திருவாரூரில் திமுக தம்பதியை வென்ற அதிமுக தம்பதி! - உள்ளாட்சி சுவாரஸ்யம்

0

திருவாரூர் நகராட்சியில் கணவன் மனைவி இருவரும் வெவ்வேறு வார்டுகளில் போட்டியிட்டு, இருவருமே வெற்றிப் பெற்றிருப்பது, இப்பகுதி மக்களிடையே முக்கிய பேசுப் பொருளாக உள்ளது. திமுக-வின் கோட்டையாக கருதப்படும் திருவாரூரில் அதிமுக வேட்பாளர்களாக இந்த இருவரும் களமிறங்கி வெற்றிப் பெற்றிருப்பது சாதனையாகவே பேசப்படுகிறது. இவர்கள் போட்டியிட்ட வார்டுகளில் திமுக சார்பில் வேட்பாளர்களாக களமிறங்கி தோல்வியை சந்தித்தவர்களும் தம்பதியரே என்பது இதில் குறிப்பிட்டத்தக்கது.

வாக்கு எண்ணிக்கை மையம்

திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், மன்னார்குடி, கூத்தாநல்லூர், திருத்துறைப்பூண்டி ஆகிய நான்கு நகராட்சிகளுக்கும், வலங்கைமான், நீடாமங்கலம், பேரளம், நன்னிலம், குடவாசல், கொராடச்சேரி, முத்துப்பேட்டை ஆகிய 7 பேரூராட்சிகளுக்கும் நடைபெற்ற தேர்தலில் பெரும்பாலான வார்டுகளில் திமுக கூட்டணியே வெற்றிப் பெற்றுள்ளது.

இந்நிலையில்தான் திருவாரூர் நகராட்சி தேர்தலில் 1-வது வார்டில் அதிமுக சார்பில் சார்பில் வேட்பாளராக களமிறங்கிய கலியபெருமாளும், 2-வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்ட இவரின் மனைவி மலர்விழியும் வெற்றிப் பெற்று கவனத்தை ஈர்த்துள்ளார்கள்.

திருவாருர் நகராட்சியில் மொத்தம் 30 வார்டுகள். 1-வது வார்டில் திமுக சார்பில் வர்த்தக சங்க தலைவர் பாலமுருகன் வேட்பாளராக போட்டியிட்டார். இவரை எதிர்த்து, கூட்டுறவு சங்க தலைவர் கலியபெருமாள் களமிறங்கினார். 2-வது வார்டில் பாலமுருகனின் மனைவி கவிதா, திமுக வேட்பாளராக போட்டியிட்டார். இதே வார்டில் அதிமுக வேட்பாளராக கலியபெருமாளின் மனைவி மலர்விழி போட்டியிட்டார். சபாஷ்... சரியான போட்டி...

இந்த இரு தம்பதிகளில் எந்த தம்பதி வெற்றிப் பெறப் போகிறது என எதிர்பார்ப்பு எகிறியது. இந்த இரு தம்பதியரில் கணவனோ, மனைவியொ தோற்கக்கூடும் எனவும் பேச்சு நிலவியது. கலியபெருமாள் - மலர்விழி தம்பதி, பாலமுருகன் - கவிதா என இரு தம்பதியருமே திருவாரூரில் நன்கு அறியப்பட்டவர்கள்.

அதிமுக தம்பதி

குறிப்பாக இவர்கள் போட்டியிட்ட வார்டு மக்களிடம் நன்கு பரிச்சயமானவர்கள்.... தமிழ்நாட்டின் இரண்டு பெரிய கட்சிகளின் வேட்பாளர்களவும் களமிறங்கியதால், இவர்கள் யார் யார் வெற்றிப் பெறுவார்கள் என்பதை கணிக்க முடியாத நிலை இருந்தது. இந்நிலையில்தான் வாக்கு எண்ணிக்கையில், கலியபெருமாள் - மலர்விழி தம்பதியர் வெற்றிப் பெற்றுள்ளார்கள். இதனால் இவர்களது வீடு வெற்றிக் கொண்டாடத்தில் திளைத்துக் கொண்டிருக்கிறது. உறவினர்கள், இவர்களது குடும்ப நண்பர்கள், அதிமுக முக்கிய பிரமுகர்களும் வாழ்த்துகளை குவித்து வருகிறார்கள்.

இதேபோல் திருவாரூர் நகர்மன்ற தேர்தலில் திமுக தம்பதியர் வெற்றிப் பெற்றுள்ளார்கள். அதாவது, 14-வது வார்டில் செந்திலும், 9 வார்டில் போட்டியிட்ட இவருடைய மனைவி புவனபிரியாவும் வெற்றிப் பெற்றுள்ளார்கள்.


மேலும் படிக்க திருவாரூரில் திமுக தம்பதியை வென்ற அதிமுக தம்பதி! - உள்ளாட்சி சுவாரஸ்யம்
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top