கர்நாடகா: தீண்டாமை ஒழிப்பு திட்டத்துக்கு பட்டியலின சிறுவனின் பெயரும், புறக்கணிக்கப்பட்ட குடும்பமும்!

0

கர்நாடக அரசின் தீண்டாமை ஒழிப்புத் திட்டத்துக்குப் பட்டியலின சிறுவனின் பெயர் சூட்டப்பட்ட நிலையில், அந்த கிராமம் சிறுவனின் குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளது. அதனால், வாழ்வதற்கு வேறு இடம் தேடி அந்த குடும்பம் செல்லும் நிலை உருவாகியுள்ளது.

கர்நாடக மாநிலம் முழுவதும் உள்ள கிராம பஞ்சாயத்துகளில், சாதி பாகுபாட்டுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தக் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை அரசு, `வினய சமரஸ்ய யோஜனா எனும் திட்டத்தை அறிவித்துள்ளது. மேலும் இந்த திட்டம் அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14 அன்று கொடியேற்றித் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பசவராஜ் பொம்மை

கர்நாடகாவின் கொப்பால் மாவட்டத்தில் உள்ள மியாபூர் கிராமத்தில், 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மழையிலிருந்து ஒதுங்குவதற்குக் கோவிலுக்குள் சென்ற பட்டியலின சிறுவன் வினய்-யின் குடும்பத்துக்கு கிராம முக்கியஸ்தர்கள் ரூ.25,000 அபராதம் விதித்தனர். அதைத் தொடர்ந்து அளிக்கப்பட்ட புகாரில் சிலர் கைது செய்யப்பட்டனர். அதன்பின் அவர்கள் அனைவரும் ஜாமீனில் வெளிவந்தனர்.

இதைத் தொடர்ந்து, கர்நாடக அரசு தீண்டாமை ஒழிப்புக்கு எதிரான இந்த திட்டத்துக்கு வினய சமரஸ்ய யோஜனா திட்டம் என பெயர் சூட்டியுள்ளது.

அம்பேத்கர்

இந்த சம்பவத்துக்குப் பிறகு அங்கு வாழும் பட்டியலின மக்கள் மேலும் மோசமாக நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. மேலும், கிராம மக்கள் வினய் குடும்பத்தைக் கிராமத்தை விட்டே ஒதுக்கி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாகத் தனியார் செய்தி நிறுவனத்துக்கு வினய்-யின் தந்தை சந்திரசேகர் சிவபதாசரா அளித்த பேட்டியில்,"அந்த சம்பவத்துக்குப் பிறகு பட்டியலின மக்களுக்குக் கொடுமைகள் அதிகரித்தன.

நானும் எனது குடும்பமும் கிராமத்தை விட்டு வெளியேறவும், விவசாய நிலம் உள்ளிட்ட சொத்துக்களை அப்படியே விட்டுச் செல்ல வேண்டும் எனவும் கட்டாயப்படுத்தப்பட்டோம். பட்டியலின மக்களும் கலந்து கொள்வார்கள் என்பதாலே, கிராமத்தில் வருடத்துக்கு ஒருமுறை வரும் கோவில் திருவிழாவும் ரத்து செய்யப்பட்டது. எங்களுக்கு அவசர உதவி தேவைப்பட்டாலும், அது எங்களுக்குக் கிடைக்காது.

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை

தற்போது, என் குடும்பம் வினய்-யின் தாய்வழி பாட்டி ஊரான யெல்பர்காவில் வசிக்கிறது. இந்த தீண்டாமையை ஒழிக்க முடியாவிட்டால், அரசுத் திட்டத்திற்குத் தனது மகனின் பெயரைச் சூட்டுவது பயனற்றது" எனக் குறிப்பிட்டார்.

யெல்பர்காவில், ``அவர்களுக்கு நிலம் வழங்கவும், வீடு கட்டுவதில் அவர்களுக்கு உதவவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்று சமூக நலத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க கர்நாடகா: தீண்டாமை ஒழிப்பு திட்டத்துக்கு பட்டியலின சிறுவனின் பெயரும், புறக்கணிக்கப்பட்ட குடும்பமும்!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top