சிறைக் கொடுமையில் `24' அதிகாரத்தின் உச்சத்தில் `69' - ஸ்டாலின் பிறந்த நாள் பிளாஷ்பேக்!

0

முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு தனது முதல்வராக அவர் கொண்டாடும் முதல் பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. முதல்வரின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாட முடிவுசெய்து தி.மு.க வினர் கொண்டாடி வருகிறார்கள்.69 வயதை எட்டும் ஸ்டாலின் இந்த பிறந்த நாளுக்கு முன்பாக தனது சுயசரிதை நுாலான உங்களில் ஒருவன் நுாலின் முதல் பாகத்தையும் வெளியிட்டிருக்கிறார்.

ஸ்டாலின்

மார்ச் 1-ம் தேதி 1953-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இரண்டாவது மகனாக பிறந்த ஸ்டாலினுக்கு, 1975-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணம் நடந்தபோது தி.மு.க வின் உறுப்பினராகவும், இளையோர் தி.மு.க அமைப்பு என்கிற அமைப்பின் செயலாளராகவும் ஸ்டாலின் இருந்துவந்தார். ஸ்டாலினுக்குத் திருமணம் முடிந்து நான்கு மாதங்கள் கழிந்திருந்தது. 1976-ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவில் எமர்ஜென்சி சட்டத்தை அதிரடியாகக் கொண்டுவந்தார் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி.

எமர்ஜென்சி சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பெரும் கிளர்ச்சி வெடித்தது. குறிப்பாக பிகாரில் ஜெய்பிரகாஷ் நாராயணன் தலைமையில் பெரும் போராட்டங்கள் நடந்தன. எதிர்க்கட்சித் தலைவர்கள் நாடு முழுவதும் கைது செய்யப்பட்டனர். எமர்ஜென்சி சட்டம் அமல்படுத்தப்பட்ட நேரத்தில் தமிழகத்தில் கருணாநிதியின் தலைமையிலான தி.மு.க ஆட்சியிலிருந்தது. எமர்ஜென்சிக்கு எதிராக தி.மு.க குரல் கொடுத்ததால், உடனடியாக அந்த ஆட்சி கலைக்கப்படுவதாக 1976-ம் ஆண்டு ஜனவரி 31-ம் தேதி அறிவிப்பு வெளியானது. ஆட்சிக்கலைப்பு நடந்த அடுத்த சில மணிநேரங்களில் கோபாலபுரம் இல்லத்தில் காவல்துறை குவிக்கப்பட்டது. கருணாநிதியை தான் கைது செய்யப்போவதாக தி.மு.க வினர் பலரும் எதிர்பார்த்தனர்.ஆனால் காவல்துறையினர் கருணாநிதியிடம் “உங்கள் மகன் ஸ்டாலின் எங்கே?” என்று கேள்வி எழுப்பியது கருணாநிதிக்கே அதிர்ச்சியைக் கொடுத்தது.

மிசாவில் கைது செய்யப்பட்டபோது அடைக்கப்பட்ட சிறை அறையில் ஸ்டாலின்

கருணாநிதியின் வீட்டில் தான் அப்போது ஸ்டாலின் வசித்தார். உடனடியாக ஸ்டாலினுக்குத் தகவல் சொல்லப்பட்டது. அப்போது துர்கா கர்ப்பிணியாக இருந்த நேரம். ஸ்டாலினைக் கைது செய்த காவல்துறை சென்னை மத்திய சிறையில் பிப்ரவரி 1-ம் தேதி அடைத்தது.சிறையில் ஸ்டாலின் சந்தித்த கொடுமைகள் பற்றியும் உங்களில் ஒருவன் இரண்டாம் பாகத்தில் அவர் குறிப்பிட இருக்கிறார்.சிறையில் ஸ்டாலினுடன் சிட்டிபாபுவும் இருந்தார். இரண்டு பானைகள் மட்டுமே அவர்களுக்கு வழங்கப்பட்டது குறித்தும், சிட்டிபாபு மரணம் குறித்தும் பல தகவல்களை சுயசரிதையில் ஸ்டாலின் குறிப்பிட உள்ளார். சிறையில் ஸ்டாலின் இருந்தபோதுதான் அவரது 24வது பிறந்த நாள் மார்ச 1-ம் தேதி இருண்ட பிறந்த நாளாகவே கழிந்தது.

ஸ்டாலின் வாழ்வில் மறக்க முடியாத பிறந்த நாளாக அந்த பிறந்த நாள் இருந்தது. திருமணம் முடிந்த சில மாதங்களிலே கருவுற்ற மனைவியை பிரிந்த சோகம், சிறைக்குள் நடந்த சித்திரவதைகள் மறுபுறம் என ஸ்டாலினுக்கு அந்த பிறந்த நாள் சோகத்துடன் கழிந்தாலும் அரசியல் களத்தில் ஸ்டாலினின் பாதங்கள் அழுத்தமாக பதிவதற்கும் சிறைவாசம் ஒரு வலுவான காரணம்.

ஸ்டாலின் - ராகுல் காந்தி

அதன்பிறகு தி.மு.க வில் படிபடியாக பதவிகளைப் பெற்று இன்று தி.மு.க வின் இரண்டாவது தலைவர் என்கிற பதவியோடு, தமிழகத்தின் முதல்வராகவும் ஸ்டாலின் கொண்டாடும் முதல் பிறந்த தினம். முதல்வராக தான் கொண்டாடும் முதல்பிறந்தநாளுக்கு முன்பாகவே தனது சுயசரிதை நுால் வெளியாகவேண்டும் என்று உறுதியாக இருந்தவர், அதை செய்தும்விட்டார். அடுத்த பிறந்தநாளுக்கு முன்பாகவே இரண்டாவது பாகத்தையும் முடித்துவிடும் எண்ணத்தில் ஸ்டாலின் இருக்கிறார். பிறந்த நாள் அன்று அறிவாலயத்தில் தொண்டர்களை சந்தித்து வாழ்த்துக்களை பெறுவார். அகில இந்திய தலைவர்களின் வாழ்த்துக்களைப் பொற்றாலும், 1976-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி சிறையில் கடந்த அந்த பிறந்த தினம் தனித்துவம் மிக்கதுதான்.


மேலும் படிக்க சிறைக் கொடுமையில் `24' அதிகாரத்தின் உச்சத்தில் `69' - ஸ்டாலின் பிறந்த நாள் பிளாஷ்பேக்!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top