"பெருந்தன்மை பெரும் பலனளிக்கும்!"- ஃபீல்ட் மார்ஷல் மானெக் ஷா வாழ்க்கை சொல்லும் 5 பாடங்கள்

0

விருப்பமில்லாத வழியைத் தேர்ந்தெடுத்தாலும் அதிலும் உச்சம் தொடலாம்

நைனிடாலில் உள்ள கல்லூரியில் மிகச் சிறப்பான மதிப்பெண்களுடன் கல்வியை முடித்தார் மானெக் ஷா. லண்டனுக்குச் சென்று மருத்துவக் கல்வி படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால் அவர் அப்பா இதற்கு அனுமதிக்கவில்லை (இத்தனைக்கும் அவரும் டாக்டர்தான்). ‘வெளிநாட்டில் தனியே தங்கும் அளவுக்கு உனக்கு வயது ஆகவில்லை’ என்று ஒரு காரணத்தைக் கூறினார். ஒருவித வெறுப்பில் இந்திய ராணுவத்திற்கான நுழைவுத் தேர்வை எழுதினார் மானெக் ஷா. அதில் தேர்வாகி பி​ன் ராணுவத்தில் பணியாற்றி அதிலும் உச்சம் தொட்டார்.

மானெக் ஷா

நகைச்சுவை உணர்வு என்றும் கைகொடுக்கும்

ஒருமுறை பர்மாவில் நடைபெற்ற யுத்தத்தில் மானெக் ஷாவின் உடலில் கடும் காயம் ஏற்பட்டது. குண்டுகளால் துளைக்கப்பட்டிருந்தது அவரது உடல். உடனடி அறுவை சிகிச்சை தேவை என்று தீர்மானித்த டாக்டர் என்ன நடந்தது என்று கேட்டார். அதற்கு மானெக் ஷா ‘பெரிதாக ஒன்றும் நடக்கவில்லை. ஒரு கழுதை என்னை உதைத்துவிட்டது’ என்றாராம். துன்பப்படும் நேரத்திலும் நேரத்தில் எப்படி ஒரு நகைச்சுவை பாருங்கள்! வாழ்வின் பல கட்டங்களில் இந்த நகைச்சுவை உணர்வு அவருக்குக் கைகொடுத்ததாம்.

தொடக்கப்புள்ளியாக நீங்கள் இருக்கலாம்

பங்களாதேஷ் என்ற புதிய நாடு இந்தியாவின் உதவியுடன் உருவானது. அதற்குப் பிறகு நேபாளத்திற்குச் சென்றிருந்தபோது அதை ஆண்டுகொண்டிருந்த மன்னர் மகேந்திரா, ராயல் நேபால் ஆர்மி என்ற அமைப்பின் கௌரவத் தளபதியாக அவரை நியமித்து அதற்கு அடையாளமாக ஒரு வாளையும் அளிக்க முன்வந்தார். இதற்கு ஒத்துக் கொண்டார் மானெக் ஷா. இதுதான் இரண்டு அண்டை நாடுகள் தங்கள் மாற்றுத் தளபதிகளை கௌரவ ராணுவத் தலைவராக ஏற்றுக் கொள்வதற்குத் தொடக்கமாக அமைந்தது.

பெருந்தன்மை பெரும் பலனளிக்கும்

பாகிஸ்தானிய ராணுவம் சரணடைந்தது. இதற்காக டாக்காவுக்குச் சென்று அந்தச் சரணடைதல் நிகழ்வை ஏற்குமாறு மானெக் ஷாவைப் பணித்தது இந்திய அரசு. அவர் அதை மறுத்தார். மாறாகக் கிழக்குப் பகுதியின் ராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜெகஜீத் சிங்தான் இதை ஏற்கத் தகுதியானவர் என்று கூறினார். இதுபோன்ற பெருந்தன்மை அவருக்குப் பெரும் மரியாதையை ஈட்டித் தந்தது.

மானெக் ஷா

நியாயமான துணிச்சல் தவறே அல்ல

அந்தக் காலத்தில் பிரதம மந்திரி இந்திரா காந்தி சர்வ வல்லமை படைத்தவராக விளங்கினார். தனது ஆணைகள் அப்படியே மற்றவர்களால் பின்பற்றப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அவரிடம் கொட்டிக் கிடந்தது. ஒரு காலகட்டத்தில் கிழக்கு பாகிஸ்தான் மீது உடனடியாக ராணுவ நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று அவர் கூற மானெக் ஷா நேரடியாக அவர் கண்களை பார்த்து முடியாது என்று மறுத்தாராம். அதற்கான சமயம் இது அல்ல என்று அவர் பளிச்சென்று கூறியதுடன் தான் கூறியதை பிரதமர் ஏற்கவில்லை என்றால் வேறு ஒருவரை தன் இடத்திற்கு நியமித்துக் கொள்ளலாம் என்றும் கூறினார்.


மேலும் படிக்க "பெருந்தன்மை பெரும் பலனளிக்கும்!"- ஃபீல்ட் மார்ஷல் மானெக் ஷா வாழ்க்கை சொல்லும் 5 பாடங்கள்
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top