மாயமாகும் கவுன்சிலர்கள்?! - களைகட்டும் கடலூர் மேயர் தேர்தல்... திமுக அமைச்சர்களுக்கு `செக்’?!

0

கடலூர் மாவட்டத்தில் கடலூர் மாநகராட்சி, 6 நகராட்சிகள் மற்றும் 14 பேரூராட்சிகளுக்கான தேர்தல் கடந்த பிப்ரவரி 19-ம் தேதி தேர்தல் நடைப்பெற்றது. 45 வார்டுகளைக் கொண்ட இந்த மாநகராட்சித் தேர்தலில் தி.மு.க நேரடியாக 27 இடங்களையும், அ.தி.மு.க 6 இடங்களையும், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலா 3 இடங்களையும், பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் தலா ஒரு இடங்களையும், சுயேட்சைகள் 3 இடங்களையும் பிடித்தனர். தேர்தல் முடிவுகள் வெளியான அன்றே இரண்டு சுயேட்சைகளை வளைத்துப் போட்டது தி.மு.க. இதன்மூலம் தி.மு.க கூட்டணி கவுன்சிலர்களின் பலம் 36 ஆக அதிகரித்தது.

கடலூர் மாநகராட்சி மேயர் தேர்தல்

தொடர்ந்து புதிய மாநகராட்சியின் 45 கவுன்சிலர்களும் நேற்று முன்தினம் பதவியேற்றுக் கொண்டனர். பதவியேற்றுக்கொண்ட வார்டு கவுன்சிலர்கள் தங்களின் மேயர் மற்றும் துணை மேயர்களை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல் இன்று நடக்கவிருக்கிறது. போட்டிகள் இருந்தால் தேர்தலும், போட்டிகள் இல்லையென்றால் ஒருமனதாகவே மேயர் மற்றும் துணை மேயர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

முதல் மாநகராட்சியின் முதல் மேயர் பதவியை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துவிட வேண்டுமென்று நினைத்த அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், தனது தீவிர ஆதரவாளரான கடலூர் நகரச் செயலாளர் கே.எஸ்.ராஜாவின் மனைவி சுந்தரியை களமிறக்கினார். அதேபோல மாவட்டப் பொருளாளரான வி.எஸ்.எல்.குணசேகரன் தனது மனைவி கீதாவை மேயராக்கிவிட வேண்டுமென்று களமிறங்கினார். உள்ளாட்சி தேர்தலில் கட்சித் தலைமை இவர்களின் பெயர்களை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதற்கு முன்பாகவே, தி.மு.க கட்சித் துண்டுடன் சென்று வேட்புமனுவை தாக்கல் செய்தார் நகரச் செயலாளர் கே.எஸ்.ராஜாவின் மனைவி சுந்தரி.

கீதா குணசேகரன்

”நகரச் செயலாளர் என்றால் கட்சியின் கட்டுப்பாட்டை மீறலாமா ? கட்சித் தலைமை அறிவிக்கும் முன்பே தன்னிச்சையாக எப்படி வேட்புமனுவை தாக்கல் செய்யலாம்? வேட்பாளர் பட்டியலில் பெயர் இருப்பதை அவருக்கு சொன்னது யார்?” என்று தலைமைக்கு போன் போட்டு புகார் கடிதம் வாசித்தனர் கட்சியின் மூத்த உறுப்பினர்கள். ஆனால் அந்த புகார்களை தவிடு பொடியாக்கிய அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், தனது அதிகாரத்தால் கே.எஸ்.ராஜா மற்றும் அவரது மனைவி இருவருக்குமே சீட் வழங்க நொந்துபோனார்கள் கட்சி நிர்வாகிகள்.

கீதா குணசேகரன், சுந்தரி ராஜா இருவரும் வெற்றிபெற்ற நிலையில், நகரச் செயலாளரான கே.எஸ்.ராஜா தனது சொந்த வார்டிலேயே தோல்வியடைந்தார். அதையடுத்து மேயர் பதவியை பிடிக்க கே.எஸ்.ராஜாவும், வி.எஸ்.எல் குணசேகரனும் காய் நகர்த்தி வந்த நிலையில், கே.எஸ்.ராஜாவின் மனைவி சுந்தரியை மேயர் வேட்பாளராக அறிவித்தது கட்சித் தலைமை. அந்த அறிவிப்பின் பின்னணியில் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தனது செல்வாக்கை செலுத்தினார் என்று தகவல் வெளியாக, உஷ்ணமானது வி.எஸ்.எல் குணசேகரன் தரப்பு.

அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்

``இதுவரை கட்சி நமக்கு பெரிதாக எதையும் செய்யவில்லை. இனிமேல் செய்யப்போவதும் இல்லை” என்று நினைத்த வி.எஸ்.எல் தரப்பு தனது சதுரங்க ஆட்டத்தை துவக்கியது. அடுத்தடுத்த நிமிடங்களில் செல்போன்களை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டு மாயமானார்கள் தி.மு.கவின் கவுன்சிலர்கள். மாயமான அந்த கவுன்சிலர்கள் அனைவரும் தற்போது வி.எஸ்.எல் குணசேகரன் கட்டுப்பாட்டில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அவர்களுடன் பா.ஜ.க மற்றும் பா.ம.கவின் இரண்டு கவுன்சிலர்களும் ஐக்கியமாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்த காய் நகர்த்தலின் பின்னணியில் கடலூர் தொகுதியின் எம்.எல்.ஏ அய்யப்பன் இருப்பதாக அடித்துக் கூறுகிறது எதிர் தரப்பு.

