`பாலைநிலத்தில் துளிர்க்கும் பச்சையம்' - அழிவிலிருந்து நாடகக் கலைஞர்களை மீட்க ஒரு விழா!

0
தமிழ் நிலத்தில் நாடகங்களுக்கென்று தனி வரலாறு உண்டு. தொல்காப்பிய காலத்தில் தொடங்கிய பாரம்பரியம் இன்றைக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக தொக்கி நிற்பதைக் காணும் போது, அழிந்து வரும் கலையின் எச்சம் குறித்த துயரத்தை நம்மால் காண முடிகிறது.

பாலை நிலத்தில் அரிதாக முளைக்கும் தாவரம் போல எங்காவது நாடகத்துக்கென்று ஒன்றிரண்டு விழாக்கள் நடைபெறுகின்றன. அப்படி ஒரு அரிதான நிகழ்வை திணைநிலவாசிகள் அமைப்பு ‘காட்லா கலைத்திருவிழா’ என்கிற பெயரில் தென்காசி மாவட்டம் திருவேங்கடத்தில் ஒருங்கிணைத்து இருக்கிறார்கள். மார்ச் 27 அன்று முழு நாள் நிகழ்வாக நடந்த இந்தக் கொண்டாட்டத்தில் 500க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

கலைஞர்கள் உடன் திணைநிலைவாசிகள் குழு

இந்த விழாவின் ஒருங்கிணைப்பாளர் பஹுவிடம் பேசினோம். ஏன் இந்த திருவிழாவுக்கு ‘காட்லா’ எனப் பெயரிடப்பட்டது என்பதில் இருந்து தொடங்கினார், “காட்லா என்பது தெற்கு ஐஸ்லாந்தில் இருக்கும் ஒரு எரிமலையின் பெயர். குளிர் பிரதேசத்தில் அமைந்திருக்கும் ஒரே எரிமலை இதுதான். இந்த எரிமலை கடைசியாக வெடித்து 105 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இது ஒருவேளை வெடித்தால் உலகமே அழிவதற்கான வாய்ப்பு இருப்பதாக அறிவியலாளர்கள் எச்சரிக்கிறார்கள். அது போல நம்முடைய பாரம்பரிய நாட்டார் கலைகள் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டால் இந்தச் சமூகத்தில் மாற்றங்கள் நேரும் என்பதை குறிக்கும் விதமாக இந்தப் பெயரில் விழா நடத்துகிறோம்.”

தொடர்ந்து நான்காவது வருடமாக இந்த விழாவை நடத்திக் கொண்டிருக்கும் திணைநிலைவாசிகள் அமைப்பு, இந்த ஆண்டு திருவேங்கடம் என்கிற ஊரைத் தேர்ந்தெடுத்ததற்குப் பின்னாலும் ஒரு காரணம் உண்டு. “பாவலர் ஓம் முத்துமாரி இடைநிலை சமூகத்தில் இருந்து கலைத்துறைக்கு இடம்பெயர்ந்தவர். நாட்டார் கலைகளான பேயாட்டம், கிழவியாட்டம், கோமாளியாட்டம் என ஊர் ஊராகச் சென்று சமூக பிரச்னைகள் குறித்த பாடல்களை இயற்றி மக்களிடம் சாதிய ஏற்றத்தாழ்வு குறித்து விழிப்புணர்வு செய்து வந்தவர். வரகணி கூத்து என்று புதுவித கலையை உருவாக்கிய மேதை அவர். 40 ஆண்டுகளுக்கும் மேலாக கலைக்காகவும் மக்களுக்காவும் தன்னுடைய வாழ்வை அர்ப்பணித்த முத்துமாரி ஐயா 2013-ல் மறைந்துவிட்டார். அவரின் நினைவாகவே இந்த முறை விழாவை அவரது ஊரில் நடத்தத் திட்டமிட்டோம்.”

சிலம்பாட்டம்

விழாவில் என்ன நடந்தது?

