``உள்ளாட்சி முதல் அமைச்சர்கள் வரை, சிறு தவறு நடந்தாலும்..!" - திமுக-வினரை எச்சரித்த மு.க.ஸ்டாலின்

0

தூத்துக்குடியில் உள்ள வடக்கு மாவட்ட தி.மு.க அலுவலகமான கலைஞர் அரங்கத்தின் வாசலில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வெண்கல உருவச் சிலையை தி.மு.க தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து கட்சியின் முன்னோடிகள், 300 பேருக்கு பொற்கிழி வழங்கினார். தொடர்ந்து பேசிய அவர், ``நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவடைந்த பிறகு முதல்முறையாக இங்கு வந்துள்ளேன். நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க பெற்றுள்ள வெற்றி சாதாரணமானது அல்ல. இதுவரை இந்தக் கட்சி கண்டிராத ஒரு மாபெரும் வெற்றி. இந்த வெற்றியைக் காண கலைஞர் இல்லை என்ற வருத்தம் இல்லையே என எனக்குள் இருந்தது.

கலைஞரின் வெண்கலச்சிலை

ஆனால், அவரின் உருவச்சிலையை இந்த வெற்றித் தருணத்தில் திறந்து வைத்தது எனக்கு மகிழ்ச்சி. தமிழக மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையினால்தான் உள்ளாட்சித் தேர்தலிலும் நமக்கு வெற்றியை தந்துள்ளார்கள். தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்று பொறுப்பேற்றுள்ள பேரூராட்சிகளின் தலைவர், துணைத் தலைவர், நகராட்சிகளின் சேர்மன், துணை சேர்மன், மாநகராட்சிகளின் மேயர், துணை மேயர் உள்ளிட்ட உறுப்பினர்கள் அனைவரும் அண்ணா, கலைஞர் சொன்னதுபோல மக்களுக்காகப் பாடுபட வேண்டும்.

நான் கடந்த 1996-ல் சென்னை மாநகராட்சியின் பொறுப்பேற்கச் செல்வதற்கு முன்பு நான் பேசுவதற்காக தயாரித்து வைத்திருந்த குறிப்பை தலைவர் கலைஞரிடம் காட்டினேன். அதில், `மேயர் பதவி’ எனக் குறிப்பிட்டிருந்தேன். அதைப் படித்துப் பார்த்த அவர், `மேயர்’ என்பதை `பொறுப்பு’ எனமாற்றியிருந்தார்.

திறக்கப்பட்ட கலைஞரின் வெண்கலச்சிலை

அதுமட்டுமில்லாமல் அது ஒரு `மக்கள் பணி’ எனச் சொன்னார். அது மேயர் பதவிக்கு மட்டுமல்ல, உள்ளாட்சியின் அனைத்துப் பதவிகளுக்கும் அது பொருந்தும். பொறுப்புக்கு வந்திருப்பவர்கள், இதைப் பதவியாகப் பார்க்காமல் பொறுப்பாகவேப் பார்க்க வேண்டும். உங்களது பணியினை சரியாகச் செய்கிறீர்களா, இல்லையா என்பதை நான் கண்காணித்துக் கொண்டே இருப்பேன். மக்கள் நம்பிக்கையைக் காப்பாற்றுவதில் சிறு தவறு நடந்தாலும், நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன் என்பதை சொல்லிக் கொள்கிறேன்.

இதை யாரையும் அச்சப்படுத்துவதற்காகவோ, மிரட்டுவதற்காகவோ நான் சொல்லவில்லை. அவரவரின் பொறுப்பினை உணர்த்துவதற்காகச் சொல்கிறேன். அண்ணா சொன்ன கடமை, கண்ணியத்தையும் விட கட்டுப்பாடுடன் பணியாற்ற வேண்டும்" என்றார்.

பின்னர் இறுதியாக, ``இது உள்ளாட்சியில் பொறுப்பு வகிப்பவர்களுக்கு மட்டும் இல்லை. எம்.எல்.ஏ, எம்.பி, அமைச்சர் வரை அனைவருக்குமே பொருந்தும்” எனச் சொல்லி முடித்தார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்

இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் ஜெகன், அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ராஜ கண்ணப்பன் ஆகியோரும், எம்.எல்.ஏக்கள் மார்கண்டேயன், சண்முகையா, ஊர்வசி அமிர்தராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


மேலும் படிக்க ``உள்ளாட்சி முதல் அமைச்சர்கள் வரை, சிறு தவறு நடந்தாலும்..!" - திமுக-வினரை எச்சரித்த மு.க.ஸ்டாலின்
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top