மெரினா | மினி கதை #MyVikatan

0

ஞாயிறு என்பதால் இரவு 9 மணியைக் கடந்தும், மக்கள் கூட்டம் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தது.

'பிளாஸ்டிக்' பாட்டில் ஒன்றை முன்னும் பின்னுமாக இழுத்துப் போட்டு விளையாடிக் கொண்டிருந்தன கடல் அலைகள். அடித்து வரப்பட்ட நண்டு ஒன்று, முழு பலத்துடன் கரையைக் கடக்க முயற்சி செய்துகொண்டிருந்தது. நிலவொளியில் வெள்ளி காசுகளைப் போல, கரையெங்கும் கூழாங்கற்கள் மின்னிக் கொண்டிருந்தன.

'காதலின் தீபம் ஒன்று ஏற்றினாலே என் நெஞ்சில்...

காதலின் தீபம் ஒன்று ஏற்றினாலே என் நெஞ்சில்...'

- தள்ளுவண்டியில் இளையராஜாவின் பாடல், கடலோசை விடவும் ரம்மியமாக ஒலித்துத் கொண்டிருந்தது.

கரையோரம் இருந்த படகுகள், ஒன்றை ஒன்று பார்த்தபடி இருந்தன. அதில் உடைந்து போன படகின் ஒரு பகுதி மட்டும் மண்ணுக்கடியில் புதைந்து இருந்தது. உடைந்த அந்த படகின் ஒரு ஓரமாக, மல்லாந்து படுத்தபடி கடல் காற்றை அனுபவித்துக் கொண்டிருந்தான் அவன். அவன் தோளில் இருந்த பையில், காலி பாட்டில்கள் பல சேகரிக்கப் பட்டிருந்தன.

பஞ்சுமிட்டாயுடன் அவனருகில் வந்த ஒரு சிறுமி, 'வேண்டுமா?' என கேட்பதைப்போல கை நீட்டினாள். தலை சொரிந்தபடி அதை வாங்கிய அவன் முகம் முழுக்க தாடி பரவியிருந்ததால், அவன் சிரிப்பதை அவள் பார்த்திருக்க வாய்ப்பில்லை. திடீரென அங்கு வந்த ஒருவர், அவன் கையிலிருந்த பஞ்சுமிட்டாயைப் பிடுங்கினார். கண்ணத்தில் ஓங்கி ஒரு அறை!

அவன் சார்பாக அழுத அந்த சிறுமியை தூக்கிக் கொண்டு புறப்பட்டார் அவர். நேற்றுப் பறித்த ரோஜாவைப் போல அவனது முகம் வாடியது. சிறிது நேரம் அமைதியாக இருந்தான். பொறியில் அகப்பட்ட எலி ஒன்று, 'கீச் கீச்...' என கத்துவதைப் போன்ற சத்தம் அவனது அமைதியைக் கலைத்தது.

marina

திருமணநாள் இரவுக்காக, முன்பே ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தனர் இருவர். அதைக் கண்டதும், வாடிப்போன அவன் முகம் மீண்டும் மலர்ந்தது. தனக்குத் தானே வெட்கச் சிரிப்பை உதிர்த்தான்.

பையை தூக்கிக் கொண்டு அங்கிருந்து புறப்பட்ட அவனுக்கு,'சுண்டல், சுண்டல்...' என்று கூவிய சிறுவனின் வார்த்தை காதில் விழுந்தது. கிழிந்து தொங்கிய மேல்சட்டை பாக்கெட்டில் கையை விட்டபோது, ஐந்து ரூபாய் நாணயம் ஒன்று சிக்கியது. அதைக்கொண்டு ஒரு சுண்டல் பொட்டலத்தை வாங்கிக் கொண்டான் அழன். எல்லாம் விற்று சூடாறிப்போய் மீதமிருந்த சுண்டல் அது. இரவு உணவாக அதில் கொஞ்சத்தை உண்டுவிட்டு, கீழே ஏதாவது பாட்டில்கள் கிடக்கிறாதா என தேடியபடி நடக்கத் துவங்கினான் அவன்.

மணி பத்தைக் கடந்திருந்தது.

சிறிது தூரம் நடந்த அவன் கண்ணுக்கு அவள் தென்பட்டாள். சிவப்பு நிற ரவிக்கையில் கோல்டன் கலர் பார்டர் வைத்து தைத்த அவளது புடவை, அந்த மின்கம்பத்திலிருந்து விழுந்த மஞ்சள் கலர் ஒளி பட்டு அவள் அழகை அப்பட்டமாகக் காட்டியது. இருளிலும் அவளது மூக்குத்தி, வண்ணத்துப் பூச்சியைப் போல மின்னியது. அவள் வைத்திருந்த மல்லிகை பூவின் மணம், கடற்கரை காற்றுடன் இணைந்து கவிதை பாடிக் கொண்டிருந்தது. கைபேசியை அடிக்கடி பார்த்தபடி, யாருக்காகவோ எதற்காகவோ காத்துக் கொண்டிருந்தாள் அவள். அவளையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்த அவன், திடீரென கை கால்களை ஆட்டியபடி கத்தினான். தன் வயிற்றை பெரிதாக காண்பித்து, மீசையை முறுக்கினான்.

அவளுக்குப் புரிந்து விட்டது. அருகில் கடலோர காவல் படை. இங்கு நிற்பது ஆபத்து.

அவனைப் பார்த்து, 'பிளைன் கிஸ்' ஒன்றை கொடுத்தபடி, தலையில் ஹெல்மட்டுடன் KZ வண்டியில் வந்த ஒருவனிடத்தில் ஏறிக்கொண்டாள் அவள். வெகுளியாக அதைப் பார்த்து சிரித்துக் கொண்ட அவன், மஞ்சள் ஒளியில் அவள் மறையும் வரை கையசைத்தான்.

அதற்குள் மணி பன்னிரண்டை நெருங்கிக் கொண்டிருந்தது. காலி பாட்டில்களை எல்லாம் ஒரு பெரிய சாக்குப்பையில் மூட்டை கட்டிய அவன், வழக்கமாக தான் உறங்கச் செல்லும் கலங்கரை விளக்கத்தை அடைந்தான். அவனைப்போலவே அங்கு பலர் இருந்தனர்.

உண்டு மீதம் வைத்திருந்த சுண்டல் பொட்டலம், அவன் தொடையை அரித்தது. எப்போதும் அவன் அருகிலேயே உறங்கும் நாய் ஒன்று, அவனைப் பார்த்ததும் வால் ஆட்டியபடி ஓடிவந்தது. சுண்டல் பொட்டலத்தை அதற்கு போட்டு விட்டு, அந்நாளை மகிழ்வோடு கடத்திய உணர்வோடு படுத்ததும் உறங்கிப் போனான் அவன்.

- சரத்

மேலும் படிக்க மெரினா | மினி கதை #MyVikatan
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top