தேனி: ``அதிமுகவில் சசிகலாவை இணைக்க வேண்டும்!'’ -ஓபிஎஸ் வீட்டில் அதிமுக-வினர் தீர்மானம்

0

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19 -ம் தேதி நடைபெற்றது. இதில் சிபிஐ, சிபிஐஎம், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் திமுக போட்டியிட்டது. அதிமுக தனது கூட்டணி கட்சியான தமமுக உள்ளிட்ட சில கூட்டணி கட்சிகளுடன் மட்டும் சேர்ந்து போட்டியிட்டது. இதேபோல பாஜக, அமமுக, மநீம, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிட்டன.

கூட்டம்

இதில் பெரும்பாலான இடங்களில் திமுக, அதிமுக இடையே நேரடி போட்டி இருந்தது. தேர்தல் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22 ஆம் தேதி நடைபெற்றதில் பெரும்பான்மையான இடங்களில் வென்று உள்ளாட்சியை தன் வசமாக்கியது திமுக. மாநகராட்சியில் திமுக 43.59 சதவிகிதமும், அதிமுக 24 சதவிகிதமும் வாக்குகளை பெற்றன. நகராட்சியில் திமுக 43.49 சதவிகிதமும், அதிமுக 26.86 சதவிகிதமும் வாக்குகளை பெற்றன. இதேபோல பேரூராட்சியில் திமுக 41.91 சதவிகிதமும், அதிமுக 25.56 சதவிகிதமும் வாக்குகளை பெற்றன.

ஓபிஎஸ் பண்ணை வீடு

தமிழத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அதிமுகவுக்கு பெரும் பின்னடைவைக் கொடுத்தது. குறிப்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகியோரின் சொந்த மாவட்டங்களிலேயே அதிமுக தனது செல்வாக்கை இழந்தது. இது அதிமுக தொண்டர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் இந்தப் பின்னடைவுக்கு அதிமுக பிளவுபட்டு கிடப்பதே காரணம் எனவும் பரவலாக பேசப்பட்டு வந்தது.

மாவட்ட செயலாளர் சையதுகான்

இந்நிலையில், தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் உள்ள ஓபிஎஸ்-ன் பண்ணை வீட்டில் அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தேனி மாவட்ட அதிமுக செயலாளர் சையதுகான் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தேனி மாவட்டத்தில் உள்ள அதிமுக நகர, ஒன்றிய மற்றும் பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றார்.

ஓ.பன்னீர்செல்வம்

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அதிமுகவினர், சட்டப்பேரவை தேர்தலைத் தொடர்ந்து தமிழகத்தில் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்துள்ளது. அதிமுகவின் தோல்விக்கு கட்சி பிளவு தான் காரணம் எனக் கூறப்பட்டது. கட்சியை மீட்டெடுக்க வேண்டும் என்றால் பிளவுபட்ட அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும். சசிகலா மற்றும் டி.டி.விதினகரன் ஆகியோர்களை கட்சியில் சேர்த்து அமமுகவை அதிமுகவுடன் இணைத்தால் மட்டுமே கட்சியை பலப்படுத்த முடியும் என்று ஓ.பி.எஸ்ஸிடம் தொண்டர்கள் வலியுறுத்தியுள்ளனர்.‌

ஓ.பி.எஸ்

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுக தேனி மாவட்ட செயலாளர் சையதுகான், ''எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின் ஜெயா - ஜானகி அணியாக பிரிந்ததால் தான் அதிமுக தோல்வியடைந்தது. அதே போல ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் கட்சி பிளவுபட்டதால் தான் தற்போது தோல்வியைச் சந்தித்து வருகின்றோம்.‌ எனவே அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற அனைவரையும் மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என்பது தேனி மாவட்ட அதிமுகவினரின் விருப்பமாக உள்ளது. இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இன்றைய தினம் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடம் வழங்கி உள்ளோம்.‌ அதனை பெற்றுக் கொண்ட ஓ.பி.எஸ். விரைவில் நல்ல தகவல் வெளியாகும் எனத் தெரிவித்தார்.

அமமுகவை அதிமுகவில் இணைக்க வேண்டும் என்ற தீர்மானம்தேனியில் நிறைவேற்றப்பட்டது போல தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இது தொடரும். மேலும் மார்ச் 5 ஆம் தேதி தேனி மாவட்ட அளவில் உள்ள கட்சி நிர்வாகிகளின் ஒருங்கிணைத்த ஊழியர் கூட்டத்தைக் கூட்டி அமமுகவை அதிமுகவுடன் ஒருங்கிணைப்பது குறித்த தீர்மானம் நிறைவேற்றப்படும்'' என்றார்.


மேலும் படிக்க தேனி: ``அதிமுகவில் சசிகலாவை இணைக்க வேண்டும்!'’ -ஓபிஎஸ் வீட்டில் அதிமுக-வினர் தீர்மானம்
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top