``வருமானத்தை விட 3,928% அதிகம்; வெளிநாட்டில் சொத்து குவிப்பு?” - எஸ்.பி வேலுமணியிடம் விசாரணை

0

தமிழகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் இன்று காலை முதல் 58 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். தற்போது வரை கோவை, சேலம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் 58 இடங்களில் சோதனை நடைபெறுவதாக சொல்லப்படுகிறது. அதாவது, சென்னையில் 8 இடங்களிலும், சேலத்தில் 4 இடங்களிலும், நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தலா ஒரு இடத்திலும், திருப்பத்தூர் மாவட்டத்துல் 2 இடங்களிலும் கோவையில் 41 இடங்களிலும் கேரள மாநிலத்தில் ஒரு இடத்திலும் ரெய்டு நடைபெற்று வருகிறது.

வழக்கு

முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி வேலுமணி வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் கடந்த ஆண்டு ஏற்கனவே சோதனை நடத்தப்பட்டது. இந்த நிலையில் கோவை மைல்கல் பகுதியில் உள்ள வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் இன்று காலை முதல் மீண்டும் சோதனை செய்து வருகிறார்கள். மேலும் அவர் தொடர்புடைய இன்னும் சில இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. எஸ்.பி வேலுமணியின் அண்ணன் அன்பரசன், அன்பரசன் மனைவி ஹேமலதா, நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளர் சந்திரசேகர் உள்ளிட்ட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்து சென்னை, கோவை, திருப்பூர், சேலம், கேரளா உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் ரெய்டு நடத்தி வருகின்றனர்.

வேலுமணி

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, குடும்பத்தினர் ரூ. 58.23 கோடிக்கு கூடுதலாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவில் தெரிவித்துள்ளது. மேலும், வருமானத்தை விட 3,928% அதிகம் சொத்து சேர்த்ததாகவும் குற்றம்சாட்டி இருக்கிறது. வேலுமணி அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் அவரின் குடும்பத்தினர் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டதாகவும் அதனால் அவர் வெளிநாட்டில் பணத்தை முதலீடு செய்திருக்கிறார்களா என்ற கோணத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கேரளா பண்ணை வீட்டிலும் ரெய்டு..!

கேரளா ஆனைக்கட்டி அருகே வேலுமணி தரப்புக்கு சொந்தமாக ஓர் பண்ணை வீடு உள்ளது. கடந்தாண்டு அங்கு ரெய்டு நடக்கவில்லை. இப்போது கேரள பண்ணை வீட்டிலும் அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகின்றனர்.

இது தவிர்த்து சேலத்தில் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் 3 பேரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பான புகார்கள் காரணமாக இந்த சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. முன்னதாக, நேற்று சென்னையில் போக்குவரத்துக்கு துணை ஆணையர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புதுறை திடீர் சோதனை நடத்தியதும், அதில் ரூ.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதும் குறிப்பிடதக்கது.


மேலும் படிக்க ``வருமானத்தை விட 3,928% அதிகம்; வெளிநாட்டில் சொத்து குவிப்பு?” - எஸ்.பி வேலுமணியிடம் விசாரணை
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top