IPL Auction 2022: U19 சாம்பியன், அதிரடியான ஆல்ரவுண்டர்... 6.5 கோடிக்கு ஏலம் போன அபிஷேக் சர்மா யார்?

0
ஐ.பி.எல் மெகா ஏலம் பெங்களூருவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் சில இளம் வீரர்கள் எதிர்பாராத வகையில் ஆச்சர்யமளிக்கும் வகையில் அதிக தொகைக்கு அணிகளால் வாங்கப்பட்டு வருகின்றனர். அதிலும், குறிப்பாக பஞ்சாபை சேர்ந்த இளம் வீரரான அபிஷேக் சர்மா 6.5 கோடி ரூபாய்க்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் வாங்கப்பட்டிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

21 வயதாகும் அபிஷேக் சர்மா Uncapped All Rounders எனும் பட்டியலில் ஏலத்திற்கு வந்திருந்தார். அவரின் அடிப்படை விலை 20 லட்சம் மட்டுமே. இவரை ஏலத்தில் எடுக்க பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் அணிகளுக்கிடையே கடும்போட்டி நிலவியது. 5.25 கோடி வரை தாக்குப்பிடித்த பஞ்சாப் அணி அத்தோடு பின்வாங்கியது. 5.5 கோடிக்கு அபிஷேக்கை இழுத்துவிடலாம் என சன்ரைசர்ஸ் நினைக்க, திடீரென குஜராத் டைட்டன்ஸ் உள்ளே புகுந்து இன்னும் விலையை ஏற்றியது. ஆனாலும், சன்ரைசர்ஸ் அசரவில்லை. தொடர்ந்து முயன்றது. கடைசியில் சன்ரைசர்ஸே வென்றது.

Abhishek Sharma, VVS Laxman
அபிஷேக் தனது அடிப்படை விலையான 20 லட்சத்திலிருந்து ஏறக்குறைய 30 மடங்கிற்கும் அதிகமாக 6.5 கோடி ரூபாய்க்கு சன்ரைசர்ஸ் அணியால் வாங்கப்பட்டார். டேவிட் வார்னரே 6.25 கோடிக்குதான் ஏலம் போயிருக்கும் நிலையில், பெரிதாக அறியப்படாத அபிஷேக் சர்மாவிற்கு இவ்வளவு மவுசு ஏன்? சன்ரைசர்ஸ் ஏன் விடாப்பிடியாக அவரை எடுப்பதில் உறுதியாக இருந்தது?

அபிஷேக் சர்மா பஞ்சாபைச் சேர்ந்தவர். இவருடைய அப்பாவும் ஒரு கிரிக்கெட்டரே. அப்பாவை போன்றே அபிஷேக் சர்மாவும் ஒரு இடதுகை ஸ்பின்னராகவே கிரிக்கெட் ஆடத் தொடங்கியிருக்கிறார். யுவராஜ் சிங்கின் ரசிகரான இவர், பின்னாட்களில் பேட்டிங்கிலும் கவனம் செலுத்தி ஒரு ஆல்ரவுண்டராக கலக்கத் தொடங்கினார். 2018 U19 உலகக்கோப்பையில் ஆடிய இந்திய அணியில் அபிஷேக் சர்மாவும் இடம்பெற்றிருந்தார். அந்தத் தொடரில் 5 விக்கெட்டுகளை எடுத்ததோடு மிடில் ஆர்டரில் சில முக்கியமான இன்னிங்ஸ்களையும் ஆடியிருந்தார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டி ஒன்றில் வெறும் 8 பந்துகளில் 23 ரன்களை எடுத்திருப்பார். வங்கதேசத்திற்கு எதிராக தொடர்ச்சியாக விக்கெட்டுகள் விழுந்தபோது நிலைத்து நின்று ஆடி ஓர் அரைசதத்தையும் அடித்திருப்பார். அந்த உலகக்கோப்பையை இந்திய அணி வென்றிருக்கும்.

அந்த அணியில் ஆடிய ப்ரித்திவி ஷா, சுப்மன் கில், நாகர்கோட்டி எனப் பல வீரர்களும் அந்த ஆண்டு நடந்த ஐ.பி.எல் ஏலத்தில் பல அணிகளாலும் வாங்கப்பட்டனர். அபிஷேக் சர்மாவையும் டெல்லி அணி 55 லட்சத்திற்கு ஏலத்தில் வாங்கியிருந்தது.

அந்த 2018 ஐ.பி.எல் சீசனில் அபிஷேக் சர்மாவிற்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவே இல்லை. மூன்று போட்டிகளில் மட்டுமே ஆடியிருந்தார். ஆனால், தனது பெயரை அழுத்தமாக பதிவு செய்யும் வகையில் அவற்றில் பெர்ஃபார்ம் செய்திருந்தார்.

