2022 குருப்பெயர்ச்சி கன்னி ராசிபலன்கள்

0

மனிதநேயம் மாறாதவர் நீங்கள். குருபகவான் 14.4.22 முதல் 22.4.23 வரை உங்கள் ராசிக்கு 7-ல் அமர்ந்து, உங்களை நேருக்கு நேர் பார்க்கவுள்ளார். உங்களு டைய திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சீராகும்.

ழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகு முறையால் தீர்வு காண்பீர்கள். வி.ஐ.பிகள் நண்பர்களாவார்கள். கடன் வாங்கி ஏமாற்றியவர்கள், பணத்தைத் திருப்பித் தருவர். குடும்பத்தில் மதிப்பு கூடும். பிரிந்திருந்த தம்பதி ஒன்றுசேர்வர். `வாரிசு இல்லையே' என ஏங்கித் தவித்த தம்பதிக்கு அழகான குழந்தை பிறக்கும்.

பிள்ளைகளின் வாழ்க்கைத் தரம் உயரும். குலதெய்வக் கோயிலைப் புதுப்பிப்பீர்கள். வெளி வட்டாரத்தில் மரியாதை கூடும். வேலைக்காகக் காத்திருக்கும் அன்பர்களுக்கு நல்ல தகவல் வந்து சேரும். திருமணம் தள்ளிப்போனவர்களுக்கு விரைவில் கல்யாணம் கூடிவரும். அயல்நாடு செல்லும் வாய்ப்பும் சிலருக்குக் கிட்டும். மீதித் தொகையைக் கொடுத்து புதிய சொத்துக்குப் பத்திரப் பதிவு செய்வீர்கள். பழைய வழக்குகள் சாதகமாகும். கெளரவப் பதவி வந்து சேரும்.

குருபகவானின் பார்வை பலன்கள்

குரு உங்கள் ராசியை நேருக்கு நேர் பார்ப்பதால் குடும்பத்தில் சந்தோஷம் குடிகொள்ளும். வங்கிக் கடனுதவியுடன் வீடு கட்டும் பணியை நிறைவு செய்வீர்கள். சொத்துப் பிரச்னை தீரும். மூத்த சகோதரி பண உதவிசெய்வார். இளைய சகோதரர் களுடனான மனத்தாங்கல் நீங்கும்.

குரு உங்களின் லாப வீட்டைப் பார்ப்பதால் தொட்டது துலங்கும். விலையுயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். ராசிக்கு 3-ம் வீட்டை குரு பார்ப்பதால் கௌரவப் பதவிகள் தேடி வரும். உங்களால் பயன் அடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவ முன் வருவர். அரசியல்வாதிகள் தலைமைக்கு நெருக்கமாவார்கள்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்...

14.4.22 முதல் 29.4.22 வரை, குருபகவான் தன் நட்சத்திரத்திரமான பூரட்டாதியில் 4-ம் பாதத்தில் செல்வதால், புதிய முயற்சிகள் பலிதமாகும். எதிர்பாராத பணவரவு உண்டு. பூர்வீகச் சொத்தில் இருந்த சிக்கல் தீரும். வழக்குகள் சாதகமாகும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் குறையும். அரசாங்கத்தாலும் அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் அடைவீர்கள்.

30.4.22 முதல் 24.2.23 வரை உங்களின் பூர்வ புண்ய, ரோகாதிபதியான சனி பகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குரு செல்வதால், தள்ளிப்போன திருமணம் உடனே முடியும். மகனுக்கு வேலை கிடைக்கும். பணப் புழக்கம் அதிகரித்தாலும் செலவுகளும் துரத்தும். 8.8.22 முதல் 16.11.22 வரை உத்திரட்டாதி நட்சத்திரத்திலேயே குரு வக்ரத்தில் செல்வதால் புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பூர்வீகச் சொத்தைச் சீர்செய்வீர்கள். 24.2.23 முதல் 22.4.23 வரை புதனின் ரேவதி நட்சத்திரத்தில் குரு செல்வதால் வேலை கிடைக்கும். கால் வலி, முதுகு வலி நீங்கும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். புதிதாக வீடு, மனை, வாகனம் வாங்குவீர்கள்.

வியாபாரத்தில்

இனி திட்டம் தீட்டிச் செயல் படுவீர்கள். பற்று-வரவு உயரும். பிரபலங்களின் உதவியால் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். பர்னிச்சர், உணவு, எண்ணெய் வகைகளால் லாபம் அடைவீர்கள். டிசம்பர், ஜனவரி மாதங்களில் புதிய ஏஜென்ஸி எடுப்பீர்கள். பழைய பாக்கிகள் வந்து சேரும். கூட்டுத் தொழிலில் பிரச்னைகள் ஓயும். பங்குதாரர்கள் பணிந்து வருவார்கள்.

உத்தியோகத்தில்

டுமையாக உழைத்தாலும் அவப்பெயர்தானே வந்தது. இனி அந்த அவல நிலை மாறும். உயரதிகாரி உங்களுக்கு ஆதரவாகவே செயல்படுவார். நீங்கள் நினைத்தபடி பதவி மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்கள் மூலம் புதிய வாய்ப்பு களும் தேடிவரும். மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி சமூகத்தில் மதிப்பு - மரியாதையைப் பெற்றுத் தருவதுடன், உங்களின் நீண்டகால ஆசைகளை நிறைவேற்றுவதாகவும் அமையும்.

பரிகாரம்: அனுஷம் நட்சத்திர நாளில் சென்னை திருவலிதாயத்தில் (பாடி) அருளும் ஶ்ரீகுருபகவானை, நெய் விளக்கேற்றி வணங்கி வாருங்கள். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அன்பர்களுக்கு உதவுங்கள்; நல்லது நடக்கும்.


மேலும் படிக்க 2022 குருப்பெயர்ச்சி கன்னி ராசிபலன்கள்
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top