திருவாரூர் விநாயகர் சிலை திருட்டு வழக்கு... ஆறு ஆண்டுகளுக்கு பிறகு சிக்கிய நபர்!

0

திருவாரூர் அருகே பிரசித்தி பெற்ற கோயில் ஒன்றில் விநாயகர் சிலை திருடப்பட்ட வழக்கில், சிலை திருட்டில் ஈடுப்பட்ட முக்கிய குற்றவாளி தலைமறைவாக இருந்து போலீஸாருக்கு தண்ணி காட்டி வந்த நிலையில், ஆறு ஆண்டுகளுக்கு பிறகு அந்த குற்றவாளியை கைது செய்தனர்.

கைது

திருவாரூர் மாவட்டம் எரவாஞ்சேரி அருகே உள்ள பூங்குடிமூலை கிராமத்தில், பிரசித்தி பெற்ற வரசித்தி விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஒன்றரை அடி உயரம் கொண்ட உலோக விநாயகர் சிலை இருந்தது. விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட விழா நாள்களில் உற்சவரான உலோக விநாயகர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு உற்சவம் நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு சிறப்புமிக்க அந்த விநாயகர் சிலை திருட்டு போனது. இது தொடர்பாக எரவாஞ்சேரி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து விநாயகர் சிலை திருட்டு சம்பவத்தில் ஈடுப்பட்ட குற்றவாளிகள் என சிலர் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள சிறுபுலியூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞரான அகிலன்(எ)தங்கவேல் என்பவன் மட்டும் தலைமறைவாக இருந்து போலீஸாருக்கு தண்ணி காட்டி வந்தார்.

சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்ட அகிலன்

அகிலனை போலீஸார் பல வகையில் தேடியும் அவன் சிக்கவில்லை. இந்நிலையில் இந்த வழக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதனை தொடர்ந்து சிலைதிருட்டு வழக்குகளில் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை கைது செய்ய சிலைதிருட்டு தடுப்பு பிரிவு காவல்துறை இயக்குநர் ஜெயந்த்முரளி, காவல்துறை தலைவர் தினகரன் ஆகியோர் உத்தரவிட்டனர்.

அதன்படி கும்பகோணம் சரக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் தலைமையில் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் அகிலன் குறித்து நடத்திய தீவிர விசாரணையில் அவர் பேரளம் அருகிலுள்ள கொல்லுமாங்குடியில் பதுங்கி இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து அங்கு சென்ற காவல் ஆய்வாளர் இந்திரா தலைமையிலான தனிப்படையினர், விநாயகர் சிலை திருட்டில் ஆறு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளியான அகிலனை கைது செய்தனர்.

அப்போது, ``போலீஸார் என்னை பிடித்து விடாத அளவிற்கு எச்சரிக்கையுடன் இருந்தேன். ஆனால் எப்படியோ என்னை கைது செய்து விட்டனர்” என பேசியிருக்கிறார். கைது செய்யப்பட்ட அகிலன் திருவாரூர் மாவட்டத்தின் மேலும் ஒரு சிலைதிருட்டு வழக்கில் தொடர்பிருப்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அகிலனை ஆஜர்படுத்திய பின்னர் சிறையில் அடைத்தனர்.


மேலும் படிக்க திருவாரூர் விநாயகர் சிலை திருட்டு வழக்கு... ஆறு ஆண்டுகளுக்கு பிறகு சிக்கிய நபர்!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top