நெல்லை: உடலில் கல்லைக் கட்டி ஆற்றில் வீசி கொலை செய்யபட்ட நபர்! - திருமணம் மீறிய உறவு காரணமா?!

0

நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே தாமிரபரணி வெள்ளநீர் கால்வாய் செல்வதற்கான பணிகள் நடந்து வருகின்றன. அதனால் அந்த கால்வாயில் மழைநீர் தேங்கிக் கிடக்கிறது. அதில் ஆண் ஒருவரின் உடல் மிதந்தபடி கிடப்பதை அப்பகுதி வழியாகச் சென்ற பொதுமக்கள் பார்த்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

கொலை நடந்த இடம்

முன்னீர்பள்ளம் காவல்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று பார்த்தபோது 35 வயது மதிக்கத்தக்க ஒருவரின் உடல் கிடந்துள்ளது. அவரின் உடலில் துண்டு மூலம் கற்கள் கட்டப்பட்டுள்ளன. ஆனாலும் ஓரிரு நாள் ஆனதால் உடல் மிதந்து வெளியே வந்திருக்கிறது. உடலைக் கைப்பற்றிய போலீஸார் உடற்கூறு ஆய்வுக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

தொடக்கத்தில், அந்த வழியாகச் சென்ற யாராவது நீச்சல் தெரியாமலோ அல்லது கால்வாயில் தவறி விழுந்தோ உயிரிழந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணையைத் தொடங்கியபோதிலும், சாதாரணமானவர்கள் அந்த காட்டுப் பகுதிக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை என்பதால் கொலை செய்யப்பட்டு இருக்கக்கூடும் என்ற சந்தேகத்திலும் விசாரணை நடத்தினார்கள். மேலும் அந்தப் பகுதியில் கிடைத்த செல்போன் உதவியுடனும் விசாரணை விரிவடைந்தது.

முதல்கட்ட விசாரணையில், சடலமாக மீட்கப்பட்ட நபர் திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள அக்கமநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமாராக இருக்கலாம் என்பது தெரியவந்தது. பா.ஜ.க-வில் முக்கிய பொறுப்பு வகித்த அவர், கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்துள்ளார். அதற்காக நெல்லை வந்த அவரை யாரேனும் கொலை செய்தார்களா என்ற கோணத்தில் விசாரித்தனர்.

காவல்துறை விசாரணையில் செந்தில்குமார், மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வருவது தெரியவந்தது. அத்துடன் அவருக்கு கரூரை சேர்ந்த ஒரு பெண்ணுடன் திருமணம் மீறிய உறவு இருப்பதும் அவர்களுக்குள் அடிக்கடி சண்டை நடந்ததும் தெரியவந்தது. சமீபத்தில் அந்தப் பெண், செந்தில்குமாரை ஆபாசமாக திட்டிய ஆடியோவும் போலீஸாருக்கு கிடைத்தது.

கொலை நடந்த கால்வாய்

நெல்லையைச் சேர்ந்த ஒரு பெண்ணுடனும் செந்தில்குமாருக்கு தொடர்பு இருந்ததாகவும் போலீஸார் தெரிவிக்கிறார்கள். அதனால் திருமணம் மீறிய உறவு காரணமாகவே இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை தொடர்கிறது. இருப்பினும், இறந்தது செந்தில்குமார் தானா என்பதை உறுதிப்படுத்துவதற்காக அவரின் மனைவியும் சகோதரரும் நெல்லைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் உறுதிப்படுத்திய பின்னரே அடுத்தகட்ட விசாரணை நடக்கும் என்றும் கொலையாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


மேலும் படிக்க நெல்லை: உடலில் கல்லைக் கட்டி ஆற்றில் வீசி கொலை செய்யபட்ட நபர்! - திருமணம் மீறிய உறவு காரணமா?!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top