திண்டுக்கல்: 15 ஆண்டுகளுக்கு முன்பு கிடைத்த யானைத் தந்தம்... தற்போது விற்க, வாங்க முயன்றவர்கள் கைது!

0

திண்டுக்கல் மாவட்டம் பழனி பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் யானை, மான், கேளையாடு, சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இதன் காரணமாகவும் அடர்ந்த வனப்பகுதி என்பதாலும், பொதுமக்கள் அங்கு செல்வதற்கு வனத்துறை தடை தடைவிதித்திருக்கிறது.

இருப்பினும் கோடைக்காலங்களில் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் வனத்திலிருந்து வெளியேறி வருவதை வழக்கமாக கொண்டுள்ளன. குறிப்பாக தண்ணீருக்கு வழியின்றி யானைகள் அவ்வப்போது பழநி அருகே சாலைகளில் உலாவி வருகின்றன.

பழநி வனச்சரகம்

இந்த நிலையில், புளியமரத்து செட் அருகே வனப்பகுதியில் சவரிக்காடு பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் (27), பாச்சலூரைச் சேர்ந்த ராஜ் (37) ஆகிய இருவரும் சந்தேகப்படும் வகையில் சுற்றி வந்தனர். அப்போது அந்தப் பகுதியில்‌ ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினர் அவர்களைப் பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர்கள் இருவரும் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர். பிறகு தொடர் விசாரணை நடத்தியதில் அவர்கள் இருவரும் யானைத் தந்தம் கடத்தி வந்தது தெரியவந்தது.

கைதானவர்கள்

மேலும், அவர்களிடம் இருக்கும் யானைத் தந்தத்தை விலைக்கு வாங்க 3 பேர் வந்ததும் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து இருவரையும் கைது செய்த வனத்துறையினர், அவர்கள் மறைத்து வைத்திருந்த யானைத் தந்தத்தையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து யானைத் தந்தத்தை விலைக்கு வாங்க வந்த பாச்சலூரைச் சேர்ந்த முத்துவேலு (42), சிவலிங்கம் (46), அமரபூண்டியைச் சேர்ந்த ராஜேஷ்பிரபு(36) ஆகிய மூவரையும் கைது செய்து வேடசந்தூர் கிளை சிறையில் அடைத்தனர்.

பழநி அடிவாரம்

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளிடம் பேசினோம். ``முத்துக்குமார் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு கிழங்கு எடுக்க காட்டிற்குள் செல்லும் போது, இந்தத் தந்தத்தை கண்டெடுத்துள்ளார். தற்போது வறுமையான நிலையில் இருக்கும் அவர் 35 செ.மீ நீளம் கொண்ட தந்தம் இருப்பது குறித்து அவர் உறவினரான ராஜிடம் கூறியுள்ளார். இவர்களுடைய உறவினர் முத்துவேலு தந்தத்தை விற்றுக்கொடுப்பதாகக் கூறி பழநி அடிவாரத்திற்கு வரச்சொல்லியுள்ளார். இதனால் முத்துக்குமார், ராஜ் இருவரும் பழநி அடிவாரம் வந்துள்ளனர். பதற்றத்தில் இருந்த அவர்களை கண்காணித்த போலீஸார் சந்தேகமடைந்துள்ளனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் நாங்கள் அவர்கள் இருவரையும் பிடித்து விசாரித்தோம். அப்போது அவர்கள் தந்தத்தை விற்றுக்கொடுக்கவும், வாங்கவும் வந்தவர்கள் என்பது தெரியவந்தது. அவர்களையும் பழநி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் வைத்து பிடித்தோம். அவர்கள் மூவரும் யானை தந்த விற்பனையில் கைதேர்ந்தவர்கள் இல்லை. இருப்பினும் எப்படியாவது பெரிய விலைக்கு விற்றுவிடலாம் என்ற நோக்கில் வந்துள்ளனர். யானை தந்தமும் மிகவும் சேதமடைந்திருந்தது. இருப்பினும் அவர்கள் சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டதால் அவர்கள் 5 பேர் மீதும் நடவடிக்கை எடுத்துள்ளோம்'' என்றனர்.


மேலும் படிக்க திண்டுக்கல்: 15 ஆண்டுகளுக்கு முன்பு கிடைத்த யானைத் தந்தம்... தற்போது விற்க, வாங்க முயன்றவர்கள் கைது!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top