``2024-ல் காங்கிரஸுக்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது” - பிரசாந்த் கிஷோர் சொல்லும் தென் - கிழக்கு கணக்கு

0

நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி மோசமான தோல்வியை சந்தித்திருக்கிறது. இதனால் 2024-ம் ஆண்டு நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியால் பாஜகவை எதிர்த்து களம் காண முடியுமா என்ற சந்தேகம் தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது. காங்கிரஸ் கட்சியில் பெரும்பாலான தலைவர்கள் நம்பிக்கை இழந்த நிலையில் காணப்படுகின்றனர். இதனால் ஒரு புறம் ஆம் ஆத்மி கட்சியும், மற்றொரு புறம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் காங்கிரஸின் இடத்தை பிடிக்க போட்டி போட்டுக் கொண்டிருக்கிறது.

காங்கிரஸ் காரிய கமிட்டிக் கூட்டம்

இந்நிலையில் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் இது தொடர்பாக அளித்துள்ள பேட்டியில், ``காங்கிரஸ் கட்சியால் 2024-ம் ஆண்டு நடக்க இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு சவாலை கொடுக்க முடியும்” என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர், பேசுகையில், ``காங்கிரஸ் கட்சியில் அனைவரும் இணைந்து செயல்பட்டால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு காங்கிரஸ் கட்சியால் கடுமையான சவாலை கொடுக்க முடியும். 2024-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு இருக்கிறது. இந்தியாவின் தெற்கு, கிழக்கு பகுதியில் 200 நாடாளுமன்ற தொகுதிகள் இருக்கிறது. இங்கு பாஜகவால் 50 இடங்களில் கூட வெற்றி பெற முடியவில்லை. எனவே காங்கிரஸ் கட்சி மறுஅவதாரம் எடுக்கவேண்டும். கட்சியில் தொண்டர்கள், கொள்கை மற்றும் ஐடியாக்கள் இருக்கிறது.

ஆனால் மற்ற அனைத்தும் புதிதாக இருக்கவேண்டும்” என்றார். தொடர்ந்து, `அனைவரையும் ஒன்றிணைக்கும் சக்தியாக யார் இருக்கவேண்டும்’ என்று கேட்டதற்கு, அது குறித்து பதில் கூற மறுத்த பிரசாந்த் கிஷோர், ``காங்கிரஸ் மனது வைத்தால் ஒத்த கருத்துடைய கட்சிகள் மற்றும் பாஜகவை தோற்கடிக்கவேண்டும் என்று நினைப்பவர்களை ஒன்று சேர்த்தால் பாஜகவை எதிர்கொள்ள முடியும். காந்தி குடும்பம் காங்கிரஸ் தலைமையில் இருந்து விலகினாலும், காங்கிரஸ் கட்சி புத்துயிர் பெற முடியாது. காங்கிரஸ் மீண்டும் அடிப்படை கட்டமைப்புகளை சரியாக செய்யவேண்டிய நேரம் இது. காங்கிரஸ் கட்சியில் கடந்த 20 ஆண்டுகளாக உறுப்பினர் சேர்க்கை நடைபெறவில்லை. உட்கட்சி ஜனநாயகம் கூட இல்லை. காங்கிரஸ் தலைவர் களத்தில் இறங்கி வேலை செய்யாவிட்டால் எதுவும் நடக்காது. பாஜக-வுக்கு மாற்றாக வரவேண்டும் என்று காங்கிரஸ் கட்சி நினைத்தால் 10 முதல் 15 ஆண்டுகளுக்கான திட்டத்தை வகுக்கவேண்டும். குறுகிய கால திட்டங்களாக இருக்ககூடாது.

ராகுல் காந்தியுடன் பிரசாந்த் கிஷோர் ஆலோசனை!

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகள் மக்களவை தேர்தலை பாதிக்காது. உத்தரப்பிரதேச தேர்தலை எடுத்துக்கொள்ளுங்கள் 2012-ம் ஆண்டு சமாஜ்வாடி கட்சி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக நான்காவது இடத்திற்கு வந்தது. ஆனால் 2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் என்ன நடந்தது. 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கிறது. அரசியலில் 2 ஆண்டுகள் என்பது நீண்ட காலமாகும். சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலை பாதிக்காது. இதனை பிரதமர் நரேந்திர மோடியும் நன்றாக அறிவார். தற்போது நடந்திருப்பது லீக் ஆட்டம். இதில் வெற்றி பெற்ற அணியை கொண்டு இறுதிப்போட்டியில் ஆடினால் அதில் வெற்றி கிட்டும் என்பது என்ன நிச்சயம்?” என்று கேள்வி எழுப்பினார்.


மேலும் படிக்க ``2024-ல் காங்கிரஸுக்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது” - பிரசாந்த் கிஷோர் சொல்லும் தென் - கிழக்கு கணக்கு
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top