30 நாள்களாக ரஷ்யாவைத் தாக்குப் பிடிக்கும் உக்ரைன்! - என்னென்ன ஆயுதங்களைப் பயன்படுத்துகிறது?

0

ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் 30-வது நாளாக இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. உக்ரைனின் முக்கிய நகரங்களைக் கைப்பற்றும் நோக்கில் தீவிரமான தாக்குதல்களை நிகழ்த்திவருகிறது ரஷ்யா. வலிமையான ரஷ்ய ராணுவத்தை எதிர்த்து, விட்டுக் கொடுக்காமல் சண்டையிட்டுவருகிறது உக்ரைன். `மிகக் குறைந்த அளவிலேயே படை பலமும், ஆயுத பலமும் கொண்ட உக்ரைனை, வலிமை பெற்ற ரஷ்யப் படைகளால் இத்தனை நாள்களுக்கு பின்பும் கட்டுக்குள் கொண்டு வர முடியாதது ஏன்?' என்ற விவாதங்கள் கிளம்பத் தொடங்கியிருக்கின்றன.

உக்ரைன் - ரஷ்யா போர்

அமெரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் உக்ரைனுக்கு அதிநவீன ஆயுதங்களை வழங்கியிருக்கின்றன. ரஷ்யாவின் தாக்குதல்களை உக்ரைன் தாக்குப் பிடிப்பதற்கு மேற்கத்திய நாடுகள் வழங்கிய நவீன போர் ஆயுதங்கள்தான் காரணம் என்கிறார்கள் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள். ரஷ்யப் படைகளைச் சமாளிக்க உக்ரைன் பயன்படுத்தும் ஆயுதங்கள் என்னென்ன என்பதை இங்கே பார்க்கலாம்!

ஜாவ்லின் ஏவுகணைகள்!

சக்திவாய்ந்த பீரங்கிகளை எதிர்த்துப் போரிட உதவுகின்றன ஜாவ்லின் ஏவுகணைகள். ரஷ்யாவின் பெரும்பாலான பீரங்கிகளை அழித்தது ஜாவ்லின் ஏவுகணைகள்தான் என்கின்றன சர்வதேச ஊடகங்கள். 2,000-த்துக்கும் அதிகமான ஜாவ்லின் ஏவுகணைகளை உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஜாவ்லின் ஏவுகணைகளின் தாக்குதலில் பெரும்பாலான ரஷ்ய பீரங்கிகள் அழிந்துவிட்டதால், சில இடங்களிலிருந்து ரஷ்யா தனது பீரங்கிப் படைகளைப் பின்வாங்கியிருப்பதாகவும் செய்திகள் கூறப்படுகின்றன.

போர்

kamikaze டிரோன்!

ஏவுகணைகள் இலக்கை நோக்கிப் பயணிக்கும்போது பாதி வழியிலேயே மறித்துத் தாக்கக்கூடிய ஆற்றல் பெற்றவைதான் இந்த கமிகேஸ் டிரோன்கள். இதில் ஸ்விட்ச்ப்ளேட் 300, ஸ்விட்ச்ப்ளேட் 600 என்று இரண்டு வகை டிரோன்கள் இருக்கின்றன. இரண்டுமே 1.3 மீட்டர் நீளம் கொண்டவை. இதில் ஸ்விட்ச்ப்ளேட் 600 வகை டிரோன்கள் அதிக தூரம் பயணிக்ககூடிடயவை. நிலம், நீர், ஆகாயம் என மூன்றிலிருந்தும் இந்த வகை டிரோன்களை ஏவ முடியும்.

ஸ்டிரிங்கர்!

வீரர்கள் கையில் எடுத்துச் செல்லும்படியான வான் பாதுகாப்பு கருவிதான் ஸ்டிரிங்கர். ராணுவத்தினர் தோள்பட்டை மீது வைத்து எதிரிகளின் இலக்கை எளிதாகத் தாக்குவதற்கு இந்த ஸ்டிரிங்கர்கள் பயன்படுத்தப்படுகின்றன. அமெரிக்கா, 600-க்கும் அதிகமான ஸ்டிரிங்கர்களை உக்ரைனுக்கு வழங்கியிருப்பதாகத் தெரிகிறது. ஜெர்மனியும் நூற்றுக்கணக்கான ஸ்டிரிங்கர்களை உக்ரைனுக்குக் கொடுத்திருக்கிறது. வான்வெளியில், குறைந்த உயரத்தில் பறக்கும் போர் விமானங்கள், ஹெலிகாப்டர்களை அழிக்க உதவுகிறது இந்த ஸ்டிரிங்கர்.

NLAW ஏவுகணைகள்!

NLAW ஏவுகணைகளும் தோள்பட்டைமீது வைத்துத் தாக்குதல் நடத்தக்கூடிய ஆயுதம்தான். பீரங்கிகள், கூட்டமாக வரும் படை வீரர்களை அழிக்க இந்த வகை ஏவுகணைகளைப் பயன்படுத்துகிறது உக்ரைன் ராணுவம். இங்கிலாந்து, ஜெர்மனி, நார்வே, ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகள் ஆயிரக்கணக்கில் NLAW ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்கியிருக்கின்றன.

போர் ஆயுதங்கள்

எஸ்-300 ஏவுகணை!

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட அதிநவீன எஸ்-300 ரக ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்கியிருக்கிறது அமெரிக்கா. இந்த அதிநவீன ஏவுகணைகள் மூலம் ரஷ்யாவின் போர் விமானங்கள்மீது தாக்குதல் நடத்திவருகின்றன உக்ரைன் படைகள்.

TB2 டிரோன்!

உக்ரைனுக்கு சுமார் 20 டிபி2 டிரோன்களை துருக்கி வழங்கியிருப்பதாகத் தெரிகிறது. உக்ரைனின் முக்கிய நகரங்கள் சிலவற்றில் வான் பகுதி பாதுகாப்பாக இருப்பதற்கு இந்த டிபி2 டிரோன்கள்தான் பெரிதும் உதவுவதாகச் சொல்லப்படுகிறது.


மேலும் படிக்க 30 நாள்களாக ரஷ்யாவைத் தாக்குப் பிடிக்கும் உக்ரைன்! - என்னென்ன ஆயுதங்களைப் பயன்படுத்துகிறது?
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top