Fact Check: அசைந்த பிணம்; போரில் உயிரிழந்ததுபோல நடித்தவர்களைப் படம்பிடித்ததா உக்ரேனிய நியூஸ் சேனல்?!

0

தொடர்ந்து பத்தாவது நாளாக உக்ரைன் - ரஷ்யா நாடுகள் இடையே போர் நடந்துவருகிறது. சமூக வலைதளங்களில் போர் தொடர்பாக பல்வேறு போலிச் செய்திகள் வலம்வந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில், ``உக்ரைனைச் சேர்ந்த செய்தி நிறுவனம் ஒன்று, போரில் பல பேர் உயிரிழந்துவிட்டனர் எனப் போலி நாடகம் நடத்தி செய்தி வெளியிட்டிருக்கிறது'' என்று கூறி வீடியோ ஒன்றைப் பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர்.

அந்த வீடியோவில், தொலைக்காட்சி நிருபர் ஒருவர் கேமேராவைப் பார்த்து உக்ரேனிய மொழியில் பேசிக்கொண்டிருக்கிறார். அவருக்குப் பின்புறம் கருப்பு நிற உறைகளால் மூடப்பட்ட பல பிணங்கள் வரிசையாக வைக்கப்பட்டிருக்கின்றன. அதில், முதல் வரிசையில் வைக்கப்பட்டிருந்த கருப்பு உறைக்குள் படுத்திருந்த நபர், உறையிலிருந்து வெளியே வந்து எதையோ சரி செய்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. மேலும் வேறு ஒரு நபர் வந்து, உறையிலிருந்து வெளியே வந்த நபரை, மீண்டும் கருப்பு உறைக்குள் வைத்துப் போர்த்துவது போன்ற காட்சிகளையும் அந்த வீடியோவில் காணமுடிகிறது.

பரவிய செய்தி!

இந்த வீடியோவைப் பகிர்ந்த ரஷ்ய ஆதரவாளர்கள் சிலர், ``பாருங்கள், உக்ரைனில் பல பேர் உயிரிழந்துவிட்டதாகக் கூறி உலக நாடுகளின் அனுதாபத்தைப் பெறுவதற்காக நாடகமாடுகின்றனர். மேற்கத்திய நாடுகள் செய்யும் சதி வேலைதான் இது!'' என்பது போன்ற கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டுவந்தனர். இதனால், இந்த வீடியோ உலக முழுக்க வைரலாகப் பரவியது. இந்தியாவிலும் சிலர் இந்த வீடியோவை பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

உண்மை என்ன?

சமூக வலைதளங்களில் பரவிய அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்த `Wien: Demo gegen Klimapolitik' என்ற வார்த்தைகளைக் கொண்டு கூகுள் தேடலில் ஈடுபட்டபோது நமக்கு சில செய்திகள் கிடைத்தன. உக்ரைனைச் சேர்ந்த `OE24.TV' என்ற செய்திச் சேனலில் இந்த வீடியோ, பிப்ரவரி 4, 2022 அன்று ஒளிபரப்பப்பட்டிருக்கிறது. அதாவது உக்ரைன் - ரஷ்யா போர் தொடங்குவதற்கு முன்பாகவே இந்த வீடியோ வெளியாகியிருக்கிறது. மேலும், இந்த வீடியோ ஒரு போராட்டத்தின்போது எடுக்கப்பட்டது என்பதும் நமக்குத் தெரியவந்தது.

ஆஸ்திரியா நாட்டின் தலைநகர் வியன்னாவில் செயல்பட்டுவரும் `Fridays For Future Wien' என்ற அமைப்பு காலநிலை மாற்றம் தொடர்பாக நடத்திய போராட்டத்தில், 49 பேர் கருப்பு உறைக்குள் இருந்து உயிரிழந்தவர்களைப்போல நூதன முறையில் போராட்டம் நடத்தியிருக்கின்றனர். அது தொடர்பான வீடியோதான் தற்போது, உக்ரைன் போரோடு சம்பந்தபடுத்தப்பட்டு தவறாகப் பரப்பப்பட்டுவருகிறது என்பது நமது தேடலில் தெரியவந்தது!


மேலும் படிக்க Fact Check: அசைந்த பிணம்; போரில் உயிரிழந்ததுபோல நடித்தவர்களைப் படம்பிடித்ததா உக்ரேனிய நியூஸ் சேனல்?!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top