விருதுநகர் பாலியல் வன்கொடுமை விவகாரம்: விசாரணையை தொடங்கியது சிபிசிஐடி!

0

விருதுநகர் பாண்டியன் நகர் பகுதியைச் சேர்ந்த 22 வயது பட்டியல் இன இளம் பெண்ணை அவரின் காதலன் ஹரிகரன் உள்பட 8 பேர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக இளம்பெண் அளித்த புகாரின் பேரில் விருதுநகர் ஊரக காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து இளம்பெண்ணின் காதலணும், விருதுநகர் திமுக இளைஞரணி உறுப்பினருமான ஹரிஹரன், அவருடைய நண்பர்கள் மாடசாமி, பிரவீன், விருதுநகர் 10-வது வார்டு திமுக இளைஞரணி அமைப்பாளர் ஜூனைத் அகமது மற்றும் 17 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்கள் 4 பேர் என 8 பேரை போலீஸார் கைது செய்தனர். இதில் ஹரிஹரனும் அவரின் நண்பர்களும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பள்ளி சிறுவர்கள் நான்கு பேரும் மதுரை தெப்பக்குளத்தில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரி வினோதினி

இந்நிலையில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஹரிஹரனும், ஜுனைத் அகமதுவும் திமுக-வை சேர்ந்தவர்கள் என்பதால் அரசியல்ரீதியாக இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதைத்தொடரந்து, இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜுனைத் அகமதுவை கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் அனைத்து பொறுப்பிலிருந்தும் இடைநீக்கம் செய்து கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் இவ்வழக்கில் வேறு யாரேனும் சம்பந்தப்பட்டுள்ளனரா? இளம்பெண் தொடர்பான ஆபாச வீடியோ வேறு யாருக்கும் பகிரப்பட்டுள்ளதா என போலீஸார் விசாரணை நடத்திவந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த வழக்கினை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து வழக்கு தொடர்பான விசாரணையை மேற்கொள்வதற்காக விருதுநகர் மாவட்ட சிபிசிஐடி அலுவலகத்திற்கு வந்த சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளர் முத்தரசி, சிபிசிஐடி காவல் துணை கண்காணிப்பாளர் சரவணன் மற்றும் சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரி வினோதினி, ஆய்வாளர் சாவித்திரி ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டார்.

சிபிசிஐடி போலீஸ்

தொடர்ந்து வழக்கு ஆவணங்களை பெற்றுக்கொண்ட அவர், முதற்கட்டமாக அதிகாரிகளின் பாதுகாப்பில் தங்க வைக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட இளம் பெண்ணிடம் விசாரணையை மேற்கொள்ள உள்ளனர். அதைத் தொடர்ந்து, பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஹரிஹரன், அவருடைய நண்பர்கள், சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ள 4 மாணவர்கள் ஆகிய 8 பேரையும் சிபிசிஐடி போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் சிபிசிஐடி தரப்பில் மனு தாக்கல் செய்யப்படுகிறது. சிறுவர்களை காவலில் எடுத்து விசாரிக்க விருதுநகரிலுள்ள இளையோர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட உள்ளது.

இவ்வழக்கை விரைந்து விசாரிக்கும் பொருட்டு மற்ற மாவட்டங்களில் உள்ள சிபிசிஐடி அதிகாரிகளுக்கும் அழைப்புக் விடுக்கப்பட்டு விருதுநகர் வரவழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 5 குழுக்களாக பிரிக்கப்பட்டு விசாரணையை மேற்கொள்ள உள்ளனர். மேலும் இளம்பெண் தொடர்பான ஆபாச வீடியோ வேறு யாரேனுக்கும் ஃபார்வேர்ட் செய்யப்பட்டுள்ளதா?, இதில் வேறு நபர்கள் சம்பந்தப்பட்டுள்ளனரா? என்பது குறித்தும் விசாரணை செய்ய சைபர் கிரைம் போலீஸாரின் உதவியை சிபிசிஐடி நாடி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


மேலும் படிக்க விருதுநகர் பாலியல் வன்கொடுமை விவகாரம்: விசாரணையை தொடங்கியது சிபிசிஐடி!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top