மாயமான தி.மு.க கவுன்சிலர் ஒருவரிடம் பேசினோம். தனது அடையாளத்தை வெளியிடக்கூடாது என்ற நிபந்தனையுடன் நம்மிடம் பேச ஆரம்பித்தவர், ``எங்களை யாரும் கடத்தவில்லை. நாங்கள்தான் தலைமறைவாக இருக்கிறோம். நாங்கள் ஒவ்வொருவரும் பலமாக செலவு செய்து வெற்றிபெற்றிருக்கிறோம். அதனை ஈடுகட்ட வேண்டும். தலைமை சொல்லிவிட்டதே என்று நாங்கள் போண்டியாக முடியாது” என்றார் ஆவேசமாக. கவுன்சிலர்கள் மாயமான விவகாரம் கடலூர் முழுவதும் பரவியதையடுத்து, அவர்களை சமாதானப்படுத்தும் தொடர் முயற்சியில் இறங்கியிருக்கிறாராம் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.

அமைச்சர் சி.வி கணேசன்

இது ஒருபுறமிருக்க நெல்லிக்குப்பம் நகராட்சியிலும் தலைமைக்கு எதிராக கம்பு சுற்றுகின்றனர் தி.மு.க கவுன்சிலர்கள். நெல்லிக்குப்பம் நகராட்சியின் சேர்மன் பதவி பொதுப்பிரிவு பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. 30 வார்டுகளைக் கொண்ட இந்த நகராட்சியில் தி.மு.க நேரடியாக 13 இடங்களையும், காங்கிரஸ், முஸ்லிம் லீக், ம.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் தலா ஒரு இடத்தையும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இரண்டு இடங்களையும் பிடித்தது. இவர்கள் தவிர 7 சுயேட்சைகள் வார்டுகளைக் கைப்பற்றியிருந்தனர். தி.மு.க தரப்பில் ஆர்.ஆர். மெட்ரிக் பள்ளியின் உரிமையாளரும், தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் கௌரவ செயலாளருமான ராதாகிருஷ்ணன் மனைவி ஜெயந்தி ராதாகிருஷ்ணன்தான் சேர்மன் வேட்பாளர் என்று கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் கூட்டணி கட்சியான வி.சி.கவுக்கு அந்த சேர்மன் பதவி ஒதுக்கப்பட்டதால் கடும் அதிருப்தியடைந்த ராதாகிருஷ்ணன் தரப்பு, தி.மு.கவின் 13 கவுன்சிலர்கள் மற்றும் 7 சுயேட்சை கவுன்சிலர்களை இரவோடு இரவாக ரகசிய இடத்துக்கு அழைத்து சென்றதாக தகவல் வெளியாகியிருக்கிறது. “சேர்மன் பதவி உங்களுக்குத்தான் என்று அமைச்சர் சி.வெ.கணேசன் வாக்குறுதி கொடுத்ததால்தான் ராதாகிருஷ்ணன் வைட்டமின்களை தண்ணீர் மாதிரி கடன் வாங்கி செலவு செய்தார். கட்சி பணம் கொடுக்காத நிலையில் சேர்மன் வேட்பாளர் என்ற முறையில் மற்ற வேட்பாளர்களின் செலவையும் ராதாகிருஷ்ணன்தான் பார்த்தார்.

அப்படி இருக்கும்போது கூட்டணி கட்சிக்கு ஒதுக்குவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். கடந்த 4 தேர்தல்களிலும் சேர்மன் பதவி தனிப்பிரிவினரிடம் இருந்ததால்தான் இந்தமுறை பொதுப்பிரிவுக்கு ஒதுக்கப்பட்டது. அப்படி இருக்கும்போது கூட்டணி என்ற பெயரில் மீண்டும் தனிப்பிரிவினருக்கே ஒதுக்குவது எப்படி சரியாக இருக்கும் ? மக்கள் எப்படி அதனை ஏற்றுக்கொள்வார்கள் ? இதை முன்பே சொல்லியிருந்தால் நாங்கள் ஏன் கந்து வட்டிக்கு கடன் வாங்கி இவ்வளவு செலவு செய்திருக்கப் போகிறோம் ? எங்களை நம்பவைத்து ஏமாற்றிய கட்சி இனி எங்களுக்கு தேவையில்லை. மறைமுகத் தேர்தலில் பார்த்துக்கொள்ளலாம்” என்று கொதிக்கிறது ராதாகிருஷ்ணன் தரப்பு.

தி.மு.க கவுன்சிலர்களின் இந்த ஆடுபுலி ஆட்டத்தால் செய்வதறியாமல் திகைத்து நிற்கின்றனர் மாவட்டத்தின் இரண்டு அமைச்சர்களும்!


மேலும் படிக்க மாயமாகும் கவுன்சிலர்கள்?! - களைகட்டும் கடலூர் மேயர் தேர்தல்... திமுக அமைச்சர்களுக்கு `செக்’?!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top