17 வயது மாணவனுடன் பழக்கம்... இறுதியில் தஞ்சாவூர் கோயிலில் திருமணம் - ஆசிரியை போக்சோவில் கைது!

0

திருச்சி மாவட்டம், துறையூரில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்த மாணவர் அவர். மார்ச் 5-ம் தேதி பள்ளியிலிருந்து வீட்டிற்கு வந்தவர், பெற்றோரிடம் விளையாடச் செல்வதாகக் சொல்லிவிட்டு வீட்டிலிருந்து கிளம்பியிருக்கிறார். இரவு நீண்ட நேரமாகியும் மகன் வீடு திரும்பாததால் பதறிப்போன பெற்றோர் பல இடங்களில் மகனைத் தேடி அலைந்துள்ளனர். எங்கும் அவர் கிடைக்காமல் போக மகனைக் காணவில்லை என துறையூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க, துறையூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். முதற்கட்ட விசாரணையிலேயே மாணவன் படிக்கும் அதே பள்ளியில் ஆசிரியராக இருந்த சர்மிளா (26) என்பரும் அதேநாளில் மாயமாகியது போலீஸாருக்குத் தெரியவந்தது.

மாயம்

அதையடுத்து காணாமல் போன மாணவருடன், ஆசிரியை சர்மிளாவும் சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அந்தவகையில், ஆசிரியை சர்மிளாவின் செல்போன் நம்பரை போலீஸார் டிரேஸ் செய்து தொடர்ந்து கண்காணித்து வந்தனர். அதில் சர்மிளாவின் செல்போன் சிக்னல் வேளாங்கண்ணி, திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி என மாறிக்கொண்டே வந்து கடைசியில் திருச்சி எடமலைப்பட்டி புதூரில் இருப்பதாகக் காட்டியிருக்கிறது. எடமலைப்பட்டி புதூரில் உள்ள தோழி ஒருவருடைய வீட்டில் ஆசிரியை சர்மிளாவும், மாயமான அந்த மாணவரும் தங்கியிருப்பதை கடைசியில் போலீஸார் உறுதி செய்துள்ளனர்.

``ரெண்டு பேரும் 5 வருஷமா போன்ல பேசிக்கிட்டும், மெசேஜ் செஞ்சிக்கிட்டும் இருந்தோம். எனக்கு அவன் மேலயும், அவனுக்கு என் மேலயும் விருப்பம் உண்டாச்சி." - ஆசிரியை
கைது

அதையடுத்து துறையூர் சப் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் தலைமையிலான போலீஸார் எடமலைப்பட்டி புதூருக்குச் சென்று ஆசிரியை சர்மிளா மற்றும் அந்த மாணவரை துறையூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது, ‘அவன் 7-வது படிச்ச சமயத்துல இருந்தே அவனுக்கும் எனக்கும் பழக்கம். ரெண்டு பேரும் 5 வருஷமா போன்ல பேசிக்கிட்டும், மெசேஜ் செஞ்சிக்கிட்டும் இருந்தோம். எனக்கு அவன் மேலயும், அவனுக்கு என் மேலயும் விருப்பம் உண்டாச்சி. ரெண்டு பேரும் வீட்டை விட்டுப் போய் கல்யாணம் செஞ்சுக்கலாம்னு முடிவு பண்ணி தஞ்சாவூர் கோயில்ல வச்சி கல்யாணம் செஞ்சிக்கிட்டோம். அதுக்குப் பின்னாடி எங்க போறதுன்னு தெரியாம வேளாங்கண்ணி, திருவாரூர்ன்னு சுத்திக்கிட்டு இருந்தோம்’ என்றிருக்கிறார் ஆசிரியை சர்மிளா. அதையடுத்து 17 வயது மாணவனை ஆசை காட்டி அழைத்துச் சென்று திருமணம் செய்ததாக, போலீஸார் ஆசிரியை சர்மிளாவை போக்சோ வழக்கில் கைது செய்து திருச்சி மகளிர் சிறையில் அடைத்துள்ளனர். மாணவர் திருச்சியிலுள்ள காப்பகம் ஒன்றில் சேர்க்கப்பட்டுள்ளார்.


மேலும் படிக்க 17 வயது மாணவனுடன் பழக்கம்... இறுதியில் தஞ்சாவூர் கோயிலில் திருமணம் - ஆசிரியை போக்சோவில் கைது!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top