"பெருவெற்றி அடைய பின்னணி அவசியமில்லை"- திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன் வாழ்க்கை சொல்லும் 5 பாடங்கள்

0

பிறரிடம் கருணை நோக்கு தேவை

கே.வி.மகாதேவனிடம் ஒரு பெரிய இசைக்குழு உண்டு. அந்த இசைக்கலைஞர்களை எப்போதுமே அவர் மிகக் கனிவுடன் நடத்துவார். அவர் இசையமைக்கும் சில திரைப்படங்களுக்குச் சில இசைக்கருவிகள் தேவைப்பட்டிருக்காது. என்றாலும்கூட தனது ஒவ்வொரு திரைப்படத்திற்கும் தன் குழுவில் உள்ள அத்தனை இசைக் கலைஞர்களுக்கும் ஆதரவு அளித்து வந்தார் அவர்.

நாம் பேச வேண்டாம், நம் சாதனைகள் பேசட்டும்

காலத்தால் அழிக்க முடியாத பல காவியப் பாடல்களைத் தன் இசையமைப்பில் அளித்தவர் கே.வி.மகாதேவன். ஆனால், அவர் தன்னைப்பற்றி வெளி உலகத்துக்கு மிகமிகக் குறைவாகவே வெளிப்படுத்தியிருக்கிறார். பேட்டிகளுக்கு அவர் ஒப்புக் கொண்டதில்லை என்றே கூறிவிடலாம்.

கே.வி.மகாதேவன், பி.சுசிலா மற்றும் எஸ்.பி.பி-யுடன்

பெருவெற்றி அடைய பின்னணி அவசியமில்லை

கே.வி.மகாதேவன் தன் இளமைக்காலத்தில் நாகர்கோவிலருகே உள்ள கிருஷ்ணன்கோவில் என்ற இடத்தில் வளர்ந்தவர். அவர் தந்தை ஓர் ஆலயத்தில் பாடகராகப் பணிசெய்து சொற்ப ஊதியம் பெற்றவர். வறுமையான பின்னணியில் வளர்ந்தும்கூட மாபெரும் உயரத்தை அடைந்தவர் கே.வி.மகாதேவன். சிறுவனாக இருக்கும்போது திருவாங்கூர் அரண்மனையில் ஒரு முறை மிகச் சிறப்பாக அவர் பாடியதைக் கேட்டு மகிழ்ந்த மகாராஜா அவருக்கு ஒரு தங்கக் காசை அளித்தார். அதைத் தனது ஊக்குவிக்கும் சக்தியாக எடுத்துக்கொண்டு தன் திறமையை மேலும் மேலும் மெருகேற்றிக் கொண்டார் கே.வி.மகாதேவன்.

சிறப்பான நடத்தை எதிர்பாராத கோணங்களிலும் உதவும்

கே.வி.மகாதேவனின் சக காலத்தில் விஸ்வநாதன் - ராமமூர்த்தி இணை, திரையிசையில் அவருக்கு சமமாக ஆட்சி செய்யத் தொடங்கிய கால கட்டம் வந்தது. ஒரு முறை காலகாலமாக கே.வி.மகாதேவன் இசையமைப்பில் வெளியான படங்களில் நடித்த எம்ஜிஆர் தனது அடுத்த படத்துக்கு எம்.எஸ்.விஸ்வநாதனை இசை அமைக்கச் சொல்லி அணுகினார். எம்.எஸ்.விஸ்வநாதனுக்கும் ஆசைதான். ஆனால் அவர் தன் தாயிடம் இதுபற்றி கூறிய போது பளார் என்று அவரை அரைந்தாராம் அவரது தாய். "மகாதேவன் தொடர்ந்து இசையமைக்கும் கம்பெனிகளுக்கு நீயேன் இசையமைக்க ஒப்புக் கொள்கிறாய்? அது கூடாது" என்றாராம். (இதைத் தொடர்ந்து அந்த வாய்ப்பை ஏற்க மறுத்துவிட்டார் விஸ்வநாதன்). அப்படி ஒரு நற்பெயரை சம்பாதித்து வைத்திருந்தார் கே.வி. மகாதேவன்.

எப்போதும் நம்மை முதன்மைப்படுத்திக் கொண்டிருக்கக் கூடாது

பல பிரபல திரை இசையமைப்பாளர்கள் தங்களது பெரும்பாலான பாடல்களுக்கு 'மெட்டுக்குப் பாட்டு' எனும் வகையில்தான் இசை அமைப்பது வழக்கம். அதாவது இசைக்குத் தகுந்தபடி பாடல் வரிகளை எழுத வேண்டும். ஆனால் இதில் கே.வி.மகாதேவன் நேர்மாறானவர். கிட்டத்தட்டத் தனது அனைத்துத் திரைப்பட பாடல்களுக்கும் வரிகள் எழுதப்பட்ட பிறகுதான் அவற்றுக்கு ஏற்றவாறு இசையமைத்திருக்கிறார்.


மேலும் படிக்க "பெருவெற்றி அடைய பின்னணி அவசியமில்லை"- திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன் வாழ்க்கை சொல்லும் 5 பாடங்கள்
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top