குத்தாலம் ஸ்ரீஉத்தவேதீஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம்: தோல்நோய்க்கு அருமருந்து என்ற சித்தர் வாக்கு!

0

கோயில்களிலுள்ள தலவிருட்ச வழிபாடு என்பது நம்நாட்டின் தொன்மையான இயற்கை சார்ந்த வழிபாடுகளில் ஒன்று. ஆலயங்களில் இறையுருக்களுக்கு இணையாக அந்தந்தத் தலங்களுக்கு உரிய விருட்சங்களும் வழிபடப்பெறுவது தொன் மரபாகவே உள்ளது. அவ்வகையில் மயிலாடுதுறை அருகிலுள்ள குத்தாலம் எனும் தலத்தில் ஸ்ரீ அம்ருத முகிழாம்பிகா ஸமேத ஸ்ரீ உத்தவேதீஸ்வரர் ஆலயத்தில் உள்ள 'உத்தாலமரம்' தெய்விகத் தன்மை உடைய விருட்சமாகப் போற்றப்படுகிறது.

'உத்தாலம்' என்பது 'ஆத்தி' எனச் சொல்லப்பெறும் தாவரக் குடும்பத்தினைச் சார்ந்த மரம். இம்மரம் ஏராளமான மருத்துவ குணங்களைத் தன்னுள் கொண்டுள்ளது. குறு மரங்களாகப் படர்ந்து வளரும் தன்மை கொண்டது.

'கார்டியா சைனென்ஸிஸ்' (cordia sinensis) - (போரோஜினேசியே) எனும் தாவரவியல் பெயர் உடைய இத்தாவரம் ஆங்கிலத்தில் லாங் லீப் கார்டியா (long leaf cordia or long leaf saucer berry) என்றழைக்கப்பெறுகிறது. இதன் வெண்ணிற பூக்களை உட்கொள்வதால் சரும வியாதிகள் பறந்தோடி விடும் என்பது சித்தர் வாக்கு. மஞ்சளும் ஆரஞ்சு நிறமும் கலந்த நிறமுடைய பழங்கள் உண்பதற்கு சுவை மிகுந்தவை. உடலைத் தேற்றி பலம் அளிக்க வல்லவை. இதன் இலைகளும் பூக்களும் பூஜிப்பதற்கு உரியவை. தேவருலகினருக்கு உரிய விருட்சங்களில் இதுவும் ஒன்று.

திருத்தலங்கள் குத்தாலம்

இதனுடைய மலர்களைத் தொடர்ந்து உட்கொள்வதால் கடும் தோல் நோய்களும் அகலும் என்பது நம்பிக்கை.

வருடத்திற்கு ஒருமுறை குறிப்பிட்ட (கோடை) பருவத்தில் மட்டுமே மலர்களை உதிர்க்கும் தன்மை கொண்டது இம்மரம்.

தர்ம நெறிக்கு மட்டுமே கட்டுப்படுகின்ற சத்திய மரம் இது என்கின்றனர். இத்தலத்தில் முற்காலத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரேயொரு காய் மட்டும் காய்த்து வந்துள்ளது இந்த உத்தால மரம். தற்போது காய்ப்பதில்லை என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று.

இதன் இலைப்பற்று படை, சொறி, சிரங்கு போன்ற சரும வியாதிகளுக்கு அருமருந்து என்கின்றனர். இத்தலத்து பதுமதீர்த்தத்தில் நீராடி வழிபட்ட பின்னரே சுந்தரமூர்த்தி நாயனார் தனது தோல்நோயைப் போக்கிக் கொண்ட வரலாறும் பேசப்படுகின்றது. 

புராணகாலத்தில், உத்தால மரங்கள் நிறைந்த காடாக இருந்தமையால் 'உத்தால வனம்' என்று சொல்லப்பெற்றது இப்பகுதி. காலப்போக்கில் 'உத்தாலம்' எனும் பெயர் திரிந்து 'குத்தாலம்' என ஆயிற்று என்பர். இறையின் கட்டளைப்படி, பசுவுரு நீங்கிய பின்னர் பரத முனிவரின் மகளாகப் பிறந்த உமையம்மை காவிரிக் கரையில், உத்தால மரத்தின் அடியில் சிவபூஜை செய்தவண்ணம் தவமியற்ற, குறித்த காலத்தில் அம்மை பூஜித்த லிங்கத்திலிருந்து இறைவன் ஆவிர்பவிக்கிறார்.  அம்பிகையை காந்தர்வ விவாகம் புரிகிறார்.

ஸ்ரீஉத்தவேதீஸ்வரர்

ஆயினும் விண்ணவரும், மண்ணவரும் அறியத் திருமணம் செய்தருள வேண்டும் என்ற பரத்வாஜ முனிவரின் வேண்டுகோளை ஏற்று, குறிப்பிட்ட நாளில் திருமணக்கோலம் காட்டுவதாக அருளியபின் பெருமான் அந்தர்த்யானம் ஆகிவிடுகிறார். ஆயினும் சிவபெருமானைத் தொடர்ந்து நிழலாக வந்த அவரது திருக்குடை உத்தால மரமாகவும், அவரின் திருவடிகளைத் தாங்கியபடி வந்த வேதமானது திருப்பாதரக்ஷைகளாகவும், பெருமான் அந்தர்த்யானம் ஆகும்போது அவருடன் மீண்டும் செல்லாமல் இத்தலத்திலேயே  தங்கிவிட்டன என்பது புராண வரலாறு. உலகினை உய்விக்க வல்லதோர் தெய்வத்திருமணம் நடைபெற்றதற்கு அடையாளமாக, இறையின் திருவுளப்படி தங்கிய இத்திருச்சின்னங்களை இன்றும் இக்கோயிலில்  முன்பகுதியிலேயே தரிசிக்கலாம். அதுபோன்றே, கார்த்திகை மாதத்துக் கடைவெள்ளியில் இத்தலத்து உத்தால மரத்தினை  வழிபடுவோர் திருமண தோஷங்கள் நீங்கப் பெறுவதும், சத்புத்திர ப்ராப்தி பெறுவதும் இன்றளவும் கண்கூடு.

அத்தகைய சிறப்புமிக்க இக்கோயிலின் கும்பாபிஷேகத்தை நடத்தத் திருக்கயிலாயப் பரம்பரைத் தருமபுரம் ஆதீனம் ஏற்பாடு செய்து வருகிறார். 1960-ம் வருடம் கும்பாபிஷேகம் கண்ட 62 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது எதிர்வரும் 8.5.2022 அன்று கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது என்பது மகிழ்ச்சியூட்டும் செய்தியாகும்.

மேலும் படிக்க குத்தாலம் ஸ்ரீஉத்தவேதீஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம்: தோல்நோய்க்கு அருமருந்து என்ற சித்தர் வாக்கு!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top