``ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் பதவி" - கோரிக்கையை நிராகரித்த சரத் பவார்

0

தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு குறைந்து வருவதால், அந்த இடத்தை பிடிக்க திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, ஆம் ஆத்மி கட்சியின் அர்விந்த் கெஜ்ரிவால் ஆகியோர் போட்டி போடுகின்றனர். இது தவிர தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவும் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். 2024-ம் ஆண்டு நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தலில் பாஜக-வை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் ஒன்று சேரவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மம்தா பானர்ஜி ஒரு புறமும், சந்திரசேகர் ராவ் ஒரு புறமும் எதிர்க்கட்சித்தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார்கள். இதில் காங்கிரஸ் உட்பட அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒருவரை ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவராக நியமிக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இக்கோரிக்கைக்கு சிவசேனாவும் ஆதரவு தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே இதில் சரத்பவார் அப்பதவிக்கு வரவேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார். அதோடு மம்தா பானர்ஜியும் சரத்பவாரை சந்தித்து பேசிய போது மூத்த தலைவர் என்ற முறையில் பாஜகவுக்கு எதிராக உருவாக்கப்படும் அணிக்கு தலைமை தாங்கவேண்டும் என்று சரத்பவாரிடம் கேட்டுக்கொண்டார்.

மம்தா பானர்ஜி

தற்போது ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு சோனியா காந்தி தலைவராக இருக்கிறார். ஆனால் காங்கிரஸ் கட்சியால் எதிர்க்கட்சி அணிக்கு தலைமை தாங்க முடியுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

சரத்பவாருக்கு ஆதரவாக தீர்மானம்

சமீபத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி கூட்டத்தில் சரத்பவார் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு தலைமை தாங்கவேண்டும் என்று கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது குறித்து சரத்பவாரிடம் கேட்டதற்கு, தனக்கு அப்பதவியை ஏற்கும் திட்டம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், ``எங்களது கட்சியின் இளைஞரணியினர் என்னை ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் பதவியேற்கும் படி கூறி தீர்மானம் நிறைவேற்றினர். ஆனால் எனக்கு அதில் ஆர்வம் இல்லை. அப்பதவிக்கு வர விரும்பவில்லை. பொறுப்புக்களை ஏற்க விரும்பவில்லை. பாஜகவிற்கு எதிராக மாற்று அணியை உருவாக்க முயன்றால் அதற்கு ஒத்துழைப்பு கொடுக்க, ஆதரவு கொடுக்கவும், வலு சேர்க்கவும் தயாராக இருக்கிறேன். அரசியல் கட்சிகளுக்கு ஒவ்வொரு மாநிலத்திலும் அதிகார மையங்கள் இருக்கலாம். எதிர்க்கட்சி கூட்டணி உருவாக்கப்பட்டால் அது காங்கிரஸ் இல்லாமல் உருவாக்க முடியாது.

காங்கிரஸுக்கு பவார் ஆதரவு

காங்கிரஸ் கட்சிக்கு ஒவ்வொரு கிராமம், மாவட்டம் மற்றும் மாநிலத்தில் தொண்டர்கள் இருக்கின்றனர். எனவே பாஜகவிற்கு எதிரான அணியை உருவாக்கும் போது காங்கிரஸ் கட்சியையும் சேர்த்துக்கொள்ளவேண்டும். காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இல்லாவிட்டாலும், நாடு முழுவதும் அதற்கு செல்வாக்கு இருக்கிறது. அதனை கவனத்தில் கொண்டு அரசியல் கட்சிகள் செயல்படவேண்டும். அப்படி செயல்பட்டால் மாற்று அணியை உருவாக்குவதில் சிக்கல் இருக்காது.

சரத் பவார் - உத்தவ் தாக்கரே

எதிர்க்கட்சிகள் ஒன்றிணையவேண்டுமானால் உண்மை நிலையை புறக்கணிக்க முடியாது. நாட்டில் ஒரே ஒரு கட்சி வலுவானதாக இருந்தால் புதின் போன்ற நிலைதான் ஏற்படும். புதின் மற்றும் சீனா அதிபர்கள் சாகும் வரை தங்களது நாட்டிற்கு தலைமை தாங்குவார்கள். அது போன்ற ஒருவர் இந்தியாவுக்கு வரமாட்டார் என நம்புகிறேன்" என்று தெரிவித்தார். ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் பதவியை சரத்பவார் ஏற்க மறுத்திருப்பது குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இளைஞரணித்தலைவர் ரவிகாந்த் கூறுகையில், ``எங்கள் தலைவர் முடியாது என்று சொன்னாலும், உங்கள் ஒருவரால் மட்டுமே அனைவரையும் ஒரே அணியில் கொண்டு வர முடியும் என்று கூறி அப்பதவியை ஏற்றுக்கொள்ள வலியுறுத்துவோம்" என்று தெரிவித்தார்.


மேலும் படிக்க ``ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் பதவி" - கோரிக்கையை நிராகரித்த சரத் பவார்
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top