`முன்பு, சாதனையைக்கூறி, வாக்குறுதியளித்து ஓட்டு சேகரித்தனர்; இப்போது..’ -உயர் நீதிமன்றம் கருத்து

0

சென்னை உயர் நீதிமன்றத்தில் மயிலாடுதுறை மாவட்டம், வைத்தீஸ்வரன்கோவிலை சேர்ந்த பெண் ஒருவர் ஒரு ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். அதில், ``எனது கணவர் இறந்துவிட்டார். இதனால், வைத்தியநாதன் என்பவரின் வீட்டில் வேலை செய்து வந்தேன். இந்த நிலையில் என் மகள் திருமணத்துக்காக அவரிடம் கடன் வாங்கி இருந்தேன். ஒருநாள், திடீரென அந்த பணத்தை ஒட்டுமொத்தமாக திருப்பி தர வேண்டும். அல்லது அவரின் ஆசைக்கு இணங்க வேண்டும் என்று என்னை வற்புறுத்தினார். அப்போது, வேறுவழியில்லாமல் சம்மதித்த எனக்குக் கடந்த அக்டோபர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் வைத்தியநாதன் அந்த குழந்தையை எங்கோ எடுத்துச் சென்றுவிட்டார். என் குழந்தையை மீட்டு என்னிடம் ஒப்படைக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

வைத்தீஸ்வரன் கோயில்

இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஏ.ஏ.நக்கீரன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வைத்தீஸ்வரன்கோவில் காவல்துறை, ``குழந்தையை பானு - பாஷா எனும் முஸ்லிம் தம்பதியிடம் மனுதாரர் தத்து கொடுத்துள்ளார். அந்த தம்பதியிடம் இருந்து குழந்தை மீட்கப்பட்டு, அன்னை சத்யா குழந்தைகள் காப்பகத்தில் உள்ளது” என்று கூறியது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுதாரர் தரப்பு வழக்குரைஞர், "மனுதாரருக்கு எதிராக போலீசார், வைத்தியநாதன், குழந்தையை வைத்திருந்த தம்பதி ஆகியோர் கூட்டு சேர்ந்து செயல்படுகின்றனர். குழந்தை கடத்தி விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதை போலீஸார் விசாரிக்கவில்லை
மனுதாரரின் மகன் ஆளும்கட்சியில் இணைந்து உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுகிறார். இதனால், மனுதாரருக்கு எதிராக அனைவரும் செயல்படுகின்றனர்” என்றார்.

குழந்தை

இதனை அடுத்து, இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ``இந்த வழக்கே தேர்தலை முன்னிட்டு என்றுதான் நினைக்கிறோம். முன்பெல்லாம் செய்த சாதனையைக் கூறி, அல்லது வாக்குறுதியளித்து ஓட்டு சேகரித்தனர். ஆனால் இப்போது, எதிர் தரப்பினரை அவமானப்படுத்தி ஓட்டு கேட்கும் அரசியல் நாடகம் நடக்கிறது.

வைத்தியநாதனின் மகன் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதால் அவரை அவமானப்படுத்துவதற்காக அரசியல் எதிர் தரப்பினர் இந்த மனுதாரரைத் தூண்டிவிட்டு இருக்கலாம். இது எங்களுடைய யூகம் மட்டுமே. எதிர் மனுதாரர் வைத்தியநாதன், இந்த குழந்தைக்குத் தந்தை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். அல்லது மரபணு சோதனைக்குச் சம்மதிக்க வேண்டும்” என்று கருத்து தெரிவித்தனர்.

தீர்ப்பு

இதற்கு வைத்தியநாதன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "இந்த வழக்கைச் சமரச மையத்துக்குப் பரிந்துரை செய்யலாம். இது குறித்து என் கட்சிக்காரரிடம் விளக்கம் கேட்டுத் தெரிவிக்கிறேன்" என்று பதிலளித்தார்.

இந்த வழக்கு விசாரணையை 28-ம் தேதிக்குத் தள்ளிவைத்த நீதிபதிகள், காப்பகத்தில் உள்ள குழந்தையை மனுதாரரிடம் ஒப்படைக்க காவல்துறை அதிகாரிக்கு உத்தரவிட்டனர்.


மேலும் படிக்க `முன்பு, சாதனையைக்கூறி, வாக்குறுதியளித்து ஓட்டு சேகரித்தனர்; இப்போது..’ -உயர் நீதிமன்றம் கருத்து
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top