ஆந்திரா: இரண்டு மாதங்களில் 7 முறை விற்கப்பட்ட குழந்தை - அதிர்ச்சியளிக்கும் சங்கிலித் தொடர் விற்பனை!

0

கடந்த இரண்டு மாதங்களில் 7 முறை விற்கப்பட்ட பெண் குழந்தை பற்றிய அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகி இருக்கிறது.

ஆந்திர மாநில குண்டூர் மாவட்டத்தில் உள்ள மங்களகிரி பகுதியைச் சேர்ந்த மெடபலிமி மனோஜ் தம்பதிக்கு மூன்றாவதாகப் பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆண் குழந்தையை எதிர்பார்த்த இந்த தம்பதி மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் இந்த குழந்தையை விற்க தாய், தந்தை இருவரும் ஒப்புக்கொண்டதாகவும், அதன் பின் மனோஜ் மனைவி வேண்டாம் என எதிர்த்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், மனைவியின் விருப்பத்தை மீறி குழந்தையை விற்க முடிவு செய்துள்ளார் மனோஜ். மிக்கிலி நாகலட்சுமி என்ற பெண்ணின் உதவியுடன் தெலங்கானாவில் உள்ள நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள கொண்டப்ரோலு கிராமத்தைச் சேர்ந்த மேகவத் காயத்ரி என்பவருக்கு ரூ.70,000-க்கு விற்றுள்ளனர். காயத்ரி, நல்கொண்டா மாவட்டம், பால்காட் கிராமத்தில் உள்ள லம்பாடி தேவாலா தாண்டாவைச் சேர்ந்த பூக்யா நந்து என்பவருக்குக் குழந்தையை ரூ.1,20,000-க்கு விற்றுள்ளார்.

ஆந்திரா

அங்கிருந்து நந்து தனது உறவினரான புக்யா பாலவர்த்தி ராஜுவின் உதவியுடன் குழந்தையை ஹைதராபாத்தில் உள்ள தில்சுக் நகர்ப் பகுதியைச் சேர்ந்த எஸ்.கே.நூர்ஜஹான் என்பவருக்கு ரூ.1,87,000-க்கு விற்றிருக்கிறார். நூர்ஜஹான் தனது தொடர்புகளுடன், கம்மத்தைச் சேர்ந்த அனுபோஜு கிரண் என்பவரின் உதவியுடன், ஹைதராபாத்தில் உள்ள நாராயணகுடாவில் வசிக்கும் பொம்மடா உமா தேவி என்பவருக்கு குழந்தையை விற்றுள்ளார்.

அதன்பின் விஜயவாடாவைச் சேர்ந்த படலா ஸ்ரவாணி என்ற பெண்ணுக்கு உமா தேவி ரூ.2,00,000க்கு விற்றுள்ளார். ஸ்ரவாணி மீண்டும் குழந்தையை விஜயவாடாவில் உள்ள கொல்லப்புடி பகுதியைச் சேர்ந்த கரிகாமுக்கு விஜயலட்சுமி என்பவருக்கு ரூ.2,20,000க்கு விற்றுள்ளார். இறுதியாக விஜயலட்சுமி அந்த குழந்தையை மேற்கு கோதாவரி மாவட்டம் ஏலூரை சேர்ந்த வர்ரே ரமேஷ் என்பவருக்கு ரூ.2,50,000க்கு விற்றுள்ளார்.

குழந்தை

சிறுமியை விற்ற மனோஜுக்கு எதிராக அவரின் மாமியார் தனது மகளுடன் சேர்ந்து போலீஸில் புகார் அளித்தார். இந்த இந்த வழக்கை விசாரிக்க மங்களகிரி டி.எஸ்.பி., ராம்பாபு, ஆய்வாளர் அங்கம்மா ராவ், எஸ்.ஐ., நாராயணா உள்ளிட்ட போலீஸார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. குழந்தையின் தந்தை தொடங்கி, சங்கிலித் தொடராக ஒவ்வொரு இணைப்பையும் காவல்துறை கண்டுபிடித்து, குழந்தை விற்பது தொடர்பான வழக்கில் 11 பேரை கைது செய்துள்ளனர். மீட்கப்பட்ட பெண் குழந்தை தாயிடம் ஒப்படைக்கப்பட்டது.

குழந்தை இல்லாத தம்பதிகளைக் குறிவைத்து, புதிதாகப் பிறந்த குழந்தைகளைக் குழந்தையைத் தத்தெடுக்கத் தயாராக இருப்பவர்களுக்கு விற்பதே இந்த கட்டமைப்பின் செயல்பாடாகும் என்று ஆய்வாளர் அங்கம்மா ராவ் கூறினார்.

காவல்துறை

காவலர்களின் கூற்றுப்படி, குழந்தையை முதலில் தந்தை ரூ.70,000க்கு விற்றார், ஏழாவது கைமாறும் போது அந்தக் குழந்தை ரூ.2,50,000-க்கு விற்கப்பட்டது அதிர்ச்சியளிக்கும் செய்தியாக வலம் வருகிறது.


மேலும் படிக்க ஆந்திரா: இரண்டு மாதங்களில் 7 முறை விற்கப்பட்ட குழந்தை - அதிர்ச்சியளிக்கும் சங்கிலித் தொடர் விற்பனை!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top