திருச்சி: ஒரே நாளில் 7 பேர் கைது! - சிறுவர்களைக் குறிவைத்து மீண்டும் தலைதூக்கும் போதை ஊசி கலாசாரம்?!

0

மாணவர்கள், சிறுவர்களுக்குப் போதை ஊசி, மாத்திரைகளை விற்ற ஏழு பேரை தனிப்படைப் போலீஸார் கைது செய்திருக்கும் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் போதை ஊசி கலாசாரம் தலைதூக்கியிருப்பதாக வருந்துகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

திருச்சி திருவரங்கம் கோயில்

பள்ளி கல்லூரி மாணவர்கள் இளைஞர்களுக்கு குட்கா, பான்பராக் போன்ற போதைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதைக் கண்டறிந்து குற்றவாளிகளைக் கண்டறிய மாநகர கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். இதில் திருச்சி அரியமங்கலம் அருகேயுள்ள முடுக்குபட்டி பகுதியில் மாணவர்கள், சிறுவர்கள் போதைப்பொருளுக்கு அடிமைப்பட்டு கிடப்பதாகத் தகவல் வந்தது. அதன்பேரில் தனிப்படை போலீஸார் மாநகரில் பல்வேறு பகுதியில் தீவிரமாகக் கண்காணித்தனர்.

இதில், அரியமங்கலம் பகுதியில் முகமது யூசுப் என்பவர் மெடிக்கல் ஷாப் வைத்திருக்கிறார். அக்கடையிலிருந்து சட்டவிரோதமாக உடல்வலி, அலர்ஜிக்கான மாத்திரைகளை மொத்தமாக வாங்கி வந்து சிறுவர்களிடம் விற்பனை செய்துள்ளனர். இத்தகவல் தெரிய வர முகமது யூசுப்பை போலீஸார் கைதுசெய்தனர்.

போதை ஊசி

அவர் கொடுத்த தகவலின் படி திருச்சி கன்டோன்மென்ட், ஸ்ரீரங்கம் ஆகிய பகுதிகளில் தனிப்படை போலீஸார் அரவிந்த், ஷெப்ரின் ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து 1,230 போதை மாத்திரைகள், 110 போதை மருந்து பாட்டில்களைப் பறிமுதல் செய்தனர். இந்த சோதனையில் போதை மாத்திரைகளை கை இருப்பு வைத்து விற்பனை செய்த முடுக்குப்பட்டியை சேர்ந்த நாகராஜ், ஜெயராமன், கார்த்திக் ராஜா, பிரவீன் ஆகிய பேரை போலீஸார் கைது செய்தனர்.

போதை ஊசி

போதை மாத்திரைகளை விற்ற 7 பேரை ஒரே நாளில் கண்டறிந்து நடவடிக்கை எடுத்த தனிப்படை போலீஸாரை மாநகர கமிஷனர் கார்த்திகேயன் வெகுவாக பாராட்டினார். மேலும் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கமிஷனர் எச்சரிக்கை விடுத்தார்.

இதுகுறித்து வழக்கை விசாரித்துவரும் தனிப்படை போலீஸாரிடம் பேசினோம். ``கஞ்சா, மது வகைகளின் விலை அதிகமாக இருக்கும் காரணத்தால் போதை ஊசி விற்பனையும் அதிகரித்துள்ளது. இதற்கு மாற்று யோசனையாக மருந்துக் கடைகளில் குறிப்பிட்ட சில மாத்திரைகளை வாங்கி, செலின் வாட்டரோடு கலந்து இளைஞர்களின் உடம்பில் ஏற்றிக் கொள்கிறார்கள்.

திருச்சி போலீஸார்

இதன் ஆபத்தை உணராமல் பல இளைஞர்கள் இதற்கு அடிமையாகிறார்கள். அதுவும், இந்த கும்பல் கஞ்சாவிற்கு இணையான பவர் இருக்கிறது என்று மூளைச் சலவை செய்கிறார்கள். இத்தொழிலுக்குக் குறைந்த வயது சிறுவர்களைப் பயன்படுத்துவதோடு பள்ளி மாணவர்களுக்கும், இதனை விற்பனை செய்கிறார்கள். இது மிகவும் ஆபத்தான ஒன்று. திருச்சி மாநகரிலுள்ள மருந்துக் கடைகளில் மருத்துவரின் மருந்துச் சீட்டு இல்லாமல் மாத்திரைகள், மருந்துகளை விற்பனை செய்யக் கூடாது.

கமிஷ்னர் கார்த்திக்கேயன்

அப்படி விற்பனை செய்தால், அந்தக் கடையின் உரிமையாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அந்த மருந்துக் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும்’ எனக் கடுமையாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையிலும் மீண்டும் இதுபோன்ற சம்பவம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க கமிஷ்னர் கராரான உத்தரவைப் போட்டிருக்கிறார்” என்றனர்


மேலும் படிக்க திருச்சி: ஒரே நாளில் 7 பேர் கைது! - சிறுவர்களைக் குறிவைத்து மீண்டும் தலைதூக்கும் போதை ஊசி கலாசாரம்?!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top