அரியலூர் மாணவி தற்கொலை வழக்கு: விடுதி வார்டனுக்கு ஜாமீன் வழங்கி தஞ்சாவூர் நீதிமன்றம் உத்தரவு

0

தஞ்சாவூர் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த அரியலூர் மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பள்ளி நிர்வாகத்தின் கீழ் செயல்படும் ஹாஸ்டல் வார்டன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் வார்டனுக்கு தஞ்சாவூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. மேலும் பள்ளி நிர்வாகிக்கும் முன் ஜாமீன் வழங்கியிருப்பதும் குறிப்பிடதக்கது.

தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை

தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல்பட்டி, துாய இருதய மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்த அரியலுார் மாவட்டம் வடுகபாளையயம் கிராமத்தை சேர்ந்த,17 வயது மாணவி ஒருவர் பூச்சி மருந்து குடித்து தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 19-ம் தேதி உயிரிழந்தார். மாணவியின் தற்கொலைக்கு அவர் தங்கி படித்த ஹாஸ்டல் வார்டன் மதம் மாற சொல்லி கட்டாயப்படுத்தியதே காரணம் என சர்ச்சை எழுந்தது.

இது தொடர்பாக இறப்பதற்கு முன்பு அந்த மாணவி பேசிய இரண்டு வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மதம் மாற சொல்லி அழுத்தம் கொடுத்ததால் தான் மாணவி தற்கொலை செய்து கொண்டார் என பாஜக, விஷ்வ இந்து பரிஷத் உள்ளிட்டோர் இதனை கையில் எடுத்து போராட்டம் நடத்தினர். `மதம் மாற சொல்லி வற்புறுத்தியதே மகள் தற்கொலை செய்து கொண்டதாக’ மாணவியின் பெற்றோரும் புகார் எழுப்பினர்.

Also Read: அரியலூர் மாணவி தற்கொலை விவகாரம்: அதி தீவிரம் காட்டும் அண்ணாமலை! - என்ன காரணம்?

இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மாணவியின் தந்தை முருகானந்தம் வழக்குத் தொடர்ந்திருந்தார். விசாரணையில், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டது. தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய குழுவினரும் 20-க்கும் மேற்பட்ட தரப்பினரிடம் விசாரணை நடத்தினர். மாணவி தற்கொலை விவகாரத்தில் இருவிதமான கருத்துக்கள் நிலவிய நிலையில் பாஜக சார்பில் அமைக்கப்பட்டிருந்த அக்கட்சியை சேர்ந்த நான்கு பேர் கொண்ட குழுவினரும் தஞ்சாவூர் வந்து விசாரணை மேற்கொண்டனர்.

இதனிடையே, தஞ்சாவூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், ஜாமீன் கோரி ஹாஸ்டல் வார்டனான சகாயமேரி மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீது நடைபெற்ற விசாரணையில் சகாயமேரிக்கு நீதிபதி மதுசூதனன் ஜாமீன் வழங்கினார். இதே போல் பள்ளி நிர்வாகியான ராக்கேல்மேரி மீதும் புகார் எழுப்பப்பட்டு, அவரையும் கைது செய்ய வேண்டும் எனப் மாணவியின் பெற்றோர், பாஜகவினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

பாஜக குழுவை சேர்ந்த விஜயசாந்தி

இந்நிலையில், ராக்கேல் மேரியும் முன் ஜாமீன் கோரி தஞ்சாவூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதுதொடர்பாகவும் நடைபெற்ற விசாரணையில் ராக்கேல்மேரிக்கும் முன் ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.


மேலும் படிக்க அரியலூர் மாணவி தற்கொலை வழக்கு: விடுதி வார்டனுக்கு ஜாமீன் வழங்கி தஞ்சாவூர் நீதிமன்றம் உத்தரவு
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top