டு என்றும், தெய்வத்தின் சக்தி என்னவென்றும் உலகத்துக்கு காட்டிக்கொடுக்கும் மிஷனரி நான்.

அதற்கு ஒரு வாய்ப்பு இது. பிரார்த்தனைக்கு சக்தி உண்டு என ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட அனைவருக்கும் புரிந்துள்ளது. சத்தியத்தை நேசிப்பவர்களும், சத்தியத்தின் பக்கத்தில் நிற்பவர்களும் என்னுடன் இருந்தார்கள். பழம் காய்க்கும் மரத்தில் கல்லெறி விழும். தொடர்ந்து பிரார்த்தியுங்கள், தெய்வத்தை துதியுங்கள் என்று சபையினரை கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.

பார்வதி

Also Read: `ஆபாசமாகப் பேசி தவறாக நடக்க முயன்றார்!' -பிஷப் பிராங்கோ முளய்க்கல் மீது மற்றொரு பாலியல் புகார்

இந்த விவகாரத்தில் பிஷப்புக்கு எதிராகவும், கன்னியாஸ்திரிக்கு ஆதரவாகவும் மலையாள நடிகைகள் களத்தில் இறங்கியுள்ளனர். நடிகை ரீமா கல்லிங்கல் தனது சமூக வலைதளத்தில் கன்னியாஸ்திரிகள் போராட்டம் நடத்தும் புகைப்படத்தை பகிர்ந்து, ``அவருடன் என்றும்" எனப் பதிவிட்டுள்ளார்.

``இந்தத் தீர்ப்பு மிகவும் கொடூரமானது. நாங்கள் பின்வாங்கமாட்டோம். எது எங்களை தோற்கடித்தாலும் நாங்கள் பின்வாங்கமாட்டோம். இதயம் உடைகிறது" என உருக்கமாகக் கருத்துத் தெரிவித்துள்ளார் நடிகை பார்வதி திருவோத்து.

கேரளாவையே உலுக்கிய இந்த வழக்கின் தீர்ப்பு, கேரளா தாண்டியும் சட்ட மற்றும் பெண்ணியச் செயற்பாட்டாளர்களிடம் விவாதமாகத் தொடர்ந்து வருகிறது.


மேலும் படிக்க `இதயம் உடைகிறது!' - கன்னியாஸ்திரி பாலியல் வழக்கு தீர்ப்பால் கொதிக்கும் மக்கள்; என்ன நடந்தது?
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top