பணிநீக்கம் செய்யப்பட்ட அம்மா மினி கிளினிக் மருத்துவர்கள் - அரசு தரப்பு பதில் என்ன?

0

மருத்துவர்கள் போராட்டம்:

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் அம்மா மினி கிளினிக் தொடங்கப்பட்டது. இந்த கிளினிக்களுக்கு 1,820 மருத்துவர்களும், 1,420 பன்நோக்கு மருத்துவப் பணியாளர்களும் ஓராண்டுக் கால ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணியமர்த்தப்பட்டார்கள். அம்மா மினி கிளினிக் தொடங்கப்பட்ட சில மாதங்களிலேயே கொரோனா பேரிடர் தொடங்கியது. எனவே அந்த மருத்துவப் பணியாளர்கள் அனைவரும் கொரோனா சிகிச்சையில் ஈடுபடுத்தப்பட்டனர். தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததற்குப் பின்பு பல்வேறு காரணங்களினால் இந்த அம்மா மினி கிளினிக் மூடப்படும் முடிவு எடுக்கப்பட்டது.

அம்மா மினி கிளினிக் மருத்துவர்கள் போராட்டம்

அந்த கிளினிக்கில் பணியாற்றும் மருத்துவ பணியாளர்களை பணிநீக்கம் செய்யும் முடிவு கடந்த டிசம்பர் மாதம் எடுக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அந்த முடிவு திரும்பப் பெறப்பட்டது. இந்த சூழலில் தான் கடந்த மார்ச் 31-ம் தேதியுடன் அந்த மருத்துவர்கள் அனைவருமே பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதனால் தங்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசின் இந்த செயலுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளது.

மருத்துவர்கள் பணிநீக்கம்:

இந்த விவகாரம் குறித்து மக்கள் நலவாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் பேசினோம். ``அம்மா மினி கிளினிக்கு வேலைக்குச் சேர்க்கப்பட்ட மருத்துவர்கள் அனைவருமே ஒரு வருட காலத்துக்குத் தற்காலிக பணி என்று எழுதிக் கொடுத்துத் தான் பணிக்குச் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். அதன்படிதான், அவர்கள் அனைவருமே கடந்த மார்ச் மாதத்துடன் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். அந்த மருத்துவர்கள் ஒருவருட காலத்துக்கு என்று பணிக்குச் சேர்ந்தாலும், கொரோனா பேரிடர் சமயங்களில் அவர்கள் செய்த பணியை இந்த அரசு கருத்தில் கொண்டிருக்கிறது.

மா.சுப்பிரமணியன்

வரும்காலங்களில் அந்த மருத்துவர்களுக்குத் தான் பணியில் முன்னுரிமை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர்களின் பிரதிநிதிகளையும் அழைத்துப் பேசியுள்ளோம். முன்பு வேலை பார்த்த 1,820 மருத்துவர்களில் கடைசியாக வேலைபார்த்து எத்தனை பேர் என்ற பெயர் பட்டியல் தயாராகிக்கொண்டிருக்கிறது.

மருத்துவர்கள் போராட்டம்

அவர்கள் அனைவர்க்கும் பணியாற்றியதற்கான கடிதம் வழங்கப்படும். அதன்பின் தரவரிசை பட்டியல் தயார்செய்யப்பட்டு, பணியில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்" என்று தெரிவித்தார்.


மேலும் படிக்க பணிநீக்கம் செய்யப்பட்ட அம்மா மினி கிளினிக் மருத்துவர்கள் - அரசு தரப்பு பதில் என்ன?
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top