கே.எஸ்.அழகிரியை கண்டித்த மாநில நிர்வாகி பதவி பறிப்பு... குமரி காங்கிரஸில் நடப்பது என்ன?

0

கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருப்பவர் டாக்டர் பினுலால் சிங். இவரின் தலைமையில் மார்த்தாண்டத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த், எம்.எல்.ஏ ராஜேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் கடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கட்சிக்கு எதிராக போட்டி வேட்பாளராக களமிறங்கி வெற்றி பெற்றதுடன், காங்கிரஸ் தலைவர் வேட்பாளர்களுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி 7 கவுன்சிலர்கள் உள்பட 10 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

ஆனால், வட்டார, நகர தலைவர்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை கட்சியில் இருந்து நீக்க மாவட்ட தலைவருக்கு அதிகாரம் இல்லை. மாநில தலைமை மற்றும் ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு தெரியப்படுத்தி அவர்கள் மூலமாகத்தான் நீக்க வேண்டும். எனவே கட்சியில் இருந்து நீக்கப்பட்டது செல்லாது என கே.எஸ். அழகிரி அறிக்கை விட்டிருந்தார்.

பதவி பறிக்கப்பட்ட ஆர்.எஸ்.ராஜன்

இது கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸார் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கோபமான காங்கிரஸ் மாநில விவசாய அணி பொதுச்செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் என்பவர், மாநில தலைவர் கே.எஸ்.அழகிரியை எதிர்த்து பேட்டி கொடுத்திருந்தார். ``கட்சியை எதிர்த்து வேலை செய்பவர்களை நீக்காமல் இருந்தால் கட்சி எப்படி வளரும். தலைவர் பதவிக்கே தகுதியற்றவர் அழகிரி" என சாடியிருந்தார் ஆர்.எஸ்.ராஜன். இதையடுத்து கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்.எஸ்.ராஜனை கட்சி பொறுப்பில் இருந்து விடுவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் காங்கிரஸ் மாநில விவசாய அணி தலைவர் பவன்குமார்.

இதனால் ஆத்திரம் அடைந்த ஆர்.எஸ்.ராஜன், "காமராஜர் கட்டிய சத்தியமூர்த்தி பவனை புரோக்கர்களின் கூடாரமாக மாற்றிவிட்டார் அழகிரி. தேர்தலுக்காக சீட்டுக்களை பேரம்பேசி விற்கிறார். பதவி வேண்டும் என்றால் அங்குள்ள சில புரோக்கர்களை அணுகவேண்டிய நிலை உள்ளது. அழகிரியை மாநில தலைவர் பதவியில் இருந்து அகற்றும் வரை ஓயமாட்டேன்" என சபதம் போட்டிருக்கிறார். பத்துபேரை கட்சியில் இருந்து நீக்கியதால் கோபமாக கேள்வி கேட்ட ஆர்.எஸ்.ராஜன் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

குமரி மேற்குமாவட்ட காங்கிரஸ் தலைவர் டாக்டர் பினுலால் சிங்

மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த 10 நிர்வாகிகளை நீக்கியது செல்லாது என மாநில தலைவர் கே.எஸ் அழகிரி கூறியதை அடுத்து மேற்குமாவட்ட தலைவர் டாக்டர் பினுலால் சிங் தலைமைக்கு நேரில் சென்று விளக்கம் கொடுத்திருக்கிறாராம். இதுபற்றி கட்சி வட்டாரத்தில் விசாரித்தோம், "கட்சி தலைமை அறிவித்த பேரூராட்சி தலைவர் வேட்பாளர்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேற்குமாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் குரல் எழுந்தது. அப்போது அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினரும், மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினருமான தம்பி விஜயகுமார், நிர்வாகிகளை நாமே சஸ்பெண்ட் செய்துவிட்டு தலைமக்கு கடிதம் கொடுக்கலாம் என ஆலோசனைக் கூறினர்.

அதை அடுத்தே 7 கவுன்சிலர்கள் உள்பட 10 பேர் நீக்கப்பட்டனர். பின்னர் கட்சி தலைமை நீக்கியது செல்லாது என்பதால் மாவட்ட தலைவர் சென்னை சென்று நடந்த சம்பவங்களை விளக்கி கூறிவிட்டார். அடுத்த மாதம் 10-ம் தேதி நடக்கும் ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டத்தில் 10 பேரும் நீக்கப்பட உள்ளனர்" என்றனர் சில நிர்வாகிகள்.

இதுபற்றி மேற்கு மவட்ட தலைவர் டாக்டர் பினுலால் சிங்கிடம் பேசினோம், "கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் நடந்த நிகழ்வு குறித்து மாநில தலைமைக்கு விளக்கம் கொடுத்துவிட்டேன். அதற்காக ஆர்.எஸ்.ராஜன் மாநில தலைவரை தவறாக பேசியதை ஏற்றுக்கொள்ள முடியது. அது கண்டிக்கத்தக்கது" என்றார்.


மேலும் படிக்க கே.எஸ்.அழகிரியை கண்டித்த மாநில நிர்வாகி பதவி பறிப்பு... குமரி காங்கிரஸில் நடப்பது என்ன?
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top