கொரோனா மரணங்கள்; குற்றம்சாட்டும் உலக சுகாதார நிறுவனம் - திட்டவட்டமாக மறுக்கும் மத்திய அரசு!

0

கொரோனா பேரிடர்:

கொரோனா வைரஸ் பரவல் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. கொரோனா பேரிடரில் அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் இருக்கின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை முதல் அலை சமயத்தில் தொற்று பாதிப்பு இருந்தாலும் பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. ஆனால். கொரோனா இரண்டாம் அலையின்போது, யாருமே எதிர்பார்த்திடாத வகையில் பாதிப்புகள் அதிகமாக இருந்தது.

கொரோனா பெருந்தொற்று

தொற்றில் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் இடம் கிடைக்காது, ஆக்ஸிஜன் கிடைக்காது மருத்துவமனைகளின் வாசல்களில் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டது. அவ்வளவு ஏன் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை எரிப்பதற்குக் கூட நீண்ட வரிசையில் காத்திருக்கும் கொடூரத்தை எல்லாம் நாம் கண்முன்னே கண்டோம். அதிகரித்துக் காணப்பட்ட தொற்று எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து... நாடு இயல்பு நிலைக்குத் திரும்பியது. இந்தியாவில் இதுவரை 5.21 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

மறைக்கப்படும் கொரோனா மரணங்கள்?

கொரோனா பேரிடர் உச்சத்திலிருந்த நேரத்தில் இந்தியாவில் கொரோனா மரணங்கள் மறைக்கப்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்தவண்ணம் இருந்தன. இது தொடர்பாக, ``குஜராத் மாநிலத்தில் 2020-ம் ஆண்டை விட 2021-ம் ஆண்டில் மார்ச் மாதம் 1-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை மட்டும் சுமார் 1,23,873 இறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த தேதிகளில் 4,128 பேர் மட்டுமே கொரோனாவால் உயிரிழந்திருப்பதாக அரசு கூறுகிறது. 2020-ம் ஆண்டுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில், இந்த நேரத்தில் வெறும் 58,023 இறப்புச் சான்றிதழ்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன" என்றும்,

கொரோனா மரணங்கள்

``கொரோனாவால் உயிரிழந்தவர்களைத் தவிர்த்து மீதமுள்ளவர்கள் இயற்கையாக மரணமடைந்தவர்கள் என்று அரசால் சமாளிக்க முடியாது. இந்த தகவல்கள் அனைத்துமே குஜராத்திலிருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில்தான் கூறுகிறோம். சமீபத்தில், கங்கை நதிக்கரைகளில் 2,000-க்கும் மேற்பட்ட சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதே இதற்குச் சான்று. மத்திய அரசும், மாநில அரசும் இந்த உண்மையை மறைக்கப் பார்ப்பதாகச் சந்தேகம் எழுகிறது. உண்மையை வெகுநாள்களுக்கு மறைக்க முடியாது" என்று ப.சிதம்பரம் புள்ளிவிவரங்களுடன் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

வலுக்கும் குற்றச்சாட்டு:

இந்த நிலையில், ``கொரோனா உயிரிழப்பு குறித்த விவரங்களைப் பகிர்வதில் இந்திய அரசு ஒத்துழைப்பு தரவில்லை. உண்மையாக எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்பது குறித்து பொதுவெளியில் வெளியிடுவதை இந்திய அரசு தடுக்கிறது" என்று உலக சுகாதார நிறுவனம் குற்றம்சாட்டுவதாக அமெரிக்காவின் பிரபல பத்திரிகை நிறுவனமான நியூயார்க் டைம்ஸ் கடந்த 16-ம் தேதி செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. இந்த செய்தி இந்தியா முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த செய்தியைப் பகிர்ந்து, ``பிரதமர் மோடி உண்மையைப் பேசுவதில்லை. மற்றவர்களைப் பேசவிடுவதுமில்லை. ஆச்ஸிஜன் பற்றாக்குறையால் யாரும் இறக்கவில்லை என்று அவர் பொய் சொல்கிறார். இதுகுறித்து நான் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். அரசின் அலட்சியத்தால் 40 லட்சம் இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்களின் அனைத்து குடும்பங்களுக்கும் 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும். உங்கள் கடமைகளை நிறைவேற்றுங்கள் மோடி ஜி" என்று பதிவிட்டிருக்கிறார்.

அரசின் பதில்:

உலக சுகாதார நிறுவனத்தின் கணக்கீட்டு முறை குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில், ``கொரோனா இறப்புகள் குறித்து வல்லரசு நாடுகள் கொடுக்கும் தரவுகளை எந்தவித மாற்றமும் இல்லாது உலக சுகாதார நிறுவனம் அப்படியே ஏற்றுக்கொள்கிறது. ஆனால், இந்தியா போன்ற சில நாடுகளிடமிருந்து கொரோனா இறப்பு எண்ணிக்கையை கணிதவியல் அடிப்படையில் தரவேண்டும் என்று கேட்கிறது. உலக சுகாதார நிறுவனம் ஒரே செயலை இரண்டு வகையில் பிரித்துப் பார்க்கிறது.

உ.பி - கொரோனா மரணங்கள்

குறைந்த மக்கள்தொகை கொண்ட சிறிய நாடுகளில் செய்யும் கணக்கீட்டு முறை, இந்தியா போன்ற பெரும் நாடுகளுக்கு எப்படிப் பொருந்தும். இது தொடர்பாக உலக சுகாதார நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்ட கடிதங்களுக்கு எந்த விளக்கமும், பதிலும் தரவில்லை. கணிதவியல் கோட்பாடு முறை இந்தியாவுக்குப் பொருந்தாது. கொரோனா மரணங்களை மறைக்க இந்திய அரசுக்கு அவசியம் எதுவும் கிடையாது. ஊடகங்களில் வெளியான செய்திகள் தவறானது. கணிதவியல் கோட்பாடு முறை இந்தியாவுக்குப் பொருந்தவே பொருந்தாது" என்று கூறப்பட்டுள்ளது.

சர்வதேச நாளிதழ்கள் தொடங்கி, இந்திய அரசியல்வாதிகள், மருத்துவ நிபுணர்கள் எனப் பலரும் இந்தியாவில் கொரோனா மரணங்கள் குறைத்துக் காட்டப்படுவதாகத் தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துக் கொண்டேதான் இருக்கிறார்கள். ஆனால், மத்திய அரசு இந்தியாவில் கொரோனா மரணங்கள் தொடர்பான தரவுகளை தாங்கள் உள்ளதை உள்ளபடியே வழங்கி வருவதாக திட்டவட்டமாக கூறி வருகிறது.


மேலும் படிக்க கொரோனா மரணங்கள்; குற்றம்சாட்டும் உலக சுகாதார நிறுவனம் - திட்டவட்டமாக மறுக்கும் மத்திய அரசு!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top