``புள்ளி கிடைத்தால், கோலம் போட்டுவிடுகின்றன எதிர்க்கட்சிகள்!'' - சொல்கிறார் குஷ்பு

0

கர்நாடக அரசியலில், ஹிஜாபை முன்வைத்து அரசியல் என்றால், தமிழ்நாட்டிலோ 'தி.மு.க-வுக்கு எதிர்க்கட்சி நாங்கள்தான்' என்று சவால் விடுவது முதல், தேர்தல் முடிவுக்குப் பின்பு, 'மூன்றாவது பெரிய கட்சி நாங்கள்தான்' எனச் சொல்லிக்கொள்வது வரை... தமிழக அரசியலில் பா.ஜ.க-வின் அதகளமே தனி ரகம்தான்!

இந்த நிலையில், பா.ஜ.க-வின் தேசிய செயற்குழு உறுப்பினரும் நடிகையுமான குஷ்புவை நேரில் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்துப் பேசினோம்...

''நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க-வுக்காக பரப்புரை செய்தீர்களே... மக்களிடையே எந்தளவு வரவேற்பு இருந்தது?''

''மக்களிடம் பா.ஜ.க-வுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. 'தாமரைன்னா மோடிஜி-யோட கட்சிதானே... அப்ப எங்களோட ஓட்டு உங்களுக்குத்தான்'னு மக்கள் சொல்கிறார்கள்.

தேர்தல் பிரசாரத்தில் குஷ்பு

'தமிழகத்தில் தமரை மலரவே மலராது' என்று சொல்லிக்கொண்டிருந்தவர்களுக்கு கடந்த சட்டமன்றத் தேர்தலில் 4 இடங்களை வென்று பதிலடி கொடுத்துவிட்டோம். அதேபோல், உள்ளாட்சித் தேர்தலிலும் கணிசமான எண்ணிக்கையில் வெற்றி பெற்றுள்ளோம். 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள எங்களுக்கு இந்தத் தேர்தல்தான் அடித்தளம்!''

''கோவையில், மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்கியதாகக்கூறி பா.ஜ.க வேட்பாளர் ஹெல்மெட் அணிந்து பிரசாரம் செய்தாரே...''

''வேட்பாளர் மீது கல்லெடுத்து வீசியவர்கள் யார்? நிச்சயம் மக்கள் கல்வீசியிருக்க வாய்ப்பில்லை. ஆக, அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள்தான் கல் வீசித் தாக்கியிருப்பார்கள்.''

''ஏதாவது ஒரு பிரச்னையைக் கிளப்பி அதன் வழியே வாக்குச் சேகரிக்கும் உத்தியை பா.ஜ.க பின்பற்றிவருவதாகச் சொல்கிறார்களே?''

''மத்திய ஆட்சிப் பொறுப்பில், வலுவாக அமர்ந்திருக்கும் கட்சியைச் சேர்ந்தவர்கள் நாங்கள். தொடர்ந்து மத்திய அரசு செய்துவரும் மக்கள் நலத் திட்டங்களை எடுத்துச் சொல்லியே நாங்கள் வெற்றிபெற முடியும் என்கிறபோது, நாங்கள் ஏன் சர்ச்சைகளை உருவாக்கவேண்டும்.

ஆனால், எங்கள் மீது இப்படியொரு பழியை சுமத்துபவர்கள்தான், இந்தப் பிரச்னைகளை எல்லாம் உருவாக்குகிறார்கள். அதாவது, குற்றச்சாட்டை முன்வைப்பவர்கள்தான் தாங்களாகவே ஒரு பிரச்னையை உருவாக்கி அந்தப் பிரச்னைக்கான பழியை எங்கள் மீது சுமத்திவிடுகிறார்கள்

கல்லூரி மாணவர்கள் - காவி துண்டு

இந்தவரிசையில், 'பிரசாரத்துக்கு எங்கே போனீர்கள், என்ன பேசினீர்கள்' என்பதையெல்லாம்கூட தங்கள் சுயநல அரசியலுக்காக மாற்றிப் புகார் சொல்லிவிடுகின்றன எதிர்க்கட்சிகள். ஆக, சின்னதொரு புள்ளி கிடைத்தாலும் அதைவைத்துக் கோலம் போட்டுவிடுவதற்காக காத்துக்கிடக்கின்றன எதிர்க்கட்சிகள்.''

''கர்நாடகத்தில், 'ஹிஜாப்' ஆடையை முன்வைத்து அரங்கேறிவரும் அரசியலை செய்துவருபவர்கள் யார்?''

''நான் படித்த காலத்தில், பள்ளி வளாக வாசலிலேயே ஹிஜாபை கழற்றிவிட்டுத்தான் பள்ளிக்குள் நுழைவார்கள். கல்வி கற்கக்கூடிய பள்ளியினுள் அனைத்து மாணவர்களும் சமத்துவமாக இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் இந்த சீருடைக் கட்டுப்பாடு. ஆனால், கர்நாடகா விவகாரத்தில் பள்ளியினுள் ஹிஜாப் அணிந்துதான் செல்வேன் என்று பிரச்னையைக் உருவாக்குபவர்கள் யார்?''

