மீண்டும் சாதித்த தேவேந்திர பட்நவிஸ்: மகாராஷ்டிரா சட்டமேலவை தேர்தலில் பாஜக 5 இடங்களில் வெற்றி!

0

மகாராஷ்டிரா சட்டமேலவையில் காலியாகும் 10 இடங்களுக்கு நேற்று தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா போன்ற கட்சிகள் தலா இரண்டு வேட்பாளர்களையும், பாஜக 5 வேட்பாளர்களையும் நிறுத்தி இருந்தன. இதில் பாஜகவால் 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடியும் என்ற சூழ்நிலையில் கூடுதலாக ஒரு வேட்பாளரை பாஜக களத்தில் இறக்கியது. பாஜக-வின் 5-வது வேட்பாளர் வெற்றி பெற கூடுதலாக 24 உறுப்பினர்களின் ஆதரவு தேவையாக இருந்தது. காங்கிரஸ் கட்சியின் இரண்டாவது வேட்பாளர் வெற்றி பெற கூடுதலாக 8 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவையாக இருந்தது. இத்தேர்தலில் சுயேச்சை மற்றும் சிறு கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் 26 பேர் யாருக்கு வாக்களிக்க போகிறார்கள் என்ற கேள்வி எழுந்தது. சிவசேனா கூட்டணியும், பாஜக-வும் சுயேச்சைகளை தக்கவைத்துக்கொள்ள போராடின.

மகாராஷ்டிரா சட்டமன்றம்

பாஜகவின் தேவேந்திர பட்நவிஸ் இதில் முன்னின்று செயல்பட்டார். தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பாக துணை முதல்வர் அஜித்பவார் தங்களது கட்சி எம்.எல்.ஏ.க்கள் விலை போய்விடக்கூடாது என்பதை தீவிரமாக கண்காணித்து வந்தார். இந்நிலையில் நேற்று தேர்தல் நடந்தது. இதில் வாக்களிப்பதற்காக புனேயில் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த இரண்டு பாஜக எம்.எல்.ஏ.க்கள் ஆம்புலன்ஸ் மூலம் மும்பைக்கு அழைத்து வரப்பட்டனர். அதோடு பகுஜன் விகாஸ் அகாடி கட்சியின் ஒரு எம்.எல்.ஏ.அமெரிக்கா சென்று இருந்தார். அவரை வாக்களிப்பதற்காக பாஜக அமெரிக்காவில் இருந்து அழைத்திருந்தது. சிறையில் இருக்கும் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனில் தேஷ்முக், நவாப் மாலிக் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டை அணுகி வாக்களிக்க அனுமதி பெற முயன்று தோல்வி அடைந்தனர். இத்தேர்தலில் 285 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர். உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த இரு எம்.எல்.ஏ.க்கள் உதவியாளர்கள் உதவியோடு வாக்களித்தனர். இதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் அந்த எதிர்ப்பை தேர்தல் கமிஷன் நிராகரித்தது.

தேர்தலில் பதிவான வாக்குகள் இரண்டு மணி நேரம் தாமதமாக எண்ணப்பட்டன. இதில் சிவசேனா சார்பாக போட்டியிட்ட சச்சின் அஹிர், ஆம்சயா பதாவி, தேசியவாத காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட ராம்ராஜே நிம்பல்கர், ஏக்நாத் கட்சே, பாஜக சார்பாக போட்டியிட்ட பிரவீன் தாரேகர், ராம் ஷிண்டே, ஸ்ரீகாந்த் பாரதியா, உமா கப்ரே, பிரசாத் லாட் ஆகியோர் வெற்றி பெற்றனர். காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட பாய் ஜக்தாப் மற்றும் சந்திரகாந்த் ஹண்டோரே ஆகியோரில் யார் வெற்றி பெறப்போகிறார் என்ற கேள்வி நள்ளிரவு வரை நீடித்தது. இதில் பாய் ஜக்தாப் இறுதியில் வெற்றிபெற்றார்.

பா.ஜ.க - சிவசேனா

இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 3 உறுப்பினர்கள் கட்சி மாறி வாக்களித்திருக்கின்றனர். காங்கிரஸ் கட்சிக்கு அவையில் 44 உறுப்பினர்கள் இருக்கின்றனர். ஆனால் 41 உறுப்பினர்கள்தான் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு முதல் முன்னுரிமை என்ற அடிப்படையில் வாக்களித்துள்ளனர். காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா போன்ற கட்சிகள் தங்களது கட்சி எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறி வாக்களித்து விடக்கூடாது என்பதில் குறியாக இருந்ததால் சுயேச்சை எம்.எல்.ஏ.க்களை தங்களது பக்கம் இழுப்பதில் கோட்டை விட்டனர். இத்தேர்தல் மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்நவிஸுக்கு கிடைத்த மற்றொரு வெற்றியாக கருதப்படுகிறது.

ஏற்கனவே சமீபத்தில் நடந்த ராஜ்ய சபைத்தேர்தலில் தேவேந்திர பட்நவிஸ் கூடுதலாக ஒரு வேட்பாளரை நிறுத்தி மூன்று பேரையும் வெற்றி பெறச்செய்தார். தற்போது சட்டமேலவை தேர்தலிலும் தேவேந்திர பட்நவிஸ் தனது செல்வாக்கை நிரூபித்து காட்டியிருக்கிறார். இத்தேர்தல் முடிவு அடுத்த சில மாதங்களில் நடக்கும் மும்பை மாநகராட்சி தேர்தலில் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க மீண்டும் சாதித்த தேவேந்திர பட்நவிஸ்: மகாராஷ்டிரா சட்டமேலவை தேர்தலில் பாஜக 5 இடங்களில் வெற்றி!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top