"எளிமையே பெருமை" - பாபு ராஜேந்திர பிரசாத் வாழ்க்கை உணர்த்தும் 5 பாடங்கள் - நினைவு தினப் பகிர்வு!

0

ஒருபோதும் ஒருதலைப்பட்சம் கூடாது

1950-ல் இந்தியா ஒரு குடியரசாக அறிவிக்கப்பட்ட அன்று ராஷ்டிரபதி பவனில் அவர் நிகழ்த்திய உரையின் ஒரு பகுதி இது. "இந்தியா ஒரு போதும் தனது எந்தக் கருத்தையும் நம்பிக்கையையும் பிறருக்குப் பரிந்துரைப்பதும் இல்லை. கட்டாயப்படுத்துவதும் இல்லை. தெய்வ நம்பிக்கை உள்ளவர், தெய்வ நம்பிக்கை இல்லாதவர், இறைவனைப் பற்றி எந்தக் கருத்தும் இல்லாதவர் ஆகிய அனைவருக்கும் இந்த நாட்டில் இடம் உண்டு என்பதுதான் இந்தியாவின் அணுகுமுறை".

ஜவஹர்லால் நேரு, ராஜேந்திர பிரசாத், பூலாபாய் தேசாய்

உயரப் பறக்கும் அதே நேரம் மண்ணில் கால் பதிக்க வேண்டும்

என்னதான் வாழ்க்கையில் பல உயரங்களை அடைந்தாலும் நம் மண்ணின் பெருமையை மறக்கக்கூடாது. மக்களை விலக்கி வைக்கக்கூடாது. ராஷ்டிரபதி பவனில் ராஜேந்திர பிரசாத்துக்கு முன்பே பிரிட்டிஷ் அதிகாரிகள் வசித்துள்ளனர். ஆனால் ராஜேந்திர பிரசாத் குடியரசுத் தலைவர் ஆனவுடன், "ஆண்டுக்கு ஒருமுறை ராஷ்டிரபதி பவன் வளாகத்திலுள்ள பிரமாண்டமான முகலாயத் தோட்டம் பொதுமக்கள் பார்வைக்குத் திறந்து விடப்படும்" என்றார்.

எளிமையே பெருமை

சிறப்புகளை அடைய அடைய தலைக்கனம் அதிகமாக வாய்ப்பு உண்டு. அப்படி நேராமல் பார்த்துக் கொண்டால்தான் அந்த சிறப்புகளைத் தக்கவைத்துக்கொள்ள முடியும். டாக்டர் ராதாகிருஷ்ணனின் கல்விச் சிறப்புகள் நாடறிந்தவை. எனினும் அவருக்கு முன்பாகக் குடியரசுத் தலைவராக விளங்கிய ராஜேந்திர பிரசாத்தும் கல்வியில் சிறப்புப் பெற்றவர்தான். கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேறியவர் (அப்போதெல்லாம் பல்கலைக்கழகத்தில் ஓரிருவருக்குதான் முதல் வகுப்புத் தேர்ச்சி வழங்கப்படும்). ஒரு தேர்வில் ராஜேந்திர பிரசாதின் விடைத்தாளில், "தேர்வாளரை விட இந்த மாணவன் மேம்பட்ட அறிவுள்ளவனாக இருக்கிறான்" என்று எழுதியிருந்தார் ஒரு தேர்வாளர்.

குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் / மற்றொரு படம்: தேசிய கீதத்திற்காக எழுந்து நிற்கும் தலைவர்கள்

பிறருக்கு உபதேசம் செய்வதை நாமும் தவறாமல் கடைபிடிக்க வேண்டும்

சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர் ராஜேந்திர பிரசாத். காந்தியின் சீடர். ஒரு முறை ‘மேற்கத்தியக் கல்வி நிறுவனங்களை நம் வாழ்வில் இருந்து ஒதுக்க வேண்டும்’ என்று காந்தி உரை நிகழ்த்த, அதைக்கேட்ட ராஜேந்திரபிரசாத் தன் மகனை அவன் படித்துக் கொண்டிருந்த மேற்கத்தியக் கல்விக் கூடத்திலிருந்து வெளியேறச் செய்து அவனை வித்யா பீடத்தில் சேர்த்தார். இது மரபு சார்ந்த இந்திய வழிக் கல்விக்கூடம்.

ராஜேந்திர பிரசாத், இந்திரா காந்தி மற்றும் நேரு. இந்தக் குடியரசு தின நிகழ்ச்சிகள் முழுவதுமாகவே நேரு மிக உற்சாகமாக காணப்பட்டதாக நம் செய்தியாளர் பதிவு செய்திருக்கிறார்.

சுய பரிசோதனை ஞானத்தை ஊட்டும்

கால ஓட்டத்தில் வேகமான உலகில் நாம் அடுத்து அடுத்து என்று காரியங்களில் ஈடுபடுகிறோம். நடு நடுவே கொஞ்சம் நின்று நம்மை உணர்ந்து நிலைநிறுத்திக் கொண்டால் அது தெளிவான பாதையைக் காட்டும். பதவியிலிருந்து ஓய்வு பெற்ற காலகட்டத்தில் ராஜேந்திர பிரசாதின் உடல்நலம் கெட்டது. அவர் நினைத்திருந்தால் டெல்லியிலேயே தங்கியிருந்து உடல் நலத்துக்கான பலவித நவீன சிகிச்சைகளைப் பெற்றிருக்கலாம். ஆனால் பீகாரில் உள்ள தன்னுடைய எளிய வீட்டுக்குச் சென்றுவிட்டார். "நான் எங்கிருந்து இங்கு வந்தேனோ அங்கேயே திரும்புவதுதான் நல்லது" என்று இதைப் பற்றி குறிப்பிட்டார்.


மேலும் படிக்க "எளிமையே பெருமை" - பாபு ராஜேந்திர பிரசாத் வாழ்க்கை உணர்த்தும் 5 பாடங்கள் - நினைவு தினப் பகிர்வு!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top