``இனி வாழ முடியாது என்ற நிலை ஏற்பட்டதால்..." - வறுமையால் அண்ணன், தங்கை தற்கொலை?

0

விழுப்புரம் கே.கே.சாலையில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தவர் சுசீந்தரன்(54). சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என கூறப்படும் இவருக்கு, திருமணம் ஆகவில்லை. இவரின் தங்கை பெயர் ரேவதி(50) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). பிரபல தமிழ் நடிகை ஒருவரின் தம்பியை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படும் ரேவதி, கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் அவரின் குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக தன் அண்ணன் வீட்டிலேயே வசித்து வந்தாராம்.

அண்ணன், தங்கை இருவரும் வசித்து வந்த வீட்டில் நேற்று(13.02.2022) திடீரென துர்நாற்றம் வீசியுள்ளது. சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர், விழுப்புரம் நகர காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அண்ணன், தங்கை - விழுப்புரம்

உடனே அங்கு விரைந்து வந்த காவல்துறையினர், மூடப்பட்டிருந்த கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அங்கு, சுசீந்தரன், ரேவதி ஆகிய இருவரும் தூக்கில் தொடங்கிய படி காணப்பட்டுள்ளனர். அழுகிய நிலையில் இருந்த அவ்விரு உடல்களையும் மீட்ட காவல்துறை அதிகாரிகள், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அப்போது, அந்த அறையில் இருந்து போலீஸாரால் கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் கடிதம் ஒன்று படிப்போரின் மனங்களை அதிர்ச்சி அடைய செய்யும் வகையில் உள்ளது.

ரேவதி எழுதிக்கொள்வது என தொடங்கும் அந்த கடிதத்தில், "என்னுடைய அண்ணன் சுசீந்தரன் சற்றே மனநிலை பாதிக்கப்பட்டவர். 15 வருடமாக மருத்துவமனைகளில் காண்பித்து வருகிறோம். எங்களுடன் வசித்து வந்த எங்களின் தாயார், அண்மையில் உயிரிழந்தது தான் எங்களை மிகவும் பாதித்தது. நான் என் கணவரை பிரிந்து 2.5 வருடம் ஆகிவிட்டது, எனக்கு குழந்தையும் கிடையாது. இவை அனைத்தும் சேர்ந்து எனக்கு மனதளவில் மிகவும் பாதிப்பாகிவிட்டது. மன அழுத்தம் காரணமாக B.P வந்துவிட்டது. அரசு மருத்துவமனையில் காண்பித்து மாத்திரை சாப்பிட்டு வருகிறேன்.

விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்.

தனிமை என்னை மிகவும் பாதிக்கிறது. மனதளவிலும், உடல் அளவிலும் பாதிப்பு ஏற்பட்டதால் என்னால் நிரந்தரமாக வேலை ஒன்றும் செய்ய இயலவில்லை.

Also Read: குமரி: கணவர் திடீர் மரணம்!- வறுமையால் 7 கி.மீ நடந்து சென்று குளத்தில் குதித்த மனைவி, 2 மகள்கள்

ஆகையால், வருமானத்திற்கும் எங்களுக்கு வழியில்லை. என்னுடைய அண்ணன் நல்லா இருப்பதை போல இருக்கும், திடீரென மனநிலை மாறிப்போகும். அவரை வீட்டில் விட்டு என்னால் ரொம்ப நேரம் கூட வெளியில் செல்ல முடியாது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், எங்களால் இனி வாழ முடியாது என்ற நிலை ஏற்பட்டதால் நாங்கள் இறப்பதற்கு முடிவு செய்தோம்.

சொந்தங்கள் இருந்தும் யாரும் இல்லாத நிலை எங்களுக்கு. சொந்தங்கள் அன்பு காண்பித்து ஆறுதலாக கூட இல்லை. ஆகையால் எங்கள் இறப்புக்கு யாரும் காரணம் இல்லை. ராமு (பெயர் மாற்றப்பட்டுள்ளது), நாங்கள் இருவரும் மட்டுமே தான் பேசி முடிவு செய்தோம். வீட்டில் உள்ள பொருட்களை விற்று மாலதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அம்மாவுக்கு ரூ.24,000 கொடுத்துவிடு. மன்னிக்கவும்" என்று மனக்குமுறல்களை பதிவிட்டு எழுதப்பட்டுள்ளது.

பரபரப்பான சம்பவ இடம் - விழுப்புரம்

Also Read: தள்ளிப்போகும் மறுமணம், தற்கொலை எண்ணம்...வாசகியின் பிரச்னைக்கு நிபுணர் தீர்வு! #LetsSpeakRelationship

வறுமையின் காரணமாக அண்ணன், தங்கை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் விழுப்புரம் பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் காவல்துறையினர்.


மேலும் படிக்க ``இனி வாழ முடியாது என்ற நிலை ஏற்பட்டதால்..." - வறுமையால் அண்ணன், தங்கை தற்கொலை?
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top