காங்கிரஸ்: ``எத்தகைய தியாகத்துக்கும் தயார்” -சோனியா காந்தி.. காரிய கமிட்டி கூட்டத்தில் நடந்தது என்ன?

0

உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் கடந்த 10-ம் தேதி வாக்கு எண்ணிக்கையோடிநடந்து முடிந்தது. இதில், காங்கிரஸ் கட்சியானது ஒரு மாநிலத்தில் கூட ஆட்சியைப் பிடிக்கமுடியாமல் தோல்வியடைந்துள்ளது. அதிலும் முக்கியமான மாநிலமாக பார்க்கப்பட்ட உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் வெறும் 2 இடங்களை மட்டுமே பெற்று படுதோல்வியைச் சந்தித்தது. மேலும் பஞ்சாப்பில் ஏற்கெனவே இருந்த ஆட்சியைக் கூட தக்கவைத்துக்கொள்ளவில்லை. இதில் பா.ஜ.க, பஞ்சாப்பை தவிர்த்து மற்ற 4 மாநிலங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. மேலும் பஞ்சாப்பில் 92 இடங்களைக் கைப்பற்றிய ஆம் ஆத்மி அங்கு முதல்முறையாக ஆட்சியமைக்கவுள்ளது.

காங்கிரஸ்

இதையடுத்து காங்கிரஸ் தலைமை முன்னதாக அறிவித்தபடி, காங்கிரஸ் கட்சி இடைக்கால தலைவர் சோனியாகாந்தி தலைமையில் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் ராகுல் காந்தி, பா. சிதம்பரம், பிரியங்கா காந்தி உள்பட முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் கலந்துகொண்டனர். மேலும் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சி மூத்த தலைவருமான மன்மோகன் சிங் உள்பட 5 மூத்த காங்கிரஸ் தலைவர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

கட்சியின் தோல்விக்கான காரணங்கள், எதிர்கால திட்டங்கள், கட்சியில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள், நிர்வாக ரீதியிலான உட்கட்சி தேர்தல் தொடர்பாக காங்கிரஸின் காரிய கமிட்டி கூட்டத்தில் பேசப்பட்டன. நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் தோல்விக்கு தாங்கள்தான் காரணம் என காரிய கமிட்டி கருதினால் கட்சியின் நலனுக்காக எத்தகைய தியாகத்தையும் செய்யத் தயார் என சோனியா காந்தி தெரிவித்ததாகவும் தகவல் வெளியானது. எனினும் , சோனியா காந்தி மீது தங்களுக்கு நம்பிக்கை உள்ளதாக காரிய கமிட்டி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சோனியா, ராகுல், பிரியங்கா

காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்துக்கு பிறகு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே செய்தியாளர்களிடம், ``காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா எங்களை வழிநடத்தி, எதிர்கால நடவடிக்கைகளை எடுப்பார். அவரது தலைமையின் மீது அனைவருக்கும் நம்பிக்கை உள்ளது” எனத் தெரிவித்தார்.

கூட்டத்துக்குப் பின் வெளியான அறிக்கையில், “ஐந்து மாநிலங்களின் சமீபத்திய சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இந்திய தேசிய காங்கிரஸுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. எங்களின் வியூகத்தில் உள்ள குறைபாடுகள் காரணமாக, நான்கு மாநிலங்களில் பாஜக மாநில அரசுகளின் தவறான ஆட்சியை திறம்பட அம்பலப்படுத்தவும், தலைமை மாற்றத்தை ஏற்படுத்திய குறுகிய காலத்தில் பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சிக்கு எதிரான விஷயங்களை சமாளிக்கவும் முடியவில்லை என்பதை கட்சி ஏற்றுக்கொள்கிறது.

இன்று நாட்டில் நிலவும் அரசியல் எதேச்சதிகாரத்திற்கு எதிரான லட்சகணக்கான இந்தியர்களின் நம்பிக்கையை காங்கிரஸ் கட்சி பிரதிநிதித்துவப்படுத்துகிறது. கட்சி தனது மகத்தான பொறுப்பை முழுமையாக உணர்ந்துள்ளது.

காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்

கட்சிக்காகவும் அதன் வேட்பாளர்களுக்காகவும் அயராது உழைத்த ஐந்து மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் தலைவர்களுக்கு காங்கிரஸ் காரிய கமிட்டி தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

சமீபத்திய சட்டமன்றத் தேர்தல்களின் தேர்தல் தீர்ப்பை பணிவுடன் ஏற்கும் அதே வேளையில், காங்கிரஸ் கட்சி தனது தொண்டர்களுக்காவும் இந்திய மக்களுக்காகவும் தொடர்ந்து விழிப்புடனும் துடிப்பான எதிர்க்கட்சியாகவும் இருக்கும் என்று உறுதியளிக்கிறது. 2022, 2023 ம் ஆண்டு தேர்தல் நடைபெறும் மாநில தேர்தல்களிலும் 2024 ம் ஆண்டு மக்களவைத் தேர்தல்களிலும், சவால்களை எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சி முழுமையாக தயாராக இருக்கும்.

காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்

சோனியா காந்தியின் தலைமையின் மீதான நம்பிக்கையை காங்கிரஸ் காரிய கமிட்டி ஒருமனதாக உறுதிப்படுத்துகிறது. காங்கிரஸ் தலைவர் முன்னணியில் இருந்து வழிநடத்தவும், நிறுவன பலவீனங்களை நிவர்த்தி செய்யவும், அரசியல் சவால்களை எதிர்கொள்ள தேவையான மற்றும் விரிவான நிறுவன மாற்றங்களை ஏற்படுத்தவும் கேட்டுக்கொள்கிறது.” என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் கட்சியின் அமைப்புத் தேர்தல் நடத்தப்படும்வரை காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி தொடர்வார் என்றும், ஏப்ரல் மாதத்தில் சிந்தனைக் கூட்டம் நடத்தப்படும் என்றும் முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். அதற்கும் முன்னதாக காங்கிரஸ் காரிய கமிட்டி மீண்டும் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க காங்கிரஸ்: ``எத்தகைய தியாகத்துக்கும் தயார்” -சோனியா காந்தி.. காரிய கமிட்டி கூட்டத்தில் நடந்தது என்ன?
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top