“மார்ச் 27 உலக நாடக தினம். அன்றைக்கு மக்கள் மத்தியில் பணியாற்றி வரும் கலைஞர்களை மேடையேற்றி அவர்களுக்கு உரிய கௌரவமும் சிறிய பணத்தொகையும் ஒவ்வொரு ஆண்டும் கொடுத்து வருகிறோம். 2019-ம் ஆண்டு ‘முதல் காட்லா கலைத்திருவிழா’ சென்னையில் நடந்த போது ஓம் முத்துமாரி அய்யா உடன் பணியாற்றிய சக கலைஞர் சந்தானத்தை அழைத்து வந்து அவருக்குப் பத்தாயிரம் ரூபாய் வழங்கி கௌரவித்தோம். இந்த ஆண்டு 5 மூத்த கலைஞர்களுக்கு தலா 5000 ரூபாய் வழங்கி அழகு பார்த்திருக்கிறோம்” என்கிறார் பஹு.

நாடகச் சங்கமம்

500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் ஓரிடத்தில் கூடும் போது அந்த இடம் எப்படி இருக்கும். அப்படி காட்லா கலைவிழா நடந்து முடிந்திருக்கிறது. ஒரு நாள் முழுக்கத் தொடர்ச்சியான நிகழ்ச்சிகளால் மக்களை மகிழ்வித்திக்கிறார்கள் கலைஞர்கள்.
ஒருங்கிணைப்பாளர் பஹு

நய்யாண்டி மேளம், கரகாட்டம், சிலம்பாட்டம், கிழவியாட்டம், இன்னிசை கச்சரி, நவீன நாடகங்கள் என 12 மணிநேர நிகழ்வில் கலந்து கொண்ட கலைஞர்களுக்கு போக்குவரத்து செலவு முதல் விழாவில் பங்கேற்றதற்கான சம்பளம் வரை மக்களை மகிழ்விப்பவர்களை மகிழ்வித்து அனுப்பி வைத்திருக்கின்றனர் குழுவினர். “நாடக சங்கமம் என்றே இந்த விழாவைச் சொல்லலாம்” எனத் தொடர்கிறார் பஹு, “இது போன்ற அழிவின் விளிம்பில் இருக்கும் கலையைப் பற்றிக்கொண்டிருக்கும் மூத்த கலைஞர்களையும் நாடகத்துறையில் பயின்று வரும் மாணவர்களையும் ஒருங்கிணைத்து பரஸ்பரம் இருவரும் கற்றுக்கொள்ளும் வெளியை உருவாக்குவதே இந்த விழாவின் நோக்கம். ஓரளவு அதில் வெற்றியும் பெற்றிருக்கிறோம்.”

கலைஞர்களைக் கௌரவித்தல்

இந்த விழாவில் தொடங்கப்பட்ட பாவலர் முத்துமாரி அறக்கட்டளை உதிரிகளாகப் பரந்துச் செயல்படும் நாடகக் கலைஞர்களுக்கு அரசின் உதவி உள்ளிட்ட தகவல்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் விளிம்பு நிலை நாடகக் கலைஞர்களின் குடும்பத்துக்குத் தேவையான மருத்துவ உதவி, கல்வி உதவி உள்ளிட்டவற்றுக்காக ஒருங்கிணைந்து செயல்படும் நோக்கிலும் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த அறக்கட்டளையை விழா நாள் அன்று எழுத்தாளர் கோணங்கி தொடங்கி வைத்தார்.

2500-க்கும் மேற்பட்ட ஊர் பொதுமக்கள் கண்டுகளிக்க கோலாகலமாகக் கொண்டாடி முடிக்கப்பட்டது ‘காட்லா கலைக்குழு விழா’. இந்த விழாவின் செலவு முதற்கொண்டு எல்லாமும் தன்னார்வலர்களாக இணைந்து நடத்தியதுதான். பாரம்பரியக் கலைகள் இன்னும் உயிர்ப்புடன் இருக்க இது போலான சிறு சிறு விழாக்கள்தான் காரணம். நம்பிக்கை, பச்சையம் போல துளிர்விடுவதைக் காண முடிகிறது.


மேலும் படிக்க `பாலைநிலத்தில் துளிர்க்கும் பச்சையம்' - அழிவிலிருந்து நாடகக் கலைஞர்களை மீட்க ஒரு விழா!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top