கடமை கடந்த அர்ப்பணிப்பு... டாக்டர் சாந்தா வாழ்விலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய 5 பாடங்கள்!

0

எளிமையே பெருமை

அவரிடம் பேசும்போது 'மகசேசே விருது', 'பத்மவிபூஷண்' என்று அவர் பெற்றிருந்த விருதுகளின் பெருமை ஒரு சிறிதும் அவரின் உடல் மொழியில் தெரியாது. எளிமையாக இருப்பார். பேச்சில் மட்டும் ஞானமும் சமூக அக்கறையும் சுடர் விட்டுக் கொண்டிருக்கும்.

கருத்துகளை எப்படி வெளிப்படுத்துகிறோம் என்பது​ம் முக்கியம்

தன் கருத்தைத் தெளிவாகக் கூறினாலும் அதை எப்படிக் கூறுவது என்பதில் உயரிய பண்பு அவருக்கு இயல்பாகவே அமைந்திருந்தது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பற்றிக் கேட்டபோது 'அவற்றைப் பற்றி எனக்கு உயர்வான கருத்து கிடையாது' என்று மட்டுமே கூறி முடித்துக் கொள்வார்.

மருத்துவர் சாந்தா

மாற்று வழிகளுக்கும் அங்கீகாரம் அளிக்க வேண்டும்

டாக்டர் சாந்தா திருமணம் செய்துகொள்ளவில்லை. இது குறித்துக் கேட்டபோது ச​மூக சேவையில் உள்ள நாட்டம்தான் அதற்குக் காரணம் என்றோ தன் வாழ்க்கையை சேவைக்காகவே அர்ப்பணித்துவிட்டதாகவோ அவர் கூறியிருக்கலாம். அது நம்பும்படியாகவும் இருந்திருக்கும். ஆனால் தனக்குத் திருமண வாழ்வு இல்லை என்பது தன் தலையில் எழுதப்பட்ட ஒன்று என்றார். மீதி மருத்துவர்களும் இப்படி இருக்க வேண்டும் என்பதில்லை என்பார். சொல்லப்போனால் இளம் நோயாளிகளை அணுகும் போது 'என் மகன் அல்லது மகள் போன்றவர்' என்கிற உணர்வு மேலும் அழுத்தமாக அவர்களுக்கு உண்டாகி சிகிச்சை சிறப்பாகப் பணிபுரிய அவர்களுக்கு உதவக் கூடும் என்று அவர் கூறினார்.

சொல்வதைச் செய்யுங்கள்

புற்றுநோய் மருத்துவமனையில் பல்லாயிரக்கணக்கானவர்கள் சிகிச்சை பெற்று குணமடைந்ததில் டாக்டர் சாந்தாவுக்கு கணிசமான பங்கு உண்டு. ஒரு ரோல் மாடலாக அங்குள்ள பல மருத்துவர்களைச் சேவையில் ஈடுபட வைத்திருக்கிறார். அவர் வாழ்க்கையும் அந்த மருத்துவமனையுடன் ஒன்றிணைந்ததாக இருந்ததை வெளிப்படுத்தும் வகையில் மருத்துவமனையின் மாடியிலேயே அவருக்கான எளிய இருப்பிடம் அமைந்திருந்தது.

மருத்துவர் சாந்தா

கடமை கடந்த அர்ப்பணிப்பு உயர்வு தரும்

கேன்சர் இன்ஸ்டிட்யூட் நிறுவனர்களில் ஒருவரான டாக்டர் கிருஷ்ண​மூர்த்தி, "புற்று நோய் பாதித்தவர்களுக்கு நானும் சிகிச்சை அளித்திருக்கிறேன். ஆனால் நோயாளிகளிடம் டாக்டர் சாந்தா கொண்டிருந்த அர்ப்பணிப்பு மேலும் ஆழமானது. அதை அவர் ஒருவரால்தான் செய்ய முடியும். இளைஞர் ஒருவர் ரத்தப் புற்றுநோயின் மிகத் தீவிர பாதிப்பில் இருந்தார். அவர் ஒரு நாள் சாந்தாவின் கையைப் பற்றியபடி​ தனக்கு பயமாக இருக்கிறது என்றும் இருள் அச்சத்தைத் தருகிறது என்றும் கூறினார். அன்று இரவு முழுதும் அவர் சாந்தாவின் கையை விடவே இல்லை. அவரும் அவர் அருகில் பிரார்த்தனை செய்தபடி உட்கார்ந்து கொண்டே இருந்தார். அடுத்த நாள் அந்த இளைஞர் இறந்துவிட்டார்" என்றார்.


மேலும் படிக்க கடமை கடந்த அர்ப்பணிப்பு... டாக்டர் சாந்தா வாழ்விலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய 5 பாடங்கள்!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top