''அப்படியென்றால், கைகளில் கயிறு, நெற்றியில் திலகம், தலையில் டர்பன் என எல்லா மத அடையாளங்களையும் பள்ளிக்குள் அனுமதிக்கக்கூடாதுதானே?''

''இந்து, முஸ்லிம் மாணவர்களிடையேயான பிரச்னையை நீங்கள் சாதி, இனம் சார்ந்த பிரச்னையாகவும் பிரித்துப்பார்த்து கேள்வி கேட்கிறீர்கள். எங்களைப் பொறுத்தவரையில், ஹிஜாப் அணிந்து செல்வது தவறு, காவி துண்டு அணிந்து செல்வதும் தவறு. மற்றபடி கையில் கயிறு கட்டிக்கொள்வதையோ, பிராமின்ஸ் பூநூல் அணிவதையோ, முஸ்லிம்கள் தாவிஸ் அணிவதையோ கழட்டச்சொல்லி யாருமே சொல்லவில்லை. சீருடைக் கட்டுப்பாடு என்ற ஒன்று இருக்கும்போது, அதை யாரும் மீறாதீர்கள் என்றுதான் சொல்கிறோம்.''

ஹிஜாப் சர்ச்சை

''நீங்களும்கூட பா.ஜ.க-வில் இணைவதற்கு முன்பு 'ஹிஜாப் அணிவது அவரவர் தனிப்பட்ட உரிமை' என்றுதானே பேசிவந்திருக்கிறீர்கள்?''

''ஹிஜாப் அணிவது அவரவர் தனிப்பட்ட உரிமை என்றுதான் இப்போதும் சொல்கிறேன். ஆனால், பள்ளிக்கூடத்தில் அல்ல. கடந்த காலத்திலேயே இந்தப் பிரச்னை வந்திருந்தாலும்கூட நான் இதே பதிலைத்தான் சொல்லியிருப்பேன். ஏனெனில், 'நாம் எந்தக் கட்சியில் இருக்கிறோம்; அதன் அடிப்படையில்தான் கருத்து சொல்லவேண்டும்' என்றெல்லாம் நான் ஒருபோதும் நினைப்பதில்லை. உண்மை எதுவோ அதன் அடிப்படையில் மட்டுமே பேசுவேன். அதனால்தான் காங்கிரஸ் கட்சியில் இருந்தபோதேகூட, 'புதிய கல்விக் கொள்கை'யை ஆதரித்துப் பேசினேன்.''

''2024-ல் 'ஒரே நாடு ஒரே தேர்தல் அமல்படுத்தப்படும்' என்கிறார்களே அ.தி.மு.க தலைவர்கள்? உண்மைதானா?''

''அ.தி.மு.க தலைவர்கள் சொல்லி வருகிறார்கள் என்றால், அவர்களிடம்தான் நீங்கள் விளக்கம் கேட்கவேண்டும். நான் ஒன்றும் அ.தி.மு.க செய்தித்தொடர்பாளர் இல்லையே!''

மோடி - எடப்பாடி பழனிசாமி

''மாணவி அனிதா மரணத்தின்போது, 'பிணத்தின் மீது அரசியல் செய்வதாக' எதிர்க்கட்சிகளை குற்றம் சாட்டிய பா.ஜ.க-வே, இப்போது அரியலூர் மாணவி மரணத்தை முன்வைத்து அரசியல் செய்துவருகிறதுதானே?''

''மாணவி அனிதா தற்கொலைக்கும், இந்த மாணவி தற்கொலை விவகாரத்துக்கும் இடையே நிறைய வித்தியாசங்கள் உள்ளன. நீட் தேர்வு பிரச்னையால் அனிதா தற்கொலை செய்துகொண்டதாகக்கூறி தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அரசியல் செய்தன. ஆனால், அரியலூர் மாணவி விவகாரத்தில் 'கட்டாய மதமாற்றம் செய்யச்சொன்னார்கள்' என்று அவரே சொல்லியிருக்கிறார்.

இந்த நிலையில், 'அரியலூர் மாணவி மரணத்தில், மதமாற்றப் பின்னணி எதுவும் இல்லை' என்று காவல்துறையும், அமைச்சரும் சொல்லிக்கொண்டிருந்ததால், 'உண்மையை வெளிக்கொணர சி.பி.ஐ விசாரணை வேண்டும்' என்று நாங்கள் போராடினோம். நீதிமன்றமும் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டு, விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. விரைவிலேயே உண்மை வெளிவரும். எனவே, இது உண்மையை வெளிக்கொண்டு வருவதற்கான அரசியல்தானே தவிர... பிணத்தின் மீதான அரசியல் அல்ல!''


மேலும் படிக்க ``புள்ளி கிடைத்தால், கோலம் போட்டுவிடுகின்றன எதிர்க்கட்சிகள்!'' - சொல்கிறார் குஷ்பு
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top