``பெண் வாக்காளர்களை கவர புடவைகள்; பதுக்கிய அதிமுக வேட்பாளர்!' - பறக்கும் படையிடம் சிக்கியது எப்படி?

0

குளித்தலை நகராட்சி 8 வது வார்டு அதிமுக வேட்பாளர் வீட்டில் பெண் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக பதுக்கி வைத்திருந்த 340 புடவைகளை தேர்தல் பறக்கும்படை கைப்பற்றிய சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குளித்தலை

Also Read: `குடும்பத்தலைவிகளுக்கு 1000 ரூபாய் என்னாச்சு?!' -பிரசாரத்தில் உதயநிதியிடம் கேட்கப்பட்ட கேள்வி

வரும் 19 ம் தேதி ஒரே கட்டமாக தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக, தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்டக் கட்சிகள் வாக்காளர்களை கவர பல்வேறு யுக்திகளை செய்து வருகிறது. பிரசாரமும் சூடுப்பிடித்திருக்கிறது. இதற்கிடையில், தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இதையடுத்து, கரூர் மாவட்டம், குளித்தலை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுப்பட்டு வந்தனர்.

இந்தநிலையில், பறக்கும்படை அலுவலரான புகழேந்தி என்பவருக்கு தொலைபேசி மூலம் நேற்று ஒரு புகார் வந்துள்ளது. அதில், குளித்தலை நகராட்சிக்குட்பட்ட 8 -வது வார்டு பகுதியில் அந்த வார்டில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் சிவசங்கரி என்பவருக்கு ஆதரவாக வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக வேட்பாளர் மூலம் புடவைகள் வழங்கப்படுவதாக புகார் வந்துள்ளது. இதையடுத்து, அங்கு சென்ற பறக்கும் படை அலுவலர் புகழேந்தி மற்றும் போலீஸார், அங்குள்ள பொதுமக்களிடம் விசாரித்துள்ளனர்.

பறக்கும் படையினர் கைப்பற்றிய புடவைகள்

அப்போது, குளித்தலை பேராளம்மன் கோவில் தெரு பகுதியில் உள்ள வேட்பாளரின் கணவருக்கு சொந்தமான நகைக்கடை ஒன்றில் புடவைகள் மறைத்து வைத்திருப்பதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அந்த கடைக்குச் சென்ற அதிகாரிகள், அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 40 புடவைகளை முதலில் பறிமுதல் செய்து வந்தனர். பின்னர், மீண்டும் அந்த கடைக்கு சென்ற பறக்கும் படை அலுவலர், நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் சுப்புராம், குளித்தலை காவல் நிலைய ஆய்வாளர் காசிபாண்டியன் ஆகியோர் கடைக்குள் சென்று தீவிர சோதனை செய்தனர்.

அப்போது, அந்த கடைக்குள் மூட்டையில் சேலைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதனைதொடர்ந்து, அனைத்து புடவைகளையும் அவர்கள் பறிமுதல் செய்து, நகராட்சி அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். இந்த சோதனையில் மொத்தம் 340 புடவைகள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி நெருங்கிய நிலையில், அ.தி.மு.க வேட்பாளர் ஒருவர் பெண் வாக்காளர்களை கவர புடவை கொடுத்து சிக்கியிருப்பது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


மேலும் படிக்க ``பெண் வாக்காளர்களை கவர புடவைகள்; பதுக்கிய அதிமுக வேட்பாளர்!' - பறக்கும் படையிடம் சிக்கியது எப்படி?
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top