ஓய்வுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே... அரசு வேலைக்காக தந்தையை, மகனே கொன்ற கொடூரம்!

0

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பேரூராட்சியில் தூய்மைப் பணியாளராக பணிபுரிந்து வந்தவர், கீரனூர் திடீர் நகரைச் சேர்ந்த கருப்பையா. இவர் கடந்த 19-ம் தேதி வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரின் மகன் பழனியோ, அப்பா அளவுக்கு அதிகமாக மது குடித்திருந்தார். போதையில், இருந்தவர் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு இறந்துவிட்டதாகக் கூறியிருக்கிறார். இந்த நிலையில் தான், சந்தேகத்தின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் விசாரணையும் நடந்து வந்தது. பிரேதப் பரிசோதனை முடிவில், இறந்து போன கருப்பையா குடித்த மதுவில் விஷம் கலந்து இருந்ததும், உடலில் ஆங்காங்கே காயங்கள் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, கருப்பையாவின் மகனைப் பிடித்து விசாரித்த போது அதிர்ச்சித் தகவல் கிடைத்திருக்கிறது.

தந்தை மகன்

போலீஸார் விசாரணையில், இறந்து போன கருப்பையா தூய்மைப் பணியாளராக பணியாற்றி வந்த நிலையில், இன்னும் சில மாதங்களில் ஓய்வு பெற இருக்கிறார். அப்பா ஓய்வு பெறுவதற்கு முன்பு அவர் மரணமடைந்துவிட்டால், அப்பாவின் வேலை தனக்குக் கிடைத்துவிடும் என்று தப்புக்கணக்குப் போட்டுள்ளார். இந்த நிலையில் தான், மது குடிக்கும் பழக்கமுடைய தனது தந்தை கருப்பையாவுக்கு மது வாங்கிக்கொடுத்து அதில், விஷத்தையும் கலந்து கொடுத்திருக்கிறார். விஷம் குடித்தும் கருப்பையா இறக்கவில்லை. இதற்கிடையே ஈச்சங்காட்டைச் சேர்ந்த ஆனந்த் என்பவருடன் சேர்ந்த பழனி, தந்தை கருப்பையாவை அடித்தே கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அரசு வேலைக்காக பெற்ற தந்தையையே மகன் கொலை செய்த சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் பரபர்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


மேலும் படிக்க ஓய்வுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே... அரசு வேலைக்காக தந்தையை, மகனே கொன்ற கொடூரம்!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top