பாலியல் வழக்கு: போலீஸ் அதிகாரிகளை கொல்ல சதித்திட்டம்! - நடிகர் திலீப் வழக்கை விசாரிக்க தடை இல்லை

0

பிரபல நடிகையை காரில் கடத்தி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வழக்கு தற்போது வேகமெடுத்துள்ளது. அந்த வழக்கில் தன்னை கைது செய்த அதிகாரிகளை கொலைச் செய்ய நடிகர் திலீப் சதித்திட்டம் தீட்டியதாக கடந்த சில மாதங்களுக்கு முன் சினிமா இயக்குநர் பாலசந்திரகுமார் குற்றம்சாட்டியிருந்தார். மேலும் அது தொடர்பான சில ஆதாரங்களையும் வெளியிட்டிருந்தார்.

இதையடுத்து நடிகர் திலீப் உள்பட ஆறுபேர் மீது அதிகாரிகளை கொலைச் செய்ய சதித்திட்டம் தீட்டியதாக குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சதித்திட்டம் தீட்டிய வழக்கில் நடிகர் திலீப், அவரின் தம்பி அனூப், தங்கையின் கணவர் சுராஜ், உறவினர் அப்பு, திலீப்பின் நண்பர் பைஜூ செங்ஙமனாடு, ஆலுவாயைச் சேர்ந்த ஹோட்டல் உரிமையாளர் சரத் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்களை அழிக்க உதவி செய்த சாய் சங்கர் உள்ளிட்டோரிடம் குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திலீப் உள்ளிட்டவர்களின் மொபைல் போன்களை ஆய்வு செய்ததில் இந்த வழக்கில் திலீபின் மனைவியன நடிகை காவ்யா மாதவனுக்கு தொடர்பு இருப்பதாக குற்றப்பிரிவு போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

நடிகர் திலீப் - நடிகை காவ்யா மாதவன்

இந்த நிலையில், ``போலீஸார் திட்டமிட்டு எனக்கு எதிராக சதி செய்கின்றனர். எனவே என்மீது பதியப்பட்ட வழக்கை ரத்துச்செய்ய வேண்டும். இது போலீஸுக்கு எதிரான குற்றச்சாட்டு என்பதால் போலீஸ் மூலம் விசாரணை நடத்தக்கூடாது. சி.பி.ஐ போன்ற வேறு ஏஜென்சி மூலம் விசாரணை நடத்த வேண்டும்” எனவும் திலீப் கேரள உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவை விசாரித்த தனி பெஞ்ச் நீதிபதி சியாத் ரஹ்மான், ``இந்த வழக்கை ரத்துச்செய்ய வேண்டிய அவசியம் இல்லை” என்று உத்தரவு பிறப்பித்தார். மேலும், விசாரணை அதிகாரிகளை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதற்கு முக்கியமான ஆதாரங்கள் இருப்பதாகவும், வழக்கை சி.பி.ஐ போன்ற ஏஜென்சிகளுக்கு மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிறகு சட்ட நடவடிக்கை மேற்கொள்ள தடை இல்லை என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

காவ்யா மாதவன்

இது ஒருபுறம் இருக்க, நடிகை பாலியல் வழக்கை ஏப்ரல் 15-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. காவ்யா மாதவன் போன்றவர்களை விசாரிக்க பேண்டியது இருப்பதால் கூடுதல் கால அவகாசம் வேண்டும் என குற்றப்பிரிவு போலீஸ் தரப்பில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து மே மாதம் 30-ம் தேதிக்குள் விசாரணையை நடத்தி முடிக்க வேண்டும் என ஒன்றரை மாதம் கால அவகாசம் வழங்கியுள்ளது உயர் நீதிமன்றம். தனக்கு எதிரான வழக்கு தீவிரம் அடைந்துள்ளதால் கலக்கத்தில் உள்ளார் நடிகர் திலீப்.


மேலும் படிக்க பாலியல் வழக்கு: போலீஸ் அதிகாரிகளை கொல்ல சதித்திட்டம்! - நடிகர் திலீப் வழக்கை விசாரிக்க தடை இல்லை
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top