உக்ரைன் - ரஷ்ய போர்: `எங்கள் பிள்ளைகளை மீட்டுத் தாருங்கள்!’ - தமிழக பெற்றோர்கள் கண்ணீர்

0

``உக்ரைனில் படிக்க சென்றுள்ள எங்கள் பிள்ளைகளை மீட்டு தாருங்கள்" என்று தமிழகத்தின் பல மாவட்டங்களில் பெற்றோர்கள் பதறியபடி அரசிடம் முறையிட்டு வரும் சம்பவங்கள் வேதனையை ஏற்படுத்தி வருகிறது.

மாவட்ட அதிகாரியிடம் மனு கொடுக்கிறார்கள்

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதால் அங்குள்ள மக்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள பாதுகாப்பான இடங்களுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். அங்கு கல்வி கற்க சென்ற இந்திய மாணவர்களும் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் சிலர் வந்துவிட்ட நிலையில் பலர் அங்கு சிக்கிக்கொண்டு உறவினர்களை தொடர்புகொண்டு பதற்றத்துடன் பேசி வருகிறார்கள்.

உக்ரைனில் படிக்கும் தங்கள் மகனை மீட்டுத்தர வேண்டி, மதுரை கலெக்டரிடம் மனு கொடுக்க வந்த தெற்குவாசல் பகுதியை சேர்ந்த சகஜெயந்திரன்-விஜயலட்சுமி தம்பதியிடம் பேசினோம், ``எங்கள் மகன் பங்கஜநாபன், ஏரோநாட்டிக்கல் எஞ்சினியரிங் படிப்பை உக்ரைனில் படித்து வருகிறார். இதுதான் ஃபைனல் இயர்.

உக்ரைன் : தாக்குதல் நடைபெற்ற இடம்

இப்போது அங்கு போர் நடப்பதாக கேள்விப்பட்டதிலிருந்து பதறிப்போனோம். போர் வருவதற்கு சில நாள்களுக்கு முன்பே இந்தியாவுக்கு வந்துவிடு என்று அவனிடம் சொன்னோம். போர் வராது, கவலைப்பட வேண்டாம் என்று கல்லூரி நிர்வாகம் தெரிவித்ததாக சொன்னான்.

தற்போது அங்கு போர் தொடங்கி விட்டதால் அவனைப்போல் கல்லூரியில் படிக்கும் பல மாணவர்கள் சொந்த நாடுகளுக்கு செல்ல முயற்சித்து வருகிறார்கள். ஆனால், எப்போது எப்படி வருவார்கள் என்று தெரியவில்லை.

பங்கஜ நாபன்

அவனிடம் போனில் பேசியபோது உயிரைக் காப்பாற்ற பதுங்கு குழியில் தங்கியிருப்பதாகவும் எங்களை எப்படியாவது மீட்க முயற்சி செய்யுங்கள் என்றும் சொன்னான். அதை கேட்டபோது எங்களுக்கு தூக்கிவாரி போட்டது.

அதற்குப்பிறகு அவனுடன் போனில் பேச முடியவில்லை. அதான் மகனை காப்பாற்றி தாருங்கள் என்று கலெக்டரிடம் முறையிட்டுள்ளோம். மத்திய மாநில அரசுகள் உதவ வேண்டும்." என்றார்.

சஜூ குமார்

மதுரை வில்லாபுரம் வைகை வீதி ராஜீவ்குமார் - லீலா தம்பதியினரின் மகன் சஜூ குமாரும் உக்ரைனில் எம்பிஏ படிக்க சென்று போர்ச்சூழலில் சிக்கியுள்ளார். அவரை மீட்டுத்தரவும் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளார்கள். "எங்கள் மகன் ஊருக்கு வர விமான டிக்கெட் புக் செய்திருந்தான். போர் மூண்டுவிட்டதால் விமானம் ரத்தாகிவிட்டது. தற்போது உயிரை காப்பாற்றிக் கொள்ள நண்பர்களுடன் பதுங்கு குழியில் தங்கியுள்ளான்.

இந்திய தூதரகம் மூலம் நாடு திரும்ப ஏற்பாடு நடப்பதாக சொன்னான். ஆனால் அதற்கான ஏற்பாடுகள் நடக்கிறதா என்று தெரியவில்லை. அங்கு ஏடிம் எல்லாம் முடங்கி விட்டதால் பணம் எடுக்க முடியாமல் கஷ்டப்படுவதாக கூறினான். அரசு எங்கள் மகனை மீட்டுத் தர வேண்டும்." என்றார்.

இதேபோல் உக்ரைனில் எம்பிபிஎஸ் படிக்க சென்ற உசிலம்பட்டியை சேர்ந்த தங்கள் மகன்கள் கபில்நாத், தீபன் சக்கரவர்த்தி இருவரையும் மீட்டுத்தரும்படி அவர்களின் பெற்றோர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

மனு கொடுத்த பெற்றோர்கள்

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் அங்கு சிக்கி தவித்து வருகிறார்கள். அவர்களை விரைந்து மீட்டு வர மதுரை எம்பி சு.வெங்கடேசன் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மாணவர்கள் தமிழகம் திரும்பும் செலவை அரசே ஏற்றுக்கொள்ளும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மத்திய அரசின் வெளியுறவுத்துறை மாணவர்களை பத்திரமாக இந்தியாவுக்கு மீட்டுவர ஏற்பாடுகளை செய்து வருகிறது.


மேலும் படிக்க உக்ரைன் - ரஷ்ய போர்: `எங்கள் பிள்ளைகளை மீட்டுத் தாருங்கள்!’ - தமிழக பெற்றோர்கள் கண்ணீர்
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top