``நேர்மையானவர்களுக்கு வாக்கு கேட்டு கெஞ்ச வச்சுட்டீங்க..!" - மதுரையில் கமல்ஹாசன்

0

``கொரோனாவை விட மக்களிடம் தைரியம் வேகமாக பரவட்டும்" என்று மதுரை மாநகராட்சி தேர்தல் பரப்புரையின்போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேசினார்.

கமல்ஹாசன்

மதுரை மாநகராட்சியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து முதல்கட்ட பரப்புரையை திருப்பரங்குன்றத்தில் தொடங்கிய கமல் பேசும்போது, ``மாநகராட்சியில் வார்டு சபை அமைத்து, வார்டுகளில் செலவான கணக்குகளை மக்களிடையே நேரடியாக சொல்ல வைப்பேன். சொல்லவில்லை என்றால் நான் செய்ய வேண்டியதை செய்வேன்.

ஏனென்றால், அது மன்னிக்க கூடாத குற்றம். அதை எங்கள் கட்சியில் இருந்து யாரையும் செய்ய விடமாட்டேன். அந்த வாக்குறுதியுடன்தான் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளார்கள்.

கமல் பரப்புரை

ஒரு வார்டில் எவ்வளவு செலவு செய்யப்பட்டது என்னென்ன செலவு செய்யப்பட்டுள்ளது என கூற நாங்கள் தயார். அவர்கள் தயாரா? எத்தனை கழகங்கள் உள்ளது? எல்லாம் வியாபாரம். அவர்கள் இப்படி கூறத் தயாராக இருக்கிறார்களா?

மக்கள் நீதி மய்ய வேட்பாளர்கள் கட்சிக்காக நிற்கவில்லை. மக்களுக்காக நிற்கின்றனர். அந்த பிரதிநிதிகள் சார்ந்திருக்கும் குடும்பத்தின் பெயர்தான் மக்கள் நீதி மய்யம்.

கமல் ஹாசன்

நான் எதற்கு அரசியலுக்கு வந்தேன். சந்தோஷமத்தானே என்னை வச்சிருந்தீங்க. எனக்கு புகழுக்கு பஞ்சமா? பணத்துக்கு பஞ்சமா? நான் வாழ்ந்ததற்கான அடையாளத்தை காட்ட அரசியலுக்கு வந்தேன். இந்த வண்டி கூட நீங்க கொடுத்த காசுல வாங்கினதுதான்.

சினிமாவுல கூத்தாடிட்டு அது போதும்னு நினைக்கல. மக்களுக்கு நன்றி சொல்லனும்னு நினைச்சேன். வாழ்க்கையில் நானும் மனிதனாக வாழ்ந்தேன் என்ற அர்த்தத்திற்காக அரசியலுக்கு வந்தேன். நேர்மையாளர்களுக்கு வாக்கு கேட்டு கெஞ்ச வச்சுட்டீங்க.

மறுபடியும் வெற்றி பெற வையுங்கள் என கர்வத்துடன் கேட்க வேண்டிய என்னை, வியாபரத்திற்காக வாக்கு கேட்கும் அவர்களுக்கும் எனக்கும் வித்தியாசம் இல்லாத மாதிரி கெஞ்ச விட்டீங்க. நான் நாளைய தலைமுறைகளுக்காக கெஞ்சிக் கொண்டிருக்கிறேன்.

கமல் பரப்புரை

மக்களுக்கு அதிகாரம் வழங்கக்கூடிய தைரியம் மக்கள் நீதி மய்யத்திற்கு மட்டும்தான் இருக்கு.

மக்களுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும். கேள்வி கேட்பதற்கும் மாற்றம் செய்வதற்கும் உங்களுக்கு அதிகாரம் இருக்க வேண்டும்.

தூங்கா நகரம் என்பது மக்கள் எப்பொழுதும் தூங்காமல் இருப்பதற்கு அல்ல. சந்தோஷமாக தூங்காமல் இருக்க வேண்டும். இங்கு மனசாட்சி மட்டும் தூங்கிக் கொண்டிருக்கிறது. நகரம் தூங்காமல் உள்ளது. எல்லாரும் மனசாட்சியை தட்டி எழுப்பவேண்டும்.

நீங்கள் பயந்து நின்றீர்கள் என்றால் அப்படியே செல்வார்கள். தைரியத்துடன் கேளுங்கள். கொரோனா விட தைரியம் வேகமாக பரவட்டும், நாளை நமது ஆகும்" என்றார்.


மேலும் படிக்க ``நேர்மையானவர்களுக்கு வாக்கு கேட்டு கெஞ்ச வச்சுட்டீங்க..!" - மதுரையில் கமல்ஹாசன்
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top