சென்னை: விசாரணைக் கைதி மரணம்; 3 பேர் சஸ்பெண்ட் - சிபிசிஐடி-க்கு வழக்கு மாற்றம்!

0

சென்னை கெல்லீஸ் சந்திப்பில் தலைமைச் செயலக காலனி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புகழும் பெருமாள், காவலர் பொன்ராஜ், ஊர்காவல்படையைச் சேர்ந்த தீபக் ஆகியோர் 18.4.2022-ம் தேதி இரவு 11.30 மணியளவில் வாகனச் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஆட்டோவில் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த சுரேஷ் என்கிற ஜொள்ளு சுரேஷ் (28), பட்டினம்பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்கிற விக்னா (25) ஆகியோர் வந்தனர். அவர்களிடம் போலீஸார் விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணான தகவல்களைத் தெரிவித்தனர்.

தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தி இருவரிடமிருந்து 50 கிராம் கஞ்சா, மதுபாட்டில்கள், கத்தி, ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக தலைமைச் செயலக காலனி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். 19.4.2022-ம் தேதி காலையில் இருவருக்கும் போலீஸார் சிற்றுண்டி வழங்கினர். சிறிது நேரத்தில் விக்னேஷுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக போலீஸார் அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு விக்னேஷை பரிசோதித்த டாக்டர்கள், நாடி துடிப்பு குறைவாக உள்ளதால் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவனைக்கு அழைத்துச் செல்லும்படி தெரிவித்தனர். அங்கு அவரைப் பரிசோதித்தபோது வரும்வழியில் விக்னேஷ் உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

கஞ்சா

இதையடுத்து சுரேஷை மட்டும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவன் மீது இரண்டு கொலை வழக்குகள் இரண்டு கூட்டு கொள்ளை வழக்குள் உட்பட 6 வழக்குகள் உள்ளன. உயிரிழந்த விக்னேஷ் மீது இரண்டு கொள்ளை வழக்கு உட்பட 4 வழக்குகள் உள்ளன. போலீஸ் விசாரணையின்போது விக்னேஷ் உயிரிழந்ததால் இணை கமிஷனர் பிரபாகரன் சம்பந்தப்பட்ட போலீஸாரிடம் விசாரணை நடத்தினார். கைதான சுரேஷ், பெயின்டராக வேலைப்பார்த்து வருகிறார். உயிரிழந்த விக்னேஷ், மெரினாவில் குதிரை ஓட்டும் வேலையைச் செய்துவந்தார் என்பது தெரியவந்தது.

சஸ்பெண்ட்

விசாரணையின்போது கைதி விக்னேஷ் உயிரிழந்ததால் எழும்பூர் 2-வது பெருநகர குற்றவியல் நடுவர் 19.4.2022-ம் தேதி தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்துக்கு வந்து ஜொள்ளு சுரேஷிடம் விசாரணை நடத்தினார். அப்போது அவனின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. பிரேத பரிசோதனைக்குப்பிறகு 20-ம் தேதி விக்னேஷ் சடலம் அவனின் அண்ணன் வினோத்திடம் ஒப்படைக்கப்பட்டு ஐஸ்ஹவுஸ் கிருஷ்ணாம்பேட்டை மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. விக்னேஷ் மரணம் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம், தேசிய மனித உரிமை ஆணையம் ஆகியவற்றுக்கு கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் கார்த்திக்கேயன் தகவல் தெரிவித்தார். பிரேத பரிசோதனை அறிக்கை, துறை விசாரணை அறிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வரும் சூழலில், சப்-இன்ஸ்பெக்டர் புகழும் பெருமாள், காவலர் பொன்ராஜ், ஊர்காவல்படை தீபக் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். அதையடுத்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை கைதி விக்னேஷ் மரணம் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.

போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் கைது செய்யப்பட்ட சுரேஷ், விக்னேஷ் ஆகியோர் சம்பவத்தன்று போதையில் இருந்துள்ளனர். மேலும் போலீஸார் அவர்களைப் பிடித்ததும் கத்தியை எடுத்து காவலர்களை தாக்க முயன்றுள்ளனர். அதில் தள்ளுமுள்ளு நடந்துள்ளது தெரியவந்துள்ளது. விக்னேஷை அடித்தே போலீஸார் கொலை செய்துவிட்டதாக அவரின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சிபிசிஐடி போலீஸார் விசாரணையில் விக்னேஷ் உயிரிழந்தது எப்படி என தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க சென்னை: விசாரணைக் கைதி மரணம்; 3 பேர் சஸ்பெண்ட் - சிபிசிஐடி-க்கு வழக்கு மாற்றம்!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top