விருதுநகர் கூட்டு பாலியல் வன்கொடுமை விவகாரம்... திமுக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்!

0

விருதுநகர் பாண்டியன் நகர் பகுதியில் பட்டியல் வகுப்பைச் சேர்ந்த இளம்பெண்ணும் மேல தெருவைச் சேர்ந்த ஹரிஹரன் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். தொடர்ந்து இருவரும் தனிமையில் இருந்ததை ஹரிஹரன் இளம் பெண்ணுக்கே தெரியாமல் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து வைத்துள்ளார். இதனை தனது நண்பர்களான ஜுனைத் அகமது, மாடசாமி, பிரவீன் மற்றும் 17 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்கள் நான்கு பேருக்கும் அனுப்பி வைத்துள்ளார். ஹரிஹரனை தொடர்ந்து மற்றவர்களும் இளம்பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்டு தனிமையில் இருக்க கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

ஹரிஹரன் & ஜூனைத் அகமது

இந்தநிலையில் இளம்பெண்ணுக்கு திருமண ஏற்பாடுகள் செய்து வந்துள்ளனர். இதையறிந்து ஹரிஹரன் உள்பட 8 பேரும் தொடர்ந்து தங்களுடன் தனிமையில் இருக்க அப்பெண்ணை கட்டாயப்படுத்தியுள்ளனர். இந்தநிலையில் பாலியல் வன்கொடுமை தொடர்பாக இளம்பெண் அளித்த புகாரின் பேரில் ஊரக காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து ஹரிஹரன், மாடசாமி, பிரவீன், ஜூனைத் அகமது மற்றும் பள்ளி மாணவர்கள் நான்கு பேர் உள்பட வழக்கில் சம்பந்தப்பட்ட 8 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஜூனைத் அகமது விருதுநகர் 10-வது வார்டு திமுக இளைஞரணி அமைப்பாளராக உள்ளார். ஹரிஹரன் 24-வது வார்டு இளைஞரணி உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பட்டியல் வகுப்பைச் சேர்ந்த பெண்ணுக்கு திமுக பிரமுகர்களால் இழைக்கப்பட்ட அநீதியைக் கண்டித்து வரும் 24-ம் தேதி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என விருதுநகர் பாஜக சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டதை தொடர்ந்து, பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளர் ஜூனைத் அகமது-வை திமுகவிலிருந்து நீக்கி கட்சி பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

திமுக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ``கழகத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்திலும், அவப்பெயரை உண்டாக்கும் விதத்திலும் செயல்பட்ட விருதுநகர் 10-ஆவது வார்டு இளைஞரணி அமைப்பாளர் ஜூனைத் அகமது கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க விருதுநகர் கூட்டு பாலியல் வன்கொடுமை விவகாரம்... திமுக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top