ஜம்மு காஷ்மீர்: சிஐஎஸ்எஃப் வீரர்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் தாக்குதல் - ஒருவர் பலி

0

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் கடந்த வாரம் மத்திய ரிசர்வ் போலீஸ் படை சென்ற வாகனம் விபத்துக்குள்ளானதில், தமிழகத்தைச் சேர்ந்த சி.ஆர்.பி.எஃப் வீரர் எம்.என்.மணி பரிதாபமாக உயிரிழந்திருந்தார். அது சம்பவம் விபத்தா? அல்லது பயங்கரவாதிகளின் திட்டமிடப்பட்ட சதிச் செயலா? என விசாரணையின் நடந்துவரும் நிலையில், ஜம்மு காஷ்மீரில் சத்தா முகாம் அருகே பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை(சி.ஐ.எஸ்.எஃப்) வீரர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சிஐஎஸ்எஃப் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்

சத்தா முகாம் அருகே இன்று அதிகாலையில், சி.ஐ.எஸ்.எஃப் வீரர்கள் சென்ற பேருந்து மீது திடீரென பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். எதிர்பாரா நேரத்தில் ஏற்பட்ட இந்த தாக்குதலில் , சி.ஐ.எஸ்.எஃப்-ஐ சேர்ந்த வீரர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இருவர் படுகாயமடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதேபோல், ஜம்மு காஷ்மீரின் புறநகர்ப் பகுதியில் உள்ள ராணுவ முகாம் அருகே இன்று அதிகாலை, பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் இந்திய பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் கொல்லப்பட்டார்.

இதனிடையே, இரண்டு தீவிரவாதிகள் தற்போது வரை கொல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பஞ்சாயத்து ராஜ் திவாஸ் தினத்தையொட்டி வரும் 24-ம் தேதி, பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீருக்கு வரவிருக்கும் நிலையில், இதுபோன்ற தாக்குதல் நடந்திருப்பது அப்பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க ஜம்மு காஷ்மீர்: சிஐஎஸ்எஃப் வீரர்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் தாக்குதல் - ஒருவர் பலி
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top