Parkinson's disease: அதிநவீன சிகிச்சை மையத்தை திறந்த Gleneagles Global Health City

0

பார்கின்சன் நோய்க்கான பிரத்தியேக க்ளினிக் மையம் ஒன்றை தொடங்கியுள்ளது சென்னையில் உள்ள ஒரு முன்னணி மல்டி-ஸ்பெஷாலிட்டி மையமான க்ளெனீகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி (GGHC). மூளையின் ஆழ்ந்த பகுதியில் தூண்டுதல் (DBS) அறுவை சிகிச்சைக்கான அதிநவீன வசதிகளுடன் கூடிய பார்கின்சன் நோய்க்கான விரிவான பராமரிப்பை வழங்குகிறது இந்த சிகிச்சை மையம்.

இங்கு பொருத்தப்பட்டுள்ள மெட்ரோனிக் ஸ்டீல்த் - 8 நியூரோநாவிகேஷன் கருவிகள் மூளையின் மையக்கருவை அபாரமாக இலக்கு வைப்பதற்கும், DBS எலக்ட்ரோட்களை துல்லியமாக வைப்பதற்கும், நோயாளிக்கான பாதுகாப்பை உறுதி செய்கிறது.

உலகளவில் சுமார் 10 மில்லியன் மக்கள் பார்கின்சன் நோயுடன் வாழும் நிலையில் சமீப காலங்களில் DBS அறுவை சிகிச்சையின் மூலம் 1,60,000 க்கும் அதிகமான நோயாளிகள் பயனடைந்துள்ளனர். இந்த எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து கொண்டே வருகிறது.

Parkinson's disease

பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 50 வயதிற்கு முன்பே 4% பேருக்கு நோய் கண்டறியப்பட்டுள்ளது. இந்நோயாளிகளுக்கான விரைவான சிகிச்சையை தடையற்ற முறையில் வழங்குவதே புதிதாக தொடங்கப்பட்டுள்ள இச்சிகிச்சை மையத்தின் முதன்மை நோக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளில் CPDC ஆனது 50க்கும் மேற்பட்ட தீவிர பார்கின்சன் நோயாளிகளை சிகிச்சை அளித்தது மட்டுமல்லாது கொரோனா பெருந்தொற்று இருந்த இந்த 2 ஆண்டுகளில் 10 நோயாளிகளுக்கு DBS அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து க்ளெனீகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி - சென்னையின் நரம்பியல் மற்றும் வலிப்பு நோய்க்கான மேம்பட்ட மையத்தின் இயக்குனரான டாக்டர் தினேஷ் நாயக் பேசுகையில் “ நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசும்போது “பார்கின்சன் நோயாளிகளுக்கு தேவைப்படும் விரிவான கவனிப்பு இங்கு இல்லாமலேயே இருந்தது, CPDC சென்னை இந்த இடைவெளியைக் குறைக்க உதவும் ” என்று கூறினார்.

Parkinson's disease

அம்மையத்தின் நரம்பியல் அறுவை சிகிச்சை மூத்த ஆலோசகரான டாக்டர் நைஜல் பீட்டர் சிம்ஸ், "பெரும்பாலான பார்கின்சன் நோய் பிரச்சனைகளுக்கு அறுவை சிகிச்சை தேவையில்லை, ஆனால் மற்ற சிகிச்சைகள் பலனளிக்காத நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது. மேம்பட்ட தொழில்நுட்பம், பல வருட அனுபவம் ஆகியவை DBS அறுவை சிகிச்சைகளை இன்று மிகவும் பாதுகாப்பானதாக ஆக்கியுள்ளன” என்று கூறினார்.

நரம்பியல் நிபுணர் டாக்டர் வெங்கட்ராமன் கார்த்திகேயன் பேசுகையில் "பார்கின்சன் நோய் ஒரு நரம்பியல் சிதைவு நிலை, இது மூளை செல்களில் டோபமைன் பற்றாக்குறையை ஏற்படுத்துகிறது. நோய் முற்றும் நிலையில் மருந்துகளின் செயல்திறன் குறைகிறது. மூளையின் ஆழ்ந்த பகுதியில் மேற்கொள்ளப்படும் தூண்டுதல் அறுவை சிகிச்சையானது டிஸ்கினீசியா போன்ற மருந்துகள் தொடர்பான பக்க விளைவுகளைக் குறைப்பதற்கும் பெரிய அளவில் உதவும்” என்று கூறினார்.

க்ளெனேகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி, சென்னையின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) டாக்டர். அலோக் குல்லர் கூறுகையில் “பார்கின்சன் நோய்க்கான அதிநவீன தொழில்நுட்பங்கள், அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் ஆகியவை கொண்ட இந்த மேம்பட்ட மையத்தின் துவக்கம், பார்கின்சன் நோய் தொடர்பான பிரச்சினைகளுக்கு சிறந்த சிகிச்சைக்கு வழி வகுக்கிறது. இது பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஒரு வரம்”


மேலும் படிக்க Parkinson's disease: அதிநவீன சிகிச்சை மையத்தை திறந்த Gleneagles Global Health City
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top