``கலவரத்தை விரும்பினால் பாஜக-வுக்கு வாக்களியுங்கள்"- கர்நாடகாவில் அரவிந்த் கெஜ்ரிவால்

0

டெல்லி, பஞ்சாபில் ஆட்சி அமைத்தது போல் அடுத்த ஆண்டு கர்நாடகாவில் நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலிலும் ஆம் ஆத்மி கட்சி போட்டியிட்டு ஆட்சி அமைக்க திட்டம் வகுத்துள்ளது. இந்த நிலையில், கர்நாடகாவில் பல்வேறு விவசாயிகள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட விவசாயிகள் பேரணியில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால்  கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், "கர்நாடக ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கே.எஸ் ஈஸ்வரப்பா 40 சதவிகித கமிஷன் வசூலித்ததாக ஒரு சிவில் ஒப்பந்ததாரர் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார்.

கே.எஸ் ஈஸ்வரப்பா

கடந்த கால காங்கிரஸ் அரசு 20 சதவிகித கமிஷன் அரசு. தற்போது இருக்கக்கூடிய பா.ஜ.க 40 சதவிகித கமிஷன் அரசு. டெல்லியில் நேர்மையான அரசு இருப்பதால் டெல்லியில் பூஜ்யம் சதவிகித கமிஷன் அரசு ஆட்சி நடைபெறுகிறது. ஒரு பைசா கூட லஞ்சமாக வாங்கப்படவில்லை. அதனால் தான் நேர்மையான அரசு என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் சான்றிதழைப் பெற்றிருக்கிறோம். மேலும், துணை முதல்வரான மணிஷ் சிசோடியா மற்றும் 17 எம்.எல்.ஏ-க்கள் மீது சி.பி.ஐ, வருமான வரி, டெல்லி காவல்துறை சோதனை நடத்தியது. ஆனால், அவர்களால் அந்த எம்.எல்.ஏ-க்களிடம் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. 

அரவிந்த் கெஜ்ரிவால்

நாடு முழுவதும் உள்ள அனைத்து ரெளடிகள், முரடர்கள் நேர்மையற்றவர்கள் ஊழல்வாதிகள் அனைவரும் ஒரு அரசியல் கட்சிக்குச் செல்கிறார்கள் என்றால் அது ஒரே கட்சிதான். ஒரு அமைச்சரின் மகன் விவசாயிகள் மீது ஜீப்பை ஏற்றி கொலை செய்கிறார். ஆனால், அவரின் தந்தைக்கு மந்திரி பதவி கிடைக்கிறது. பாலியல் வன்கொடுமை  செய்தவருக்கு உற்சாக வரவேற்பு கிடைக்கிறது. நாடு முழுவதும் கலவரங்கள் நடந்து வருகின்றனர். இந்த கலவரங்களைச் செய்வது யார்? எந்த கட்சி கலவரம் செய்கிறது? நாட்டு மக்கள் கலவரத்தையா விரும்புகிறார்கள்? அவர்கள் அமைதியாக வாழ விரும்புகிறார்கள். 

 மக்கள் கலவரத்தை விரும்பினால் அவர்கள் பா.ஜ.க-வுக்கு வாக்களிkkattum ஆனால் அவர்களுக்குப் பள்ளிகள், மருத்துவமனைகள், இலவச மின்சாரம், இலவச போக்குவரத்து, இலவச தண்ணீர் போன்ற அத்தியாவசிய தேவைகள் நிறைவேற்ற வேண்டுமென்றால், அவர்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிக்க வேண்டும். மென்மையான மக்கள், தேசபக்தர்கள், நேர்மையானவர்களின் கட்சி ஆம் ஆத்மி கட்சி என்பதால் ஆம் ஆத்மிக்கு ரெளடித்தனம் பற்றி எதுவும் தெரியாது. 

அரவிந்த் கெஜ்ரிவால்

சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன பிறகும் விவசாயிகளின் நிலைமை இன்னும் முன்னேற்றம் ஏற்படவில்லை. 45 சதவிகித மக்கள் விவசாயத்தை நம்பி இருந்தாலும், விவசாயிகளின் குழந்தைகள் அரசியலில் சேர விரும்பவில்லை. மூன்று விவசாய சட்டங்களை ரத்து செய்ய 13 மாதங்களாக  மத்திய அரசை வலியுறுத்தி விவசாயிகளின் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது பாராட்டத்தக்கது" எனப் பேசினார்.


மேலும் படிக்க ``கலவரத்தை விரும்பினால் பாஜக-வுக்கு வாக்களியுங்கள்"- கர்நாடகாவில் அரவிந்த் கெஜ்ரிவால்
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top