காங்கிரஸிலிருந்து விலகிய கபில் சிபல்... சமாஜ்வாடி ஆதரவைப் பெற்றது எப்படி... இனி `ஜி-23' என்னவாகும்?!

0

கட்சியை மறுசீரமைப்பு செய்வதற்காக ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் மூன்று நாள்கள் (மே 13-15) `சிந்தனை அமர்வு' என்ற பெயரில் மாநாடு ஒன்றை நடத்தியது காங்கிரஸ் தலைமை. அந்த மாநாடு முடிந்து சில தினங்களே ஆன நிலையில், இரண்டு முக்கியத் தலைவர்களை இழந்திருக்கிறது அந்தக் கட்சி. கடந்த வாரம் குஜராத் மாநிலக் காங்கிரஸின் இளம் தலைவரான ஹர்திக் படேல் கட்சியிலிருந்து விலகினார். மே 25 அன்று காங்கிரஸின் மூத்த தலைவர்களுள் ஒருவரான கபில் சிபல் கட்சியிலிருந்து விலகிவிட்டதாக அறிவித்தார். ஜி-23 குழுவில் முக்கியத் தலைவராகச் செயல்பட்டுவந்த இவர் காங்கிரஸிலிருந்து விலகியிருப்பது தேசிய அரசியலில் விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

மாநிலங்களவை எம்.பி தேர்தலில் கபில் சிபல்?

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய கபில் சிபல், எதிர்வரும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் சமாஜ்வாடி கட்சியின் ஆதரவில் சுயேச்சையாகப் போட்டியிடுகிறார். மே 25 அன்று, உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில், சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் முன்னிலையில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார் கபில் சிபல். சுயேச்சையாகப் போட்டியிடும் இவருக்கு முழு ஆதரவு தருவதாக அறிவித்திருக்கிறது சமாஜ்வாடி கட்சி. காங்கிரஸிலிருந்து விலகியது குறித்துப் பேசிய சிபல், ``நான் மே 16-ம் தேதியே காங்கிரஸிலிருந்து விலகிவிட்டேன். இனிமேல் நாடாளுமன்றத்தில் ஒரு சுதந்திரமான குரலாக ஒலிப்பேன். இனி எந்தக் கட்சியின் வாலாகவும் நான் இருக்கமாட்டேன். 2024 பொதுத் தேர்தலில், பா.ஜ.க-வுக்கு எதிராகக் காங்கிரஸ் உள்பட அனைத்துக் கட்சிகளையும் ஓரணியில் திரட்ட முதல் ஆளாக வந்து நிற்பேன்!'' என்று கூறியிருக்கிறார்.

கபில் சிபல், அகிலேஷ் யாதவ்

சமாஜ்வாடி ஆதரவு கிட்டியது எப்படி?

2017-ல் அகிலேஷ் யாதவுக்கும் அவரின் தந்தை முலாயம் சிங் யாதவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகக் கட்சி இரண்டானது. அந்தச் சமயத்தில், கட்சியின் சின்னம் யாருக்குச் சொந்தம் என்று தேர்தல் ஆணையத்தில் நடந்த விசாரணையில் அகிலேஷுக்கு ஆதரவாக வாதாடினார் மூத்த வழக்கறிஞரான கபில் சிபல். அதே போல, சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவரான அசாம் கான் சம்பந்தப்பட்ட வழக்கில், அவருக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில் வாதாடியதும் கபில் சிபல்தான். கடந்த காலங்களில் கபில் சிபல், பல சமயங்களில் அகிலேஷுக்கு துணை நின்றதால்தான், அவருக்கு சமாஜ்வாடி கட்சி ஆதரவு தந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

ஜி-23 குழு என்றால் என்ன... அந்தக் குழு இனி என்னவாகும்?

2020 ஆகஸ்ட் மாதத்தில், கட்சி செயல்பாடுகள்மீது அதிருப்தியிலிருக்கும் 23 காங்கிரஸ் தலைவர்கள் ஒன்றிணைந்து கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்திக்குக் கடிதம் எழுதினர். அந்தக் கடிதத்தில் கட்சியைச் சீரமைக்க பல்வேறு பரிந்துரைகள் சொல்லப்பட்டிருந்தன. கடிதம் எழுதிய 23 தலைவர்கள் அடங்கிய குழுதான் `ஜி-23' என்றழைக்கப்பட்டது. இந்தக் குழுவில் கபில் சிபல், குலாம் நபி ஆசாத், புபேந்திர சிங் ஹூடா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் இடம்பெற்றிருந்தனர்.

இந்தக் குழுவிலிருந்த முக்கியத் தலைவர்களான ஜிதின் பிரசாதாவும், யோகானந்த் சாஷ்திரியும் கடந்த ஆண்டே கட்சியிலிருந்து விலகிவிட்டனர். ஜிதின் பிரசாதா பா.ஜ.க-விலும், யோகானந்த் தேசியவாத காங்கிரஸிலும் இணைந்துவிட்டனர். அதே நேரத்தில், ஜி-23 குழுவில் சசி தரூர், மணிசங்கள் ஐய்யர், முகமது அலிகான் உள்ளிட்ட சில தலைவர்கள் புதிதாகச் சேர்ந்துகொண்டனர். இந்த நிலையில்தான், ஜி-23 குழுவில் அதிரடியாகச் செயல்பட்டுவந்த கபில் சிபல் காங்கிரஸிலிருந்து விலகியிருக்கிறார். அவர் விலகிய பிறகு ஜி-23 குழு என்னவாகும் என்கிற கேள்வியும் எழுந்திருக்கிறது.

கபில் சிபல்

இது குறித்துப் பேசும் தேசிய அரசியல் பார்வையாளர்கள், ``ஜி-23 குழுவிலிருந்த தலைவர்களிலேயே கட்சித் தலைமைமீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தவர் கபில் சிபல்தான். இரண்டு மாதங்களுக்கு முன்பாகக்கூட `காந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கட்சியின் தலைமை பொறுப்பிலிருக்கக் கூடாது' என்று வெளிப்படையாக விமர்சித்திருந்தார். இந்தக் குழுவிலுள்ள மற்ற தலைவர்கள், பல்வேறு விஷயங்களிலும் மாறுபட்ட கருத்துகளுடன் இருப்பதாகத் தெரிகிறது. மேலும், ஜி-23 குழு ஆரம்பிக்கப்பட்டபோது இருந்த தலைவர்களில், கபில் சிபல் உள்பட மூன்று தலைவர்கள் கட்சியிலிருந்தே விலகிவிட்டனர். இதற்குப் பின்னரும், அந்தக் குழுவிலிருக்கும் சில தலைவர்கள் கட்சியைவிட்டு விலகினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. எனவே, ஜி-23 குழு இனி நீர்த்துப்போகும் என்றே தோன்றுகிறது'' என்கிறார்கள்.


மேலும் படிக்க காங்கிரஸிலிருந்து விலகிய கபில் சிபல்... சமாஜ்வாடி ஆதரவைப் பெற்றது எப்படி... இனி `ஜி-23' என்னவாகும்?!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top