``கட்சியினருக்குத் தலைமை கொடுத்துள்ள எச்சரிக்கை இது” - நவநீதகிருஷ்ணன் பதவி நீக்கப் பின்னணி

0

அ.தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் நவநீதகிருஷ்ணன் கட்சியின் வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். தி.மு.க செய்தித் தொடர்புச் செயலாளரும், எம்.பி-யுமான டி.கே.எஸ் இளங்கோவனின் மகள் திருமண விழா சென்னை அண்ணா அறிவாலயத்திலுள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது. திருமணத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று நடத்தி வைத்தார். இந்த விழாவில் அ.தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் கலந்துகொண்டனர். ``டி.கே.எஸ்.இளங்கோவன், கனிமொழி ஆகியோர் நாடாளுமன்ற நிகழ்வுகள் தொடர்பாக எனக்கு நிறைய விஷயங்களை கற்றுக் கொடுத்துள்ளனர். ஒரு முறை மத்திய அமைச்சருடன் விவாதித்தபோது அனுபவம் இல்லாத காரணத்தால் சண்டை போடும் அளவுக்கு நான் பேசிவிட்டேன். அப்போது சகோதரி கனிமொழி குறுக்கிட்டு ‘பொறுமையாக இருங்கள் நான் பேசுகிறேன்’ என்று என்னை ஆற்றுப்படுத்தினார். நான் சர்ச்சையில் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதில் கனிமொழி மிகவும் கவனமாக இருந்தார். நாடாளுமன்ற நிகழ்வுகள் எப்படி நடைபெறும் என்பதையும் கனிமொழி எனக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார். தமிழ் மீதும் தமிழ் மக்கள் மீதும் அதிகப் பற்று கொண்டவர் சகோதரி கனிமொழி. ஆர்.எஸ்.பாரதியும் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்திருக்கிறார்.” என நவநீத கிருஷ்ணன் தி.மு.க எம்.பி.-க்கள் கனிமொழி, டி.கே.எஸ் இளங்கோவன் உட்படப் பலரையும் புகழ்ந்து பேசினார்.

அண்ணா அறிவாலயத்துக்குச் சென்றது மட்டுமல்லாமல் தி.மு.க-வினரைப் பாராட்டிப் பேசியது அ.தி.மு.க-வினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து கட்சியில் அவர் வகித்த பதவியிலிருந்து நீக்குவதாக அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டனர்.

நவநீதகிருஷ்ணன் நீக்கம் - அதிமுக அறிக்கை

ஜெயலலிதாவின் வழக்குகளைக் கவனித்து வந்த பிரதான வழக்கறிஞராக இருந்தவர். 2015 முதல் இப்போது மாநிலங்களை உறுப்பினராகவும் அ.தி.மு.க உறுப்பினர் குழுத் தலைவராகவும் இருப்பவர், அ.தி.மு.க ஆட்சியில் பல்வேறு அரசுப் பதவிகளிலிருந்தவர் நவநீதக் கிருஷ்ணன். அவரைக் பதவியில் இருந்து நீக்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதன் பின்னணி குறித்து விசாரித்தோம்...

Also Read: `மகள் திருமணத்தில் ஜெயலலிதா படத்துக்கு உரிய மரியாதை தரவில்லை!’ - நவநீதகிருஷ்ணன் எம்.பியைச் சுற்றும் சர்ச்சை

``அ.தி.மு.க-வினர் தி.மு.க-வினரின் இல்ல திருமணத்துக்குப் போகவே மாட்டோம். அதுவும் அறிவாலயத்தில் நடக்கிறது என்றால் யாருடைய வீட்டு விழாவாக இருந்தாலும் அந்தப் பக்கம்கூட எட்டிப் பார்க்க மாட்டோம். அப்படி இருக்கும்பட்சத்தில் நவநீதன் தி.மு.க தலைவர்களைப் புகழ்ந்து பேசியிருக்கிறார். இதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். அதனடிப்படையில் தான் அ.தி.மு.க தலைமை நவநீதனைப் பொறுப்பிலிருந்து நீக்கியிருக்கிறது” என்றவர்கள் “நவநீதன் தி.மு.க பக்கம் செல்லப் போகிறார். அதனால்தான் இப்படியெல்லாம் நடந்து கொள்கிறார். நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக எம்.பி-க்கள் அமித் ஷா-வைச் சந்திக்கச் செல்லும்போது எங்கள் கட்சி சார்பாக யாரையும் அனுப்பும் எண்ணம் தலைமைக்கு இல்லை. ஆனால், நவநீத கிருஷ்ணனாக வந்து நானும் கலந்து கொள்கிறேன் எனக் கேட்டுச் சென்று வந்தார். டி.ஆர்.பாலுவோடு இணைந்து டெல்லியில் பல்வேறு விவகாரங்களில் அ.தி.மு.க-வுக்கு எதிராகப் பேசியிருக்கிறார்.

தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள்

கட்சியின் முடிவு ஒன்றாக இருக்க மாநிலங்களவையில் இவர் தாமாக ஒரு கருத்தைப் பேசி வந்தார். கிட்டத்தட்ட ஆறு மாதத்துக்கு முன்பிருந்தே தி.மு.க-வுக்குச் செல்வதற்கான அனைத்து வேலைகளையும் பார்த்துக்கொண்டுதான் இருந்தார். இதெல்லாம் தலைமையின் காதுக்கு வந்தும், அவராகச் சொல்லும் வரை காத்திருக்கலாம் என இருந்தனர்.” என்றவர்கள்... “நவநீத கிருஷ்ணன் மேல் நடவடிக்கை எடுக்க முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகமும் எம்.எல்.ஏ மனோஜ் பாண்டியனும்தான் அழுத்தம் கொடுத்தார்கள்” என்றனர்.

``நவநீத கிருஷ்ணன் அம்மா காலத்தில் அவரின் வழக்குகளைக் கையாண்டு வந்தார் என்ற மரியாதையில்தான் அவரைக் கட்சியில் இதுவரை வைத்திருந்தார்கள். மற்றபடி கட்சியில் அவருக்குப் பெரியளவில் எந்த மதிப்பும் இல்லை. இதனால்தான் வழக்கறிஞர்கள் குழு அமைப்பது, தி.மு.க அரசு எங்கள் முன்னாள் அமைச்சர்கள் மீது ரெய்டுகள் நடத்தித் தொல்லை கொடுத்த போது அது குறித்த ஆலோசனை, கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டங்கள் என எதற்கும் அவரை அழைக்கவில்லை. அவரும் அதற்காகப் பெரிய அளவில் வருத்தப்பட்டதாகத் தெரியவில்லை. அவரின் பதவிக்காலம் முடிந்ததும் அவருக்கு எந்தப் பொறுப்பும் கொடுக்காமல் கட்சியிலிருந்து விலக்கி வைக்கவே தலைமை முடிவு செய்திருந்தது. ஆனால், அவராக தன்னுடைய தி.மு.க ஆதரவை வெளிப்படுத்திவிட்டார். கட்சியின் கொள்கைக்கு எதிராக நடந்து கொள்பவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைதான் இவர் மீது எடுத்திருக்கிறார்கள். தேர்தல் நேரத்தில் கட்சியின் கொள்கைக்கு எதிராக நடந்து கொள்பவர்களுக்கு ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் கொடுத்திருக்கும் ஓர் எச்சரிக்கை மணிதான் நவநீதன் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை” என்றவர்களிடம் அடுத்து வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் பொறுப்புக்கு யார் வருவார்கள் என்ற கேள்வியை முன் வைத்தோம்...

திருச்சி சிவா- நவநீதகிருஷ்ணன்

``முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், அ.தி.மு.க எம்.எல்.ஏ மனோஜ் பாண்டியன் அல்லது முன்னாள் எம்.எல்.ஏ இன்பதுரை ஆகியோரில் யாராவது ஒருவருக்கு இந்தப் பதவியைத் தலைமை ஒதுக்க வாய்ப்பிருக்கிறது. இது எங்கள் பார்வைதான். ஆனால், இறுதி முடிவு கட்சித் தலைமை தான் எடுக்க வேண்டும்.” என்றனர்.


மேலும் படிக்க : ``கட்சியினருக்குத் தலைமை கொடுத்துள்ள எச்சரிக்கை இது” - நவநீதகிருஷ்ணன் பதவி நீக்கப் பின்னணி
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top