அரசியல் - பொருளாதாரம் பெருந்தொற்று - உலகின் நிலை என்ன? - 2022 ராகு-கேது பெயர்ச்சி பொதுப்பலன்கள்

0

நிகழும் பிலவ வருடம் பங்குனி 7-ம் தேதி (21.3.22) திங்கள்கிழமை உத்தராயனப் புண்ணிய காலம், சசி ருதுவில்... கிருஷ்ண பட்சம் சதுர்த்தி திதி, சுவாதி நட்சத்திரம், வியாகாதம் நாமயோகம், பவம் நாமகரணம் - அமிர்த யோகத்தில், பஞ்சபட்சியில் காகம் நடைபயிலும் நேரத்தில், நேத்திரம் ஜீவனம் நிறைந்த நன்னாளில் (பிற்பகல் 2:54 மணி) ரிஷப ராசியிலிருந்து மேஷ ராசிக்குள் ராகு பகவானும், விருச்சிக ராசியிலிருந்து துலாம் ராசிக்குள் கேது பகவானும் நுழைகின்றனர்.

21.3.22 முதல் 8.10.23 வரை ராகு மேஷத் திலும், கேது துலாத்திலும் இருந்து பலன் தருவார்கள். சொந்த வீடு என்று சொல்லிக் கொள்ள எந்த வீடும் இல்லாவிட்டாலும் வந்த வீட்டை ஆக்கிரமித்து அதிகாரம் செய்வ துடன் உரிமையாளருக்கே உதறல் தரும் கிரகங்கள்தான் ராகுவும் கேதுவும்.

நல்லவர்களைப் பொல்லாதவர்களாகவும், பொல்லாதவர்களை வல்லவர்களாகவும் ஆக்குவார்கள். ஒரு மனிதனின் அடிமனதில் மறைந்து கிடக்கும் மறுபக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டி மிரள வைப்பார்கள்.

படிப்பில் தங்கப் பதக்கம், பாராட்டுப் பெற்றவர்களைக்கூட தங்களின் அனுபவ அறிவால் ஆட்டிப் படைப்பவர்கள் ராகுவும் கேதுவும். குருவை சிஷ்யனாகவும், சிஷ்யனைக் குருவாகவும், முதலாளியை தொழிலாளியாகவும் தொழிலாளியை முதலாளியாகவும் மாற்றி வேடிக்கை பார்ப்பதெல்லாம் இவர்களின் வேலைதான்.

ஜோதிட ரத்னா கே.பி. வித்யாதரன்



ராகுவின் பலன்கள்

கால புருஷ தத்துவத்துக்கு தன-தான்ய-சம்பத்து வீடாகிய 2-ம் வீட்டிலிருந்து மேஷத்துக்குள் ராகு வந்து அமர்வதால் மக்களிடையே பணப்புழக்கம் அதிகரிக்கும். சரியான வேலை, சம்பாத்தியம் இல்லாமல் இருந்தவர்களுக்குத் தகுதிக்கேற்ற உத்தி யோகம் அமையும். காலபுருஷ தத்துவத்தின் படி உடலின் தலைப்பகுதிக்கு ராகு வருவதால் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களுக்குப் பாதிப்புகள் வரும்.

ரியல் எஸ்டேட் தொழிலைக் கட்டுப்படுத்தப் புது சட்டங்கள் வரும். காவல்துறை முதலான பாதுகாப்புத் துறை சார்ந்த அன்பர்களிடையே பிரச்னைகள் வரும்.

மலைப் பகுதிகளில் வன விலங்குகளால் மக்களுக்கு அச்சுறுத்தல் அதிகரிக்கும். நிலச் சரிவால் உயிரிழப்பு நிகழ வாய்ப்பு உண்டு. கனிம, கரிமங்கள் வளங்கள் கண்டறியப் படும். புது சுரங்கப் பாதைகள் தெரிய வரும்.

உலகத் தலைவர்களில் சிலருக்குத் திடீர் பாதிப்பு ஏற்படும். ரத்தத்தில் கலக்கக் கூடிய வைரஸ் பரவும். விலைவாசி உயரும். போர்த் தளவாட உற்பத்தி அதிகமாகும். இந்தியா நுட்பமான ஆயுதங்களைத் தயாரிக்கும். தலையில் காயப்படும் நிலை அதிகரிக்கும். தலைக்கவசம் அணிவது நல்லது.

கேதுவின் பலன்கள்

வியாபரிகளுக்கு நெருக்கடிகள் வரும். உணவுப் பொருள் பதுக்கல்கள் அதிகமாகும். கெட்டுப் போன மருந்துகள், தரமற்ற உணவுப் பொருட்கள் கண்டறியப்பட்டு அழிக்கப் படும். புதியவகை தடுப்பூசி அறிமுகமாகும். நீதித்துறையில் கலக்கம் ஏற்படும். சில தீர்ப்புக்கு எதிராகப் மக்கள் போராடுவர். போக்குவரத்து அதிகரிக்கும்.

பட்டு, ஜவுளி, வாசனைத் திரவியங்கள், சொகுசு வாகன உற்பத்தி பெருகும். நகைத் தொழில், ஆபரணம், சங்கீதம், இசை, பாட்டு உள்ளிட்ட நம் பாரத நாட்டுப் பண்பாட்டுக் கலாசார விஷயங்களுக்கு பலரும் உரிமை கொண்டாடுவார்கள். கலைஞர்கள் பாதிப்பு அடைவார்கள்.


மேலும் படிக்க அரசியல் - பொருளாதாரம் பெருந்தொற்று - உலகின் நிலை என்ன? - 2022 ராகு-கேது பெயர்ச்சி பொதுப்பலன்கள்
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top