மூன்று போட்டிகளில் மட்டுமே ஆடிய அபிஷேக் சர்மாவின் ஸ்ட்ரைக் ரேட் 190 க்கும் மேல் இருந்தது. பெங்களூருவிற்கு எதிரான ஒரு போட்டியில் 19 பந்துகளில் 46 ரன்களை எடுத்து அசத்தியிருப்பார்.
Abhishek Sharma

இந்த ஒரு இன்னிங்ஸ் பலரின் கவனத்தையும் ஈர்த்தது. அந்த சீசன் முடிந்த பிறகு டெல்லியிடம் தவானை டிரேடிங் செய்துவிட்டு அவருக்கு பதிலாக விஜய் சங்கர், அபிஷேக் சர்மா, சபாஷ் நதீம் ஆகியோரை சன்ரைசர்ஸ் வாங்கியிருந்தது. கடந்த மூன்று வருடங்களாக அபிஷேக் சர்மா சன்ரைசர்ஸ் அணிக்காகவே ஆடி வருகிறார். அத்தனை போட்டிகளிலும் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் கிடைக்கின்ற ஒரு சில போட்டிகளில் அதிரடி சரவெடியாக வெடித்திருப்பார். கடைசியாக அபிஷேக் சர்மாவை சன்ரைசர்ஸ் அணி ஓப்பனராகவெல்லாம் ஆக்கியிருந்தது. மும்பைக்கு எதிரான ஒரு போட்டியில் 16 பந்துகளில் 33 ரன்களை அடித்திருப்பார்.

யுவராஜின் ரசிகரான அபிஷேக்கிற்கு யுவராஜே பல சமயங்களில் ஆலோசனை கூறி பயிற்சிகளை வழங்கியிருக்கிறார். அபிஷேக் அநாயாசமாக அடிக்கும் சில சிக்சர்களை பார்க்கும்போது யுவராஜின் சாயல் அப்படியே இருக்கும்.

ஐ.பி.எல் ஐ தாண்டி உள்ளூர் போட்டிகளிலும் கடந்த 2021-ம் ஆண்டில் சிறப்பாக ஆடியிருக்கிறார். கடந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற விஜய் ஹசாரே தொடரில் மத்தியபிரதேசத்திற்கு எதிராக 42 பந்துகளில் சதமடித்திருப்பார். உள்ளூர் போட்டிகளில் அதிவேகமாக அடிக்கப்பட்ட இரண்டாவது சதம் இதுவாகும். டிசம்பரில் நடைபெற்ற விஜய் ஹசாரே தொடரில் சர்வீஸஸிற்கு எதிராக 117 பந்துகளில் 169 ரன்களை அடித்து மிரட்டியிருந்தார். சையத் முஷ்தாக் அலி தொடரிலுமே அதிரடியாக ஆடியிருந்தார். புதுச்சேரிக்கு எதிரான போட்டியில் 33 பந்துகளில் 54 ரன்களை எடுத்திருப்பார். இந்தத் தொடரில் பேட்டிங்கோடு சேர்த்து இடது கை ஸ்பின்னராகவும் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆல்ரவுண்டராகவும் ஜொலித்திருப்பார்.

Abhishek Sharma

ஏற்கெனவே சன்ரைசர்ஸ் அணிக்கு ஆடியிருப்பதாலும் சமீபத்தில் நடந்த உள்ளூர் தொடர்களில் நன்றாக பெர்ஃபார்ம் செய்திருப்பதாலுமே சன்ரைசர்ஸ் அணி இவரை குறிவைத்தது. ஒரு ஆல்ரவுண்டராக பேட்டிங் பௌலிங் என இரண்டு பாக்ஸ்களிலும் டிக் அடிப்பதோடு மட்டுமல்லாமல் மேலிருந்து கீழ் வரை எங்கேயும் பேட்டிங் ஆடக்கூடியவர். வெளிநாட்டு வீரர்களால் நிரம்பியிருந்த டாப் ஆர்டர் மற்றும் உடைசலான மிடில் ஆர்டரை கொண்டிருந்த சன்ரைசர்ஸ் அணிக்கு இப்படி ஒரு இந்திய வீரர் தேவைப்பட்டார். அணியின் தேவையை பொருட்டு எந்த ஆர்டரிலும் இவரை பயன்படுத்திக் கொள்ள முடியும். இவையெல்லாமும் சேர்ந்துதான் அபிஷேக் சர்மாவிற்கு சன்ரைசர்ஸை அத்தனை கோடி வரை தயக்கமின்றி செல்ல வைத்தது.

கோடீஸ்வரன் ஆகியிருக்கும் அபிஷேக்கிற்கு வாழ்த்துகள்!

மேலும் படிக்க IPL Auction 2022: U19 சாம்பியன், அதிரடியான ஆல்ரவுண்டர்... 6.5 கோடிக்கு ஏலம் போன அபிஷேக் சர்மா யார்